நாலு பக்கத்தைச் சில நாட்களாக பதிவிட முடியாமற் போய் விட்டது. இதன் மூலம் வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு பொறுப்போடு மன்னிக்க வேண்டுகிறேன். இனித் தொடர்ந்து பதிவிடப்படும். பேசப்படும் விசயங்கள் குறித்து நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். பேசவேண்டியவை குறித்தும் கூறுங்கள். சாத்தியமானதை, தெரிந்து கொள்ள முடிந்ததை எழுதலாம்.
பதிவுகளின் முறையை மாற்றலாமா என்று ஒரு யோசினையும் உண்டு. உரையாடல், தகவல் பரிமாறல் என்ற வகையில் புதிய பதிவுகளைச் செய்யலாமா என்று சிந்திக்கிறேன். சாத்தியமானால் அப்படி முயற்சிக்கலாம்.
சிலவேளை குறுந்தகவல்களாகவும் சில பதிவுகளைச் செய்யலாம் என்ற எண்ணமுண்டு. இது உங்களை மேலும் சிந்திக்கத் தூண்டும்.
பல நண்பர்களுடைய அபிப்பிராயங்களை மனதிற் கொண்டு இந்த மாதிரியான ஒரு அணுகுமுறைக்கும் செயல்முறைக்கும் தயாராகியிருக்கிறேன். இது ஒரு முயற்சிதான்.
சரி பிழைகள், வெற்றி தோல்விகள், போதாமைகள், நிறைவுகள் என இருக்க வாய்ப்புண்டு. அதையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
நன்றியுடன்,
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
0 comments:
Post a Comment