கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் இலங்கை

Sunday 3 June 2012





இலங்கை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்பதையும் விட இலங்கையர்கள் இப்போது சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே சரியாகும். அதாவது ஒரு நிழல் யுத்தத்திற்குள் இலங்கை மக்கள் சிக்கியிருக்கிறார்கள். இது வல்லரசுகள் இலங்கை மீது மேற்கொள்ளும் நிழல் யுத்தம். இந்த யுத்தம் பொறிகளால் ஆனது.

ராசதந்திரப் பொறிகள். பொருளாதாரப் பொறிகள். அரசியல் தலையீட்டுப் பொறிகள். இவை எல்லாற்றையும் இணைத்துள்ள வல்லாதிக்கப் பொறிகள் என்ற பல பொறிகளுக்குள் இலங்கைத்தீவின் மக்கள் வசமாகச் சிக்கியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு வலையமைப்பை ஒத்த பொறிகளாக இவை உள்ளன.

ஒவ்வொரு பொறியும் ஒவ்வொரு கண்ணிவெடியைப் போன்றன. ஆனால், இந்தப் பொறிகள் சாதாரண கண்ணிவெடிகளைப் போல சிறியவை அல்ல. கண்ணுக்குப் புலப்படக் கூடியவையும் அல்ல. ஆகவே, இலகுவில் அகற்றப்படக் கூடியவையும் அல்ல. இவை மாபெரும் கண்ணிகள். நாட்டையே பலியெடுக்கும் கண்ணிகள். அரசாங்கத்தையே தின்று தீர்க்கக்கூடிய அபாயக் கண்ணிகள். அப்படியே மக்களையுந் தின்றுவிடக் கூடியவை.

நுட்பத்தினாலும் விவேகத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் நாட்டைக்குறித்த,  மக்களைக்குறித்த, எதிர்காலத்தைக் குறித்த சிந்தனை அலகினாலும் மட்டுமே இந்தக் கண்ணிகளை அகற்ற முடியும். இதற்கு அரசாங்கம் மட்டும் போதாது, நாட்டைக்குறித்து, மக்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரும் செயற்பட வேணும்.

ஆனால், மக்களை மிக இலகுவில் தனியாக எடுத்துப் பின்தள்ளி விட்டு, அரசாங்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, அதனுடைய தவறுகளையும் குற்றங்களையும் பிரதானப் படுத்தி, அதற்குத் தண்டனை அளிப்பதாக ஒரு தோற்றத்தைக் காண்பித்து உள்விவகாரங்களில் இந்த ஆதிக்கச் சக்திகள் தலையிடுகின்றன. அரசாங்கத்துக்கும் பிற தரப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கி அல்லது இருக்கின்ற முரண்பாடுகளை பெரும்பிம்பமாக்கி இந்தக் காரியத்தைச் சாதிக்கின்றது மேற்குலகம்.

இதற்கு ஏஜென்டுகளாக அது உள்ளுரில் உள்ள அரசியற் சக்திகளையும் புத்திஜீவிகளையும் சில ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் மதபீடத்தினரையும் பயன்படுத்துகின்றது.

இதற்கான வாய்;ப்புகளை அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொடுக்கின்றனர். முன்னர் ஈராக்கில், கியூபாவில் நடந்ததெல்லாம் இதுதான். ஜனநாயக நெருக்கடிகள், மனித உரிமை மீறல்கள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் அங்கே நடக்கின்றன என்று சொல்லி, அவற்றைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கை என்ற பேரில் வெளியார் நுழைவுகள் நடக்கின்றன.

அதாவது, தாம் பயன்படுத்தும் இந்தப் பொறிகளுக்கான ஆயுதமாக ஜனநாயக நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்குலகம் கையாள்கிறது. அண்மைய உலக அரசியலானது, மனித உரிமைகள் விவகாரத்தைச் சாட்டாக வைத்தே கையாளப்படுகின்றது. இந்த ஆயுதத்தை மிக நுட்பமாகவும் பகிரங்கமாகவும் மேற்குப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு அது சாதகமாக ஐக்கிய நாடுகள் சபையைப் பயன்படுத்துகிறது.

