கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

நிரந்தரப் படைமுகாம்கள்

Friday, 30 December 2011

00 இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் அதிக செல்வாக்கைச் செலுத்துவது அச்சத்தின் காரணமாக உருவாகும் ஒருவகை உளவியலே. இதற்காகவே அது அதிக நிதி ஒதுக்கீட்டையும் மனிதவளப்பயன்பாட்டையும் பாதுகாப்புக்கெனக் கோருகிறது. தற்போது வடக்குக் கிழக்கில் நிரந்தரப் படைமுகாம்களை அமைப்பதற்காக அரசு தீர்மானித்திருப்பதும் அதற்காகத் தனியாகவே நிதி ஒதுக்கீட்டைச் செய்திருப்பதும் இத்தகைய...

அரசு – தமிழ்த்தரப்பு என்ற பேச்சு முறைமை மாற்றப்பட வேண்டும்.

Tuesday, 27 December 2011

00 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது சோதனைக் காலம். ‘குருவியின் தலையிற் பனம்பழத்தை வைத்ததைப் போல’ என்று ஊர்மொழியிற் சொல்வார்கள். அதேநிலையில் இப்பொழுது கூட்டமைப்பு இருக்கிறது. நெருக்கடிகளின் மேல் நெருக்கடிகள். அழுத்தங்களின் மேல் அழுத்தங்கள். உள் அழுத்தங்கள், வெளி அழுத்தங்கள் என பலமுனை நெருக்குவாரங்கள். இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப்போகிறது கூட்டமைப்பு?...

ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும்

Thursday, 22 December 2011

வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடமே என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு...

அரசியல் வீழ்ச்சியின் விளைவு - அபாய வலயத்தில் மக்கள்

Wednesday, 21 December 2011

அது ஒரு நண்பகல். வன்னியில் தருமபுரம் என்ற கிராமத்தின் புழுதி பறக்கும் தெருக்கரையில் மூன்று பெண்கள் பஸ்ஸ_க்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணுடன் அவருடைய எட்டு வயதுப் பிள்ளை ஒன்றும் நின்றது. அவர்கள் போகவிருந்த இடம் காலியிலுள்ள பூஸா. அங்கேதான் அவர்களுடைய உறவினர்களான ‘முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள்’ என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து...

இலங்கையின் பிம்பக் கலாசாரம்

Monday, 19 December 2011

தெற்கிலே அதிவேக நெடுஞ்சாலையைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திறந்து வைத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இலங்கையின் வரலாற்றிலே முதல் அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சரித்திரம் தன்னுடைய பொன்னெழுத்துகளால் இந்தச் சம்பவத்தைப் பொறித்துக் கொண்டுள்ளது. புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சாலையில் 100 கிலோ மீற்றர் வேகத்துக்குக் குறைவாக வாகனங்கள் ஓட்டப்படுமானால் தண்டம் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக நெடுஞ்சாலைகளில்...

பலவீனமான எதிர்க்கட்சி - நெருக்கடிக்குள் யூஎன்பி.

Sunday, 18 December 2011

'ஊடகவியலாளர்களுக்கு வெள்ளைவான்களை வழங்குங்கள்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார். ரணிலின் இந்தக் கூற்று அதிர்ச்சிகரமான ஒன்றாகும். கொந்தளிக்கும் உணர்ச்சிகரமான ஒரு விடயமாக ஊடகவியலாளர்கள் குறித்த பிரச்சினைகள் இருக்கும்போது இவ்வாறான ஒரு வலுவான அபிப்பிராயம் நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தும். அவருடைய...

உபாயமும் அதிகாரமும் - 01

Friday, 16 December 2011

இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்களைக் குறித்து ஆய்வாளரான நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ‘உபாயமும் அதிகாரமும்’ என்பதைப் பற்றிச் சொன்னார். அதிலும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியற் போராட்டங்களில் ‘உபாயமில்லாத அரசியலே’ நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நண்பர் குறிப்பிட்டார். நண்பரின் கூற்றுப் பெருமளவுக்கும் நிராகரிக்க முடியாதது. உபாயங்கள்...

test

Wednesday, 26 October 2011

...
 

2009 ·. by TNB