கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை.

Monday, 28 May 2012

நேர்காணல் - ஸகசதுல்ல ஜதூரோஸ். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஸகசதுல்ல ஜதூரோஸ். ஜதுரோஸ_க்கு வயது 60. இப்போது புத்தளம் வாசி.  ஆனால், அவருடைய நினைவும் கனவும் யாழ்ப்பாணத்தில்தான். 1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்களில் ஸகசதுல்ல ஜதூரோஸின் குடும்பமும் ஒன்று.  நீண்டகால அகதி வாழ்க்கை – பின்னர்...

இனப்பிரச்சினைக்கான தீர்வு?

Sunday, 27 May 2012

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாதை எது? அதனுடைய பயணம் எந்த இலக்கை நோக்கியது? என்ற கேள்விகள் இன்று தீவிர நிலையில் அதனுடைய ஆதரவாளர்கள் மட்டத்திலேயே எழுந்துள்ளன. இதனால், கூட்டமைப்பைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை கூட்டமைப்பை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று கடுமையாகப் பாடுபடும் போக்கும் தீவிரமாக உள்ளது. ஆனால்,...

‘புத்திமான் பலவான்’

Saturday, 26 May 2012

அடிப்படைகளை உருவாக்க முடியாத எத்தகைய செயல்களும் நல்விளைவுகளைத் தரவே மாட்டாது. குழப்பம், முரண்பாடு, தெளிவற்ற நிலை, உறுதியின்மை, செயற்றினில் போதாமை, நேர்மையீனம், அர்ப்பணிப்பின்மை, அல்லது அதிதீவிரம், மேலாதிக்கப்போக்கு, யதார்த்தத்தைக் கடந்த கற்பனாவாதம் போன்ற குறைபாடுகளின் மத்தியில் அல்லது இவற்றை வைத்துக் கொண்டு எந்தச் சிறு நன்மையையும் பெற முடியாது. ஈழத்தமிழர்களின்...

உபாயமும் அதிகாரமும் - 03

Friday, 25 May 2012

உபாயமும் அதிகாரமும் என்ற கட்டுரையின் இறுதிப் பகுதி இது. இலங்கையின் சமகால அரசியலை மையப்படுத்தி எழுதப்பட்டது. குறிப்பாக தமிழரின் அரசியலை மையப்படுத்தி. விரிவான இந்த விடயம் பற்றி விரிவாக ஆராயப்படவும் விவாதிக்கப்படவும் வேணும். “தென்னாசியப் பிராந்தியத்தில் சிங்கள இராசதந்திரத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள். குறிப்பாக இந்தியா என்ற பென்னாம் பெரிய...

சுற்றி வளைப்புக்குள் சிக்குண்ட தரப்பு

Thursday, 24 May 2012

பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தீர்வை முன்வைக்காததால் கூட்டமைப்புத் தப்பிப் பிழைத்தது. தீர்வை அரசாங்கம் முன்வைத்திருந்தால் அதை ஆதரிப்பதா இல்லையா என்ற விவாதத்தில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும். இது கூட்டமைப்பினுள் சிலவேளை முரண்களை உருவாக்கயிருக்கும். ஆனால், துரதிருஸ்ரவசமாக அரசாங்கமும் தீர்வெதையும் முன்வைக்கவில்லை. அப்படி அது தீர்வை முன்வைத்திருந்தால்...

வன்னியில் பல்கலைக் கழக பீடங்கள் - யாழ்ப்பாணச் சமூகம் அனுமதிக்குமா?

Monday, 14 May 2012

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால்,...

இலங்கை அரசியல் அரங்கில் நகர்த்தப்படும் காய்கள்

Friday, 11 May 2012

இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய...
 

2009 ·. by TNB