சர்வதேச சமூகம் என்ற பெருந்திரையில் வரையப்பட்டிருக்கும் அமெரிக்க – மேற்குலக - முகமே இன்று இந்தப் பொறிகளின் பிரதான நாயகன். இன்னொரு பக்கத்தில் துணைப் பாத்திரத்தை வகிக்கும் இந்தியா தன் பங்கிற்கும் சில பொறிகளை சிறிதும் பெரிதுமாக வைத்திருக்கிறது. வில்லனைப்போலச் சித்திரிக்கப்படும் சீனா இன்னொரு பக்கத்தில் தன்னுடைய பொறிகளை வைத்துள்ளது. ஆக, எல்லாத்தரப்புமே பொறிகளுடன்தான் நிற்கின்றன.

எல்லோருக்கும் அவரவர் நலன்களே முக்கியம். அதற்காகவே அவர்களுடைய அரசியல்இ பொருளாதார, ராஜதந்திர, மனித உரிமைகளின் அளவுகோல்கள் அமைந்துள்ளன. அரவணைப்பும் புறக்கணிப்பும் கூட இந்த அளவுகோல்களின் பாற்பட்டே அமைகின்றன.

இந்த அளவு கோல்களால்தான் இலங்கை இன்று அளக்கப்படுகிறது. இலங்கை மட்டுமல்ல உலகமே இவற்றாற்தான் அளக்கப்படுகிறது. ஆக, ஒரு வித்தியாசம், பிற பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்திய சக்திகள் சிலவேளை துணைப் பாத்திரமேற்கின்றன. இலங்கைக்கு இந்தியாவைப் போல.

ஆகவே பொறிகளால் சூழப்பட்டிருக்கும் இலங்கையின் இன்றைய நிலைமை எப்படி உள்ளது? அதனுடைய எதிர்காலம் எப்படி அமைகிறது? என்று சிந்திப்பதே இந்தப் பத்தியின் நோக்கம்.

உலகப் பொருளாதார இயக்கப்போட்டி மீண்டும் உச்சகட்டத்துக்கு வந்துள்ளது. கி.பி 1500 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய கண்டங்களை விட்டுப் பொருளாதாரத் தேவைகளுக்காகப் பிற கண்டங்களை நோக்கிப் பயணித்தது போலஇ பிற கண்டங்களிலுள்ள நாடுகளை ஆக்கிரமித்ததைப்போல இன்று வல்லரசுகள் பொருளாதார – அரசியல் ஆதிக்கப் போட்டியில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. ஆனால் வெளிப்படையாகப் பிடிகொடுக்காமல் மிகத் தந்திரமாக, நாகரீகமாக(?). இந்த நாகரீகத்துக்குப் போடப்படும் கவசமே – மேலாடையே - மனித உரிமைகள் என்ற திரை. இதைச் சீனா போன்ற இரண்டாவது அணியினர் இன்னும் கையாளவில்லை.

ஆகவேஇ இத்தகைய செயற் பின்னணியில் இலங்கை இன்று மிகச் சிக்கலான ஒரு நிலைக்குட்பட்டிருக்கிறது@ பொறிகளால் சூழப்பட்டிருக்கிறது.

வெளியே பெரும் பொறிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் சூழலில் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதற்கு வாய்ப்பாக இலங்கையர்கள் தங்களுக்குள் முரண்பட்டுப் பிரிந்திருக்கிறார்கள். ஒரு நிழல் யுத்தத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணராமல் தங்களுக்குள் இன, மத ரீதியான நிழல் யுத்தங்களை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ‘ஊர் இரண்டு பட்டிருந்தால் வெளியாளுக்குக் கொண்டாடம்’ என்று சொல்வார்கள். அதுவே இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது. தங்களின் தலைகளில் ஒவ்வொருவரும் தீயை மூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்திருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிந்திருக்கிறார்கள். முஸ்லிம்களும் சிங்களவர்களும் பிரிந்திருக்கிறார்கள். மக்களும் அரசும் பிரிந்திருக்கின்றன. தனக்குப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது என்று சொல்லும் அரசு அந்த மக்களைவிட்டுத் தொலைவிவேயே உள்ளது.

