இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் திருப்தியளிக்கும் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அடித்துச் சொல்கிறது. ஆனால், அரசாங்கத்துக்கு அப்பாலான அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பாக மாற்று அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.
யுத்தத்துக்குப் பிந்திய இலங்கையை அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க பணியை யாருமே செய்யவில்லை. எந்தத்தரப்பும் இதற்காக அர்ப்பணிப்போடு செயற்பட வில்லை.
ஆகவே இனவாதக் கட்சிகளும் அதை ஊக்குவிக்கின்ற தலைவர்களும் மீண்டும் பலமடைந்து விட்டனர்.
இத்தகைய நிலைமையைத்தான் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் ஊக்குவிக்கின்றன. அல்லது தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.
இலங்கையர்களாக இருப்போருக்கு இது மிகக் கவலை தருகின்ற ஒரு விசயமே.
வாழ்க்கையை இந்தக் களத்தினுள்ளே வைத்திருப்போருக்கு இத்தகைய நிலை மிகக் கவலைககுரிய ஒன்று.
ஆனால் தனியாட்களால் இவற்றை மாற்றமுறச் செய்வது மிகக் கடினமானது. ஆனால் அவர்களால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மிகமிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ள நிலையே இன்றைய யதார்த்தம்.
ஆனால் சனங்கள் இவற்றினால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு இந்தத் தரப்புகளின் போதையுட்டல்கள் தேவைப்படுகின்றன.
இத்தகைய ஒரு நெருக்கடிக்குள்தான் மாற்றுச் சிந்தனையைக் குறித்து யாரும் சிந்திக்க முடியும்.
எனவே இதைக்குறித்து இந்தப் பக்கத்தில் தொடர்நது எழுதி வரும் பக்கங்கள் விவாதங்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.
இந்த விவாதங்களிலும் முன் வைப்புகளிலும் உங்களுக்கும் பொறுப்பும் பங்கும் உண்டு.
எழுதுங்கள்.
யுத்தத்துக்குப் பிந்திய இலங்கையை அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க பணியை யாருமே செய்யவில்லை. எந்தத்தரப்பும் இதற்காக அர்ப்பணிப்போடு செயற்பட வில்லை.
ஆகவே இனவாதக் கட்சிகளும் அதை ஊக்குவிக்கின்ற தலைவர்களும் மீண்டும் பலமடைந்து விட்டனர்.
இத்தகைய நிலைமையைத்தான் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் ஊக்குவிக்கின்றன. அல்லது தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.
இலங்கையர்களாக இருப்போருக்கு இது மிகக் கவலை தருகின்ற ஒரு விசயமே.
வாழ்க்கையை இந்தக் களத்தினுள்ளே வைத்திருப்போருக்கு இத்தகைய நிலை மிகக் கவலைககுரிய ஒன்று.
ஆனால் தனியாட்களால் இவற்றை மாற்றமுறச் செய்வது மிகக் கடினமானது. ஆனால் அவர்களால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மிகமிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ள நிலையே இன்றைய யதார்த்தம்.
ஆனால் சனங்கள் இவற்றினால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு இந்தத் தரப்புகளின் போதையுட்டல்கள் தேவைப்படுகின்றன.
இத்தகைய ஒரு நெருக்கடிக்குள்தான் மாற்றுச் சிந்தனையைக் குறித்து யாரும் சிந்திக்க முடியும்.
எனவே இதைக்குறித்து இந்தப் பக்கத்தில் தொடர்நது எழுதி வரும் பக்கங்கள் விவாதங்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.
இந்த விவாதங்களிலும் முன் வைப்புகளிலும் உங்களுக்கும் பொறுப்பும் பங்கும் உண்டு.
எழுதுங்கள்.
0 comments:
Post a Comment