கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

அபாய விளக்குகள் - வன்னியில் ஊழல் - லஞ்சம் - முறைகேடுகள்

Tuesday, 28 February 2012

00 முன்னர் வன்னி மக்கள் இரத்தம் சிந்தும் அரசியற் சூழலில் தங்களின் வாழ்வை இழந்தனர். இப்போது அதே மக்கள் இரத்தத்தை உறிஞ்சும் அரச அதிகாரிகளின், ஒப்பந்தகாரரின் அதிகாரச் சூழலில் தங்களின் எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கின்றனர்.  00 முன்னர் வன்னி மக்கள் இரத்தம் சிந்தும் அரசியற் சூழலில் தங்களின் வாழ்வை இழந்தனர். இப்போது அதே மக்கள் இரத்தத்தை உறிஞ்சும்...

இலங்கை மீதான மேற்கின் சமகால அழுத்தங்கள்?

Saturday, 25 February 2012

00 ‘சிங்கங்கள் கர்ச்சிக்கலாம். ஆனால், குகையின் வாசல் மூடப்படாதிருக்க வேண்டும்’  நிலைமைகள் ஒரு திலூட்டும் திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல புதிர்த்தன்மைகள் நிறைந்தனவாகவே உள்ளன.  00 இலங்கையின் கீர்த்திக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஒரு நெருக்கடி நிலை – ஆபத்தான கண்டம் - உருவாகிக் கொண்டிருப்பதான தோற்றம் ஒன்றுண்டு. மனித உரிமை மீறல் மற்றும்...

மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும்

Thursday, 23 February 2012

மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை. என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே! 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார். அவர்...

இனப்பிரச்சினைக்கான தீர்வு?

Wednesday, 22 February 2012

இலங்கையின் இனப்பிரச்சினை போருக்குப் பிறகும் தொடர்கிறது. இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. புலிகள் இல்லாத சூழலிலும் தொடர்கிறது. தமிழ் இயக்கங்களின் கைகளில் ஆயுதங்கள் அற்ற நிலையிலும் தொடர்கிறது. சமாதானத்தை விரும்புகிறவர்கள்(?), அதற்காக முயற்சிப்பவர்கள்(?) என்று கூறுகின்றவர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது. வட்டமேசை மாநாடு, அனைத்துக்கட்சிக்குழு,...

கேள்விகளைச் சுமக்கும் பயணங்கள்

Monday, 20 February 2012

மக்களை மகிழ்ச்சிக் கடலில் பயணம் செய்ய வைப்பதற்காக ஒரு அமைச்சை உருவாக்கக் கூடிய சூழல், இலங்கை அரசாங்கத்தின் கட்டமைப்பில் எதிர்காலத்தில் உருவாகலாம் போலுள்ளது. அப்படி நடக்காது என்று மட்டும் கூறி விடாதீர்கள். ஏனென்றால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இரண்டு அமைச்சுகளை இந்த அரசாங்கம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. ஒன்று, மீள்குடியேற்ற...

உபாயமும் அதிகாரமும் - 03

Friday, 17 February 2012

தென்னாசியப் பிராந்தியத்தில் சிங்கள இராசதந்திரத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள். குறிப்பாக 'இந்தியா என்ற பென்னாம் பெரிய நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை தன்னுடைய இராசதந்திரத்தினாலேயே – உபாயத்தினாலேயே - தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதில் சிங்கள இராசதந்திரத்தின் சிறப்பைக் காணலாம்” என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது...

மனச்சாட்சியில் ஓட்டைகள்

Thursday, 16 February 2012

நேர்காணல் - ‘வீடற்றவன்’ என்ற ஒரு நாவலை மலையகத்தின் மூத்த எழுத்தாளராக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். இலங்கையின் மத்தியிலுள்ள மலையகப் பகுதியில் இருக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு வீடற்ற வாழ்க்கை என்பது நூற்றாண்டுகளின் நீள்துயரம். அவர்களுடைய வீடுகள் என்பது, லயங்களே. ஏறக்குறைய சேரிப்புற வாழ்க்கை நிலவரத்தை ஒத்த அமைப்பு இந்தக் குடிசைகள்....

எல்லைகடந்த அதிகாரம் = ஜனநாயக நெருக்கடி

Sunday, 5 February 2012

அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது. உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு. இலங்கை அரசியலில் தமிழ், சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின்...

இலங்கையில் இந்தியாவும் சீனாவும்

Sunday, 5 February 2012

இலங்கையில் இந்தியா. இலங்கையில் இன்று இந்தியா. இலங்கையில் சீனா. இலங்கையில் இன்று சீனா. இலங்கையில் (இன்று) இந்தியாவும் சீனாவும். இவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்தால், இலங்கையின் உள்நாட்டு அரசியலையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும். இதன்மூலம்...
 

2009 ·. by TNB