அரசின் மீதான அதிருப்தி காரணமாக வெளித்தரப்பை நம்பியிருக்கின்றன பல அணிகள். இந்தத் தரப்புகளின் பிரிவும் ஒன்றாக உள்ளது. இப்படியே ஏராளம் பிரிவுகள் வெளித்தரப்புகளுக்கு வாய்ப்புகளையும் சாதகங்களையும் வழங்கிக் கொண்டுள்ளன.

அமைதியற்றுஇ யுத்தத்திலும் அழிவிலும் நிம்மதியின்மையிலும் சிக்கியிருந்த இலங்கையை சமாதானம்இ அமைதி, யுத்த முடிவு என்ற பொறிகளை வைத்துப் பிடித்தது வெளித்தரப்பு.

அதாவது, இலங்கையின் நெருக்கடிகளுக்குப் பிரதான காரணம் புலிகளும் அவர்களுடைய நடவடிக்கைகளுமே என்று பலரையும் நம்பவைத்த இந்தத் தரப்புகள், புலிகளை அழிப்பதற்கு உதவுவதாகக் கூறி இலங்கையுடன் நெருக்கமாகிக் கொண்டன.

இதில் அவை இரண்டு வகையான உத்திகளைப் பிரயோகித்தன.

1. புலிகளை அழிப்பதற்கு ஆயுத உதவி மற்றும் படைத்துறை உதவிகளைச் செய்தன. கூடவே அரசியல் ரீதியாகவும் ராசதந்திர ரீதியாகவும் அரசாங்கத்துக்கு இயைபாக நடந்தன. இதன்மூலம் இலங்கை அரசைத் தமக்கு நெருக்கமாகக் கொண்டு வர முயற்சித்தன.

2. புலிகளை அழிப்பதற்கு உதவிக்கொண்டே – போருக்கு உதவிக் கொண்டே - போர்க்குற்றங்களுக்குத் தூண்டின. பின்னர்இ இந்தப் போர்க்குற்றங்களையே தமக்கான பிடியாக வைத்துக் கொள்வதற்காக இந்த உபாயத்தை அவை கையாண்டன.

இப்பொழுது இந்த உபாயங்களின் வழியாகவே இலங்கையைச் சுற்றி வளைத்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன இந்தத் தரப்புகள்.

ஆனால், இதைக் குறித்த தெளிவு இலங்கையர்களுக்குப் பொதுவாக இல்லை.

இலங்கையின் பொது வெளி என்பது உளவியற் சிக்கல்களாலும் அவநம்பிக்கையாலும் முரண்பாடுகளாலும் நிரம்பியுள்ளது. இனமுரண், மத வேறுபாடுகள் என்பவற்றின் வழியாக விளைந்திருக்கும் வரலாற்று ரீதியான நெருக்கடிகள் இத்தகைய உளவியற் சிக்கல்களையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளன.

இதுவே ஆதிக்கச் சக்திகளுக்குத் தேவையாது.
உதாரணமாக, மேற்குச் சார்ப்பான வெளிநாடுகளின் அரச பிரதிநிதிகள் பெரும்பாலும் தமிழ் அரசியற் தரப்புகளைத் தொடர்ச்சியாகச் சந்திக்கின்றனர். அதைப்போல, தவறாமல் தமிழ்ப்பகுதிகளில் உள்ள கிறிஸ்தவப் பாதிரிமாரையும் ஆயர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர்.

இதன்மூலம் சிங்கள பௌத்தத்துறவிகளை முக்கியத்துவமற்றவர்களாக்கி, அவர்களை ஒரு தீவிர நிலையை நோக்கித் தள்ளவே இவர்கள் விரும்புகின்றனர். சிங்களத் துறவிகள் புறக்கணிப்பதாகக் காட்டப்படும் அதேவேளை சிங்கள பௌத்தத் துறவிகளல்லாத பிற மதகுருமாரை முன்னிலைப்படுத்தும் ஒரு தோற்றப்பாட்டின் மூலம் முரண்பாட்டையும் எதிர் நிலைகளையும் வலுவாக்கி விடுகின்றன வெளித்தரப்புகள்.

இதுவே இன்று நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்த்தரப்பு வெளிச்சக்திகளை அதிகம் நம்புகிறது. தமிழ்த்தரப்பு வெளிச்சக்திகளின் மீது – மேற்கின்மீது நெருக்கத்தை அதிகரிக்கும்போது சிங்களத்தரப்பு இதை முற்றாகவே எதிர்க்கிறது. இத்தகைய முரண் வளர்ச்சியை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறது மேற்கு.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தமது நியாயப்பாடுகளை விவாதிப்பதற்கான அகப் புற நிலைமைகளை இந்தப் பொறிமுறையில் வெளிச்சக்திகள் உருவாக்கி வைத்திருப்பதுதான்.
இப்படி வெளிச்சக்திகளை எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டுவது எவ்வளவு பொருத்தமானது என்று நீங்கள் கேட்கலாம்.

அவ்வாறெனில் இந்த வெளிச்சக்திகள் இலங்கைத்தீவின் சமாதானத்துக்காக முழு அர்ப்பணிப்போடும் பொருத்தமான செயல்முறைகளோடும் செயலாற்ற முன்வந்தனவா? இப்போது கூட இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் எண்ணம் இவற்றுக்கு உண்டா? அவ்வாறாயின் இவற்றின் செயற்றிட்டங்கள் என்ன? அதை எப்படி அவை முன்மொழிகின்றன? என்ற கேள்விகளை நாம் பகிரங்கமாக முன்வைக்க முடியும்.

அமைதிக்கும் சமாதானத்துக்கும் புலிகளே தடை நிலைக்குரிய ஒரு சக்தி எனில் புலிகளற்ற இந்த மூன்று ஆண்டுகளில் வெளித்தரப்பின் - சர்வதேச சமூகத்தின் சமாதானத்தின் அர்ப்பணிப்பு எத்தகையது? அதன் எடை என்ன? அதனுடைய பெறுமதி என்ன?

ஆகவேஇ இலங்கைச் சமூகங்களிடையே உளவியற் சிக்கல்களையும் அவநம்பிக்கையையும் உருவாக்கிஇ அதன் மூலம் இடைவெளிகளை உருவாக்கிஇ அந்த இடைவெளிகளில் தங்களின் கால்களை இறக்கி விடவே இவை முயற்சிக்கின்றன என்பது நிரூபணமாகிறது.

ஆகவே, இந்தப் பொறியில் உளவியற் சிக்கல்களும் அவநம்பிக்கையும் நாட்டைப் பிசாசைப்போலப் பீடித்திருக்கிறது. இதனால், மத பீடங்கள் அரசியல் மன்றங்களாகி விட்டன. மதத்தலைவர்கள் கத்திகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு அரசியல்வாதிகளைப் போல அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

சனங்களின் கழுத்தில் அரசாங்கமும் சுருக்குக் கயிற்றை மாட்டுகிறது. சர்வதேச சமூகமும் சுருக்கை மாட்டுகிறது. உள்ளுர்ப்பிரமுகர்களும் சுருக்கிடுகிறார்கள். ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கம் பலவீனப்படப்பட அது மேலும் தீவிர நிலையில் இறுக்கங்களையே உருவாக்கும். இதுவே தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இயல்பான நிலைமைகளில்தான் இயல்பாக அரசும் நாடும் இருக்கும். இயல்பற்ற நிலைகளில் பதற்றமும் குழப்பங்களும்தான் மிஞ்சும். இன்று மிஞ்சியிருப்பது பதற்றங்களும் குழப்பங்களுமே. அதாவது, யுத்தகாலத்தை ஒத்த நிலைமை. பொறிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் நாடு வேறு எப்படி இருக்கும் என இப்போது நீங்கள் கேட்கிறீர்கள். இது உண்மைதான்.

இந்த நிலையில் நாட்டின் சித்திரம் எப்படியிருக்கும் என்று அதிகம் சொல்லத்தேவையில்லை. பலவீனங்களின் பின்னலில் அது முழுதாகவே சிக்கியிருக்கிறது. எனவேதான் நாட்டில் எத்தகைய பிரச்சினைகளுக்கும் எத்தகைய தீர்வையும் காணமுடியவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொருளதார நெருக்கடிகளுக்கான தீர்வு, ஜனநாயக அச்சுறுத்தலுக்கான தீர்வு, வெளிநாடுகளுடனான உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான தீர்வு, உள்ளுரில் காணப்படும் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வு என எதற்கும் எத்தகைய தீர்வையும் காணமுடியாமல் இலங்கை தத்தளித்துக் கொண்டுள்ளது.

இலங்கையின் இன்றைய நிலையைக் குறித்துச் சிந்திப்பதற்கு ஒரு ஆளுமை மிக்க தலைமைச் சக்தி உருவாக வேண்டும். வரலாற்றை முன்னகர்த்தக் கூடிய ஆளுமையாக, ஆற்றலாக அந்தச் சக்தி இருக்க வேண்டும். மக்களைக் குறித்தும் நாட்டைக்குறித்தும் யதார்த்தத்தைக் குறித்தும் சிந்திக்கும் ஒரு அரசியல் இயக்கமே இதற்கு அவசியமானது.

ஆனால், இவை எதுவும் இலங்கை அரசியலில் இல்லை. இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல, அரசியல் வெளிக்கு அப்பால் சமூக வெளியிலும் இல்லை. ஒரு நல்ல மதத்துறவி போதும் மாற்றங்களை உருவாக்குவதற்கு. ஒரு சமூக அக்கறையுள்ள கலைஞர் போதும் வரலாற்றைப் புதிய விதமாகப் படைப்பதற்கு. அர்ப்பணிப்பும் மக்கள் நேசிப்பும் உள்ள ஒரு நல்ல அமைப்புப் போதும் நெருக்கடிகளிலிருந்து மக்களையும் நாட்டையும் விடுவிப்பதற்கு.

கூரிய நுண்ணுணர்வும் அர்ப்பணிப்பும் நேர்மையும் அறிவாற்றலும் துணிச்சலும் பொதுமைப்பட்ட விரிந்த சிந்தனையும் உடைய எவரும் இந்த நெருக்கடி நிலையை மாற்றி விட முடியும்.

வரலாறு சிலவேளை அத்தகைய மனிதர்களை அல்லது அமைப்புகளை ஒரு சூழலுக்குப் பரிசளிப்பதுண்டு. ஆனால் , இலங்கை இந்த விசயத்தில் இன்னும் மலட்டுத்தன்மையோடே உள்ளது.

பதிலாக இலங்கையில் மூடர்களின் சாம்ராஜ்ஜியமே எல்லா இடங்களிலும் விரிகின்றது. எல்லோரும் இந்த நாட்டின் சக்கரவர்த்திகள் என்று நினைத்துக் கொண்டு அவரவர் குட்டிக் குட்டி ராஜாங்கம் செய்கிறார்கள். மதவாதிகளுக்கு ஒரு ராஜாங்கம். பத்திரிகையாளர்களுக்கு ஒரு ராஜாங்கம். அரசியல்வாதிகளுக்கு ஒரு ராஜாங்கம். ஆய்வாளர்களுக்கு ஒரு ராஜாங்கம்...

சலிப்பூட்டும் வரலாற்றில் தலைகளை விலையாகக் கொடுத்துக்கொண்டு சுவாரஷ்யமாக அரசியல் விவாதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதில் என்னதான் லாபங்கள்? மனச்சாட்சிக்கும் அறிவுக்குமிடையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு சிந்தனையாளனின் எண்ணங்களுக்கு வேறு என்ன அர்த்தமுண்டு?

00

















0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB