<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404</id><updated>2012-02-26T07:26:32.646-08:00</updated><category term='பத்தி'/><category term='அரசியல்'/><title type='text'>.</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>27</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-7215695783315744587</id><published>2012-02-25T21:29:00.001-08:00</published><updated>2012-02-25T21:30:02.517-08:00</updated><title type='text'>இலங்கை மீதான மேற்கின் சமகால அழுத்தங்கள்?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-icNk7fjjEKc/T0nDFkmtohI/AAAAAAAAAM0/9GFT4VF7CQQ/s1600/images+(62).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-icNk7fjjEKc/T0nDFkmtohI/AAAAAAAAAM0/9GFT4VF7CQQ/s1600/images+(62).jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;"&gt;00&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;"&gt;‘சிங்கங்கள் கர்ச்சிக்கலாம். ஆனால், குகையின் வாசல் மூடப்படாதிருக்க வேண்டும்’&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;"&gt;நிலைமைகள் ஒரு திலூட்டும் திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல புதிர்த்தன்மைகள் நிறைந்தனவாகவே உள்ளன.&amp;nbsp;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span style="line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் கீர்த்திக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஒரு நெருக்கடி நிலை – ஆபத்தான கண்டம் - உருவாகிக் கொண்டிருப்பதான தோற்றம் ஒன்றுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு நிலைமையை நோக்கி, இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான அணி எடுத்து வரும் முயற்சிகளே மேற்கூறிய நெருக்கடிக்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அணி எதற்காக இந்தத் தீவிர அழுத்தத்தை இலங்கைக்கு – மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்குக் கொடுக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையைத் தனது காலுக்குக் கீழே கொண்டு வருவதே இதன் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜபக்ஷ அரசாங்கம் அதிகம் மேற்கிலிருந்து விலகி, சீனா, ஈரான், பாகிஸ்தான், கியூபா, சிரியா, லிபியா, ரஷ்யா மற்றும் இந்தியா சார்பான அணியைத் தன்னுடைய உறவிலும் நெருக்கத்திலும் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதற்குப் பிறகு இந்த நாடுகளுடன் அவர் கொண்டுள்ள, காட்டிக் கொண்ட உறவைத் தொடர்ச்சியாக அவதானித்தவர்கள் இதை இலகுவாகவே விளங்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளே அதிகமான முதலீடுகளையும் உதவித்திட்டங்களையும் அண்மைய காலத்தில் இலங்கையில் மேற்கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வர்த்தகம், &amp;nbsp;தொழிற்றுறை, பாதுகாப்பு போன்ற விசயங்களில் அதிகமான உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டிருக்கும் தரப்புகளும் சமகால இலங்கையில் இந்த அணியே.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்துக்குப் பிறகு இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் அணி ஏறக்குறைய பின்தள்ளப்பட்டிருப்பது போன்றதொரு நிலையே காணப்படுகிறது. இதை இந்த அணி நன்றாகவே உணர்ந்துமுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதை இந்த அணியினால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் அது இலங்கையில் தனக்கு வாய்ப்பான ஒரு தரப்பை ஆட்சியில் அமர்த்த முயன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான தெரிவே முன்னாள் ராணுவத்தளபதியான சரத் பொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த ராஜபக்ஷ ஒரு போதுமே மேற்குக்குச் சார்பாக வரமாட்டார் என்று தெரிந்து கொண்ட மேற்கு சரத்தைத் தெரிவு செய்தது. சரத்தை விட வேறு கவர்ச்சிகரமான தெரிவுகள் இல்லாத நிலையிலேயே மேற்கு இந்த முடிவுக்கு வந்தது. ரணில் மேற்கின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய கவர்ச்சிகரமான தலைவர் என்ற தகுதியை இழந்து விட்டார். யு.என்.பியில் வேறு தெரிவுகளும் இல்லை. எனவேதான் சரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் அரசியலானது உணர்ச்சி மயப்பட்டது. அது உணர்ச்சியின் மையத்திலேயே கட்டப்பட்டது. யுத்தத்தின் வெற்றியை அரசியல் முதலீடாக்கும் ஒரு அணுகுமுறையை மகிந்த ராஜபக்ஷ கையாண்டபோது அதற்குப் பொருத்தமான – மாற்றான - அந்த உணர்ச்சிக்குச் சமனிலை வலுவைப் பெறக்கூடிய தெரிவாக சரத் பொன்சேகாவே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் புரிந்து கொண்ட மேற்குலகம் யுத்த வெற்றியில் பங்காளியும் யுத்தக் கதாநாயகர்களில் ஒருவருமாகிய சரத் பொன்சேகாவை தெரிவு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மேற்கு எதிர்பார்த்தவாறு சரத்தை வெற்றி பெறவைக்க முடியவில்லை. சரத்தும் தன்னுடைய வெற்றிக்கான தகுதியை நிரூபிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே வெற்றியடைந்த மகிந்த ராஜபக்ஷ மேற்கை மேலும் விலக்கினார். அவருக்கு எதிராகவே உள்வீட்டிலிருந்து ஒருவரை உருவியெடுத்த அமெரிக்காவின் தந்திரத்தை அவரால் எப்படி மன்னிக்க முடியும்? எப்படி மறக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், யுத்தத்தை நடத்துவதற்கான மைய உதவிகளைச் செய்த அமெரிக்கா, இப்போது யுத்த வெற்றியைப் பெற்ற பின்னர் இலங்கையானது தன்னைக் கைகழுவி விடுவதை அனுமதிக்கத் தயாராக இல்லை. அது தனது நலன்களை விட்டுக்கொடுக்கவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அது தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்காக அது போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அடுத்த ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. மேலும் அமெரிக்க உதவிக்குறைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் இடைநிறுத்தம், ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீக்கம் என்ற வாறான நெருக்கடிகளையும் அது ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி இலங்கைக்கு எதிரான மனப்பாங்கொன்றை அது சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கூடாகவும் சக்தி மிக்க ஊடகங்களில் வழியாகவும் உருவாக்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அமெரிக்;க அணுகுமுறையானது அமெரிக்காவுக்குப் பணியாத நாடுகளைப் பணிய வைப்பதற்கான வாய்பாடாகவும் உபாயமாகவும் உள்ளதை நாம் கவனிக்கலாம். இதற்கு நேற்றுவரை நிறைய உதாரணங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை இந்த அணுகுமுறைக்கு வாய்ப்பை அளிக்கும் விதமாகவே அமெரிக்காவினால் நெருக்கடிக்குள்ளாகும் நாடுகளின் விவகாரங்கள் அமைந்து விடுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் இலங்கையும் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் எத்தகைய வெளிச்சக்திகளுக்கும் சட்டங்களுக்கும் பணிய வேண்டியதில்லை. எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கத்தேவையில்லை என்பது சாதாரண நடைமுறை வாழ்விலேயே தெரிகின்ற உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த உண்மையைப் பெரும்பாலான அரசியற் தலைவர்களும் அவர்களுக்கான ஆலோசகர்களும் வழிகாட்டிகளும் மறந்து விடுகிறார்கள். அல்லது நினைவிற்கொள்வதற்கு விரும்பாதிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு நிலைதான் இன்றைய இலங்கையின் நிலவரமாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் அது இன்று அமெரிக்கா இலங்கையைச் சுற்றித் தனது கயிற்றை இருக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘சிங்கங்கள் இதற்கெதிராகக் கர்ச்சிக்கலாம். ஆனால், குகையின் வாசல் மூடப்படாதிருக்க வேண்டும்’ என்று அவை சிந்திக்கவும் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே முடிந்த வரையில் வாசல்களை மூடுவதைப் போன்ற ஒரு இறுக்க நிலையை ஏற்படுத்த இப்பொழுது இந்த மேற்கணி விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை இலங்கை தொடர்பான விசயத்தில் அமெரிக்கா இந்தக் காலப்பகுதியில் நிறையப் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. தன்னுடைய விருப்பங்களை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒரு நிலையிலான பின்னடைவு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சரிக்கட்ட அது சரத் பொன்சேகாவைக் களத்தில் இறக்கியதைப்போல இப்போது போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் கருவியாக்கியிருக்கிறது என்று கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அமெரிக்காவின் இந்த அணுகுமுறையானது உண்மையில் இலங்கைக்கான நெருக்கடி என்பதையும் விட இந்தியாவிற்கான நெருக்கடியாக அமைகிறது என்பதே இங்கே கவனிப்பிற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை மேற்கின் பக்கம் சாய்வதை அது பெரிதாக விரும்பவில்லை. மேற்கின் பக்கம் இலங்கை சாயுமாக இருந்தால் இந்தியாவிற்கான பிடியோ செல்வாக்கோ இலங்கையில் இப்போதைக்கு இருக்காது என்பது இந்தியாவுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக ரணிலோ சரத்தோ அல்லது மேற்குக்கு விருப்பமான பிரதிநிதியொருவரோ ஆட்சிக்கு வந்தால், சிங்களத்தரப்பும் மேற்குக்குச் சார்பாகிவிடும். தமிழர்களும் மேற்கோடு சார்ந்திருப்பார்கள். ஆகவே இந்தியா தனிமைப்பட்டு விடும். எனவே விருப்பங்களுக்கும் உடன்பாடின்மைகளுக்கும் அப்பால் மகிந்த ராஜபக்ஷ அரசைப் பாதுகாப்பமே இந்தியாவுக்கு இப்போதைக்குப் பரவாயில்லை என்ற நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணம், தென்னாசியப்பிராந்தியத்தில் இலங்கை என்ற கேந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்தியா இழந்து விடக்கூடிய அபாயமே அதனுடைய அச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவுடன் ராஜபக்ஷ அரசு நெருக்கமாக இருந்தாலும் அது தனக்கு அதிக பாதிப்பைத் தராது என்று இந்தியா கருதுகிறது. இதற்குள் தன்னுடைய நலன்கள் பாதிக்கப்படாத ஒரு சமனிலையைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்பது இந்தியாவின் நம்பிக்கை. அப்படியே அது தற்போதும் செயற்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இப்போதுள்ள நிலையின்படி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இலங்கை கடைப்பிடித்து வரும் ஒரு நிலையைப் பேணிக் கொண்டால் பரவாயில்லை என்ற நிலை இந்தியாவுக்குண்டு. இலங்கையில் மேற்குச் &amp;nbsp;செல்வாக்குச் செலுத்துவதையும் விட சீனாவின் செல்வாக்குப் பரவாயில்லை என்றே இந்தியா கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணம், மேற்குக்கு ஆதரவான சக்திகள் இலங்கையின் உள்ளே மிகச் சாதாரண மட்டங்களில் எல்லாம் உள்ளன. அதேவேளை சீனாவுக்குச் சார்பாக அவ்வாறான சக்திகள் இல்லை என்பது இந்தியாவின் அவதானிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த ஒப்பு நிலையில் மேற்கின் கை மேலோங்குவதை இந்தியா அதிகம் விரும்பவில்லை. எனவேதான் இலங்கையின் மீதான நெருக்கடிகளை இந்தியா அதிகம் விரும்பாமற் தடுக்கிறது. அப்படி ஒரு நெருக்கடி வருமானால் அது தனக்கு வரும் நெருக்கடி என்றே இந்தியா கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யதார்த்தத்திற்குள்தான் இன்றைய இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுகளும் பிற எதிர் நடவடிக்கைகளும் அமையப்போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுகளையும் நெருக்கடிகளையும் இந்தியா தானும் எதிர்க்க வேண்டிய, முறியடிக்க வேண்டிய ஒரு நிலையில் உள்ளது. இதே நிலை சீனாவுக்கும் உண்டு. மேலும் இலங்கையின் நட்பு வளையத்தில் இன்றிருக்கும் பிற நாடுகளுக்கும் உண்டு. ஆனால், ஏனைய நாடுகளின் நிலை இந்தியாவையும் விட அழுத்தம் குறைந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இலங்கையின் மீதான நெருக்கடி என்பது இன்று இந்தியாவின் மீதான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இந்த நிலையிற்தான் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகள் அமையப்போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தியாவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல், இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவதன் மூலம் தென்னாசியப் பிராந்தியத்தில் பலவீனமடைந்திருக்கும் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் பலப்படுத்துவதற்கு மேற்கு – அமெரிக்க அணி – முயற்சிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் இலங்கையின் மீதான நெருக்கடிகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் தோற்றம் பெரிதாக்கப்படுகிறது. இந்த மாதிரி நிலைமைகளில் சர்வதேச அபிப்பிராயம் என்ற ஒரு தோற்றமே பெரிதும் எதையம் தீர்மானிப்பது. ஆகவே, இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் என்ற அபிப்பிராயம் பொதுமைப்படுத்தப்படும்போது அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சற்றுச் சிந்திக்கக் கூடியதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சிங்கள இராச தந்திரமானது, இந்த இடத்தில் மிக நுட்பமாகச் செயற்படக்கூடியது. அது அதிக சாகசங்களைக் காண்பித்து விட்டு, தீடீரெனச் சாதுவாகி விடும் ஒரு இயல்பைத் தன்னகத்திலே கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இப்போது இலங்கைக்கு மேற்கிலிருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியைப்போல 1980 களில் இந்தியாவினால் ஏற்பட்டிருந்தது. 1987 இல் வெளிப்படையாகவே இந்தியா தன்னுடைய கயிற்றால் இலங்கையை இறுக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது தமிழர்கள் உட்படப் பலரும் சிங்கள அரசியலைக் குறித்து சிரித்துக்கொண்டேயிருந்தனர். அன்று அதிகாரத்திலிருந்த ஜே.ஆரின் மூக்குடைபடுகிறது என்றே பலரும் கருதினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்த நெருக்கடியிலிருந்து குறுகிய காலத்திலேயே மீண்ட இலங்கை – சிங்கள அரசியல் - தனக்குச் சேதாரங்களில்லாமல் பிற தரப்புக்கான சேதாரங்களையே ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இந்தியா ராஜீவ் காந்தியையும் பல நூறு படையினரையும் பெருமளவு நிதியையும் இழந்தது. தமிழர்களின் இழப்புக்குக் கணக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், இலங்கைக்குச் சேவகம் செய்யும் நிலையில் இன்றுவரை இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தியது சிங்கள இரசதந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இப்போதைய நெருக்கடி நிலையிலும் அது எத்தகைய தீர்மானங்களை எடுக்கும். எப்படியான காய்களை நகர்த்தும் என்று யாருக்குமே தெரியாது. அது எப்போதும் நேரடியான பகை முரணுக்குப் போவதில்லை. தன்னை மீறக்கூடிய சக்திகளுடன் அது ஒரு போதுமே நேரடியாக மோதிக் கொள்வதில்லை. ஆகையால் அடுத்து வரும் நாட்கள் எப்படியான அணுகுமுறைகள், காய் நகர்த்தல்களின் மத்தியில் நகரப்போகின்றன என்பதை அறிவதே உலகிலுள்ள அரசியல் அவதானிப்பாளர்களுக்குச் சுவாரஷ்யமான விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நிலைமைகள் ஒரு திலூட்டும் திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல புதிர்த்தன்மைகள் நிறைந்தனவாகவே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்த நிலையானது கம்பியின் மேல் நடப்பதைப்போன்றதே. தவறினால், கீழேயிருக்கும் கத்தியின்மேல் வீழ்வதற்குச் சமம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை இன்னொரு முக்கியமான விசயத்தையும் நாம் கணக்கிற் கொள்ள வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்களை வலுவாக்கக் கோரும்போது அதையிட்டுச் சிங்களவர்கள் தமிழர்களைப் பகையாளிகளாவே பார்க்கும் ஒரு யதார்த்தம் உண்டு. அதேவேளை போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாத நிலை தமிழர்களுக்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இப்பொழுது நெருக்கடிக்குள் சிக்கியிருப்பது தமிழ் மக்கள், இலங்கை அரசு, இந்தியா ஆகிய மூன்று தரப்புகளே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இருப்பக்க நெருக்கடிக்குள் தமிழ்த்தரப்பு இன்று சிக்கியுள்ளது. ஒன்று இந்தியாவை அது எப்படி முகங்கொள்வது என்பது. இரண்டாவது, வெளிச்சக்திகளுடன் கைகோர்த்து விட்டு எப்படிச் சிங்களவர்களுடன் சமாதானத்துக்குப்போவதென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அNவேளை இது சிங்களத்தரப்புக்கு உடனடி நெருக்கடிக் காலமாகவும் நீண்ட கால அடிப்படையில் அவர்கள் பிராந்திய நாடுகளையும் சர்வதேச நாடுகளையும் மோதவிட்டுவிட்டுத் தங்களின் நலன்களைப்பாதுகாத்துக் கொள்வதாகவும் அமையப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப் பார்த்தாலும் தமிழர்களுக்கே நீண்ட கால அடிப்படையில் இது நெருக்கடியாக அமையப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-7215695783315744587?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/7215695783315744587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/7215695783315744587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/7215695783315744587'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_25.html' title='இலங்கை மீதான மேற்கின் சமகால அழுத்தங்கள்?'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-icNk7fjjEKc/T0nDFkmtohI/AAAAAAAAAM0/9GFT4VF7CQQ/s72-c/images+(62).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-8070245024010434178</id><published>2012-02-23T06:07:00.005-08:00</published><updated>2012-02-23T06:38:13.075-08:00</updated><title type='text'>மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Tb_fgMVV-gE/T0ZICPha-_I/AAAAAAAAAMs/0NrH61C_O9k/s1600/images+(4).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-Tb_fgMVV-gE/T0ZICPha-_I/AAAAAAAAAMs/0NrH61C_O9k/s1600/images+(4).jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே!&lt;br /&gt;&lt;br /&gt;2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூறியது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால்&amp;nbsp;முற்றிலும் வேறானதோர் தீர்க்கதரிசனமிக்க அரசியல் அணுகுமுறையும் கடினமான உழைப்பும் தேவை. ஏனெனில் தென்னாசிய விடுதலைப் போராட்டங்களுக்கான பிராந்திய – சர்வதேச யதார்த்தமானது இலகுவானதாக அமையவில்லை. இந்தப் பிராந்தியத்தின் போராட்டங்களெல்லாம் குரூரமான முறையி்ல் ஒடுக்கப்பட்டதே யதார்தமாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும் ’&lt;br /&gt;&lt;br /&gt;நிலாந்தனுடைய இந்தக் கருத்தை அப்போது புலிகளின் மையப்பகுதியினர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. விரும்பவும் இல்லை. ஆனால், தன்னுடைய இந்தக் கருத்துக்கான ஆதாரங்களை நிலாந்தன் அந்த நிகழ்ச்சியில் தெளிவாக்கியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிலாந்தன் நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டது. பின்னர் ஈழநாதம் பத்திரிகையில் அவர் எழுதி வந்த அரசியற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இதே கருத்தை ஈரோஸ் இயக்கத்தின் தலைவராகவும் பின்னாளில் விடுதலைப் புலிகளின் முக்கியத்தராகவும் இருந்த திரு வே. பாலகுமாரனும் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சொன்னமாதிரியும் எதிர்பார்த்த மாதிரியுமே நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மே 18 நிகழ்ச்சிகள் என்பது தென்னாசியப் பிராந்திய – சர்வதேசிய நிகழ்ச்சிப் போக்கின் யதார்த்தமும் உண்மையும் என்பதையே நிரூபித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;தென்னாசியப் பிராந்தியத்தில் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டங்களின் முடிவுகள் அமைந்த யதார்த்தத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விதியும் விடுதலைப் புலிகளின் முடிவும் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாசியாவில் நடைபெற்ற போராட்டங்கள் அத்தனையையும் அந்தந்த நாடுகள் மிகக் குரூரமாக ஒடுக்கியிருக்கின்றன. இதற்காக அவை, பிராந்திய நாடுகளின் உதவிகளையும் தேவையேற்படும் பட்சத்தில் சார்புக்கமைவான சர்வதேச நாடுகளின் உதவிகளையும் பெற்றுள்ளன. இலங்கையில் நடந்ததும் இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஆதிக்க சக்திகள் போராட்டங்களை ஒடுக்கும்போது அதில் பெருமளவு பாதிக்கப்படுகிறவர்கள் சாதாரண மக்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் ஏற்கனவே நசுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஒடுக்குதலின்போது தமிழ் சிங்கள மக்கள் என்ற பேதங்களை அரசு இயந்திரம் வேறு படுத்திப் பார்க்கவில்லை. அரசைப் பொறுத்தவரையில் தனக்கெதிராக இயங்குவோர் என்பதையே அது குறியாகக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.வி.பியின் எழுச்சிகள் இரண்டுதடவைகள் ஒடுக்கப்பட்டுள்ளன. இதற்குச் சிங்கள இளைஞர்களையே (சிங்கள இராணுவத்தையே) சிங்கள அரசு பயன்படுத்தியிருக்கிறது என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேணும். இந்த இரண்டு கிளர்ச்சிகளிலும் ஏறக்குறைய ஒரு லட்சம் வரையானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் பல வடிவங்களில் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரப்பட்டது. எனினும் இறுதியாக 2009 மே 18 டுடன் அதற்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது பிராந்திய - சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளது என்பதுவும் நமது கவனத்திற்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல இந்தியாவில் நடந்த பல போராட்டங்களும் இத்தகைய ஒடுக்குமுறையின் மூலமே நசுக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு இந்த விசயத்தில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான உறவும் சர்வதேச வலைப்பின்னலின் ஒழுங்கமைப்பும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இதுவொரு தென்னாசியப் பிராந்திய யதார்த்தம். தென்னாசியப்பிராந்தியத்திற்குரியதொரு படிப்பினை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே -&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யதார்த்தம் நமக்கு பல புதிய புரிதல்களையும் படிப்பினைகளையும் அனுபவபூர்வமாகவே இன்று தந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்த யதார்த்தத்துக்கு அப்பால் - இந்த யதார்த்தத்தை உடைத்து நாம் வெற்றியடைந்து விடலாம்’ என்றிருந்த நம்பிக்கை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்த நம்பி்க்கை வெற்றியடைந்திருக்க வேண்டுமானால், போராட்டத்தின் போக்கிலும் அணுகுமுறையிலும் அடிப்படையிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ வேண்டும் என்பது இன்று தெளிவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அத்தகைய தெளிவு எந்த மட்டத்தில் நிகழ்ந்துள்ளது? அதைப் பொதுச் சூழலானது எந்த அளவிற் புரிந்து கொண்டுள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிர்த்து - இத்தகைய படிப்பினைகளைத் தமது அரசியல் முன்னெடுப்புகளுக்கான பாடங்களாகக் கொள்வதைத் தவிர்த்து - வழமையான சிந்தனை முறையில் அரசியலைத் தொடர்வோர் நிலைமைகளை மேலும் மோசமாக்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என்னதானிருந்தாரும் இலங்கையின் வரலாற்றில் மே18 – 2009 என்பது எத்தகைய படிப்பினைகளைத் தந்துள்ளது? என்பது முக்கியமான கேள்வி. நிராகரிக்கவே முடியாத கேள்வி. எப்படி அந்த நிகழ்ச்சி ஒரு யதார்த்தமோ எப்படி அது உண்மையான ஒரு அரசியல் விளைவோ அந்த அளவுக்கு அது ஏற்படுத்திய படிப்பினைகளும் கேள்வியும் முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியும் படிப்பினைகளும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;2009 மே18க்குப் பின்னர் இப்பொழுது இரண்டாண்டுகள் கழிந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது யுத்தம் முடிந்து இரண்டாண்டுகள் கடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டாண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் என்ன? முன்னேற்றங்கள் என்ன? மாற்றங்கள் என்ன? திருத்தங்கள் என்ன? படிப்பினைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால், போருக்குப் பிறகும் இலங்கையில் இனமுரண்பாடு அப்படியேதான் இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களும் சிங்களவர்களும் வௌ;வேறுவிதமாகவே – போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் சிந்தித்ததைப் போலவே சிந்திக்கிறார்கள். யுத்தம் இவர்களுக்கு எந்தப் படிப்பினைகளையும் தந்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக அரசியல் முரண்பாடும் இடைவெளியும் நீடிக்கின்றன. ஆகையால் இலங்கையில் வெளிச்சக்திகளின் தலையீடும் நெருக்கடியும் அதிகரித்தவாறே இருக்கிறது. மக்களின் உரிமைகளும் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, இலங்கையில் இனமுரண்பாட்டின் காரணமாக – விளைவாக - உருவாகிய போர் ஏற்படுத்திய விளைவுகள் - படிப்பினைகள் - யாரையாவது நிதானமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குப் புதிய சிந்தனை முறை உருவாகினால்தான் மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் சாத்தியங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஊடகங்களும் பெரும்பாலான தமிழ் அரசியற் கட்சிகளும் பழைய அலைவரிசையிலேயே பேசிக் கொண்டிருக்கின்றன. அரசியற் தலைவர்களின் பாராளுமன்ற உரைகளும் அறிக்கைகளும் இதற்கு நல்ல உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே இலங்கை அரசும் சிங்களத் தலைவர்களும் அவர்களுடைய கட்சிகளும் பழைய பாணியிலேயே பேசியும் சிந்தித்தும் வருகின்றன. சிங்கள ஊடகங்கள் பாதை விலகாமலே பயணம் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே யுத்தத்தின் முடிவு எந்த முன்னேற்றத்தையும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தவில்லை. எத்தகைய படிப்பினைகளையும் யாருக்கும் தந்ததாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இலங்கையில் ஐக்கியத்துக்கும் வழியில்லை. பிரிவினைக்கும் இடமளிப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணம் யுத்தத்தின் முடிவை இலங்கை அரசு தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டதும் அந்த வகையிலேயே மக்களைச் சிந்திக்கத் தூண்டியதுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் முடிவை யுத்த வெற்றியாகக் கருதியதால் வந்த வினை இது. இதுவே அடிப்படையான பிரச்சினையாகும். இந்தப் புரிதல் முற்றிலும் தவறானது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த வெற்றி என்பது ஒருதலைப் பட்சமானது. யுத்தத்தில் பெற்றது வெற்றி என்று உணரப்படும்போது அதன் மறுப்பக்கம் தோல்வி என்றே அர்த்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இலங்கையில் நிகழ்ந்திருப்பது. ஆகவேதான் யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் இலங்கையின் நிலைமைகள் மாற்றமடைய முடியாமல் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த வெற்றி என்றால் அது சிங்களத் தரப்பிற்குரிய வெற்றியாகும். அவ்வாறே கருதவும் படுகிறது. அதன் பெருமையும் பங்கும் தமக்கே என்று சிங்களத் தரப்பு கருதியுள்ளமை இதற்கு நல்ல சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சிங்களத் தரப்புக் கருதியதால் இந்த யுத்தத்தின் அடுத்த முனையிலிருந்த தமிழர்களை அது வேறுவிதமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யுத்தத்தில் தமிழர்கள் தோற்றவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். தமிழர்களும் இவ்வாறே கருதுகிறார்கள். அவ்வாறு தமிழர்களைக் கரும்படியே நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, யுத்தத்தின் முடிவு என்பது நல்விளைவுகளுக்குப் பதிலாக – மீண்டும் பகையை உள்ளே தூண்டும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் முன்னேற்றங்களைப் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், யுத்தத்தின் முடிவினால் சில நன்மைகள் கிட்டியிருக்கின்றன. யுத்தத்தின் அழுத்தங்களும் நேரடியான உயிர் இழப்புகள், சொத்திழப்புகள், அகதியாக இடம்பெயர்தல் போன்ற பாதிப்புகளும் நீங்கியுள்ளன. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தடைகள் விலகியுள்ளன. சனங்கள் இறுக்கங்களிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், யுத்தம் முடிந்த பின்னர் காணப்பட்டிருக்க வேண்டிய இலங்கையின் பிரதான பிரச்சினையாகிய இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது அந்த இனமுரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு சம்மந்தப்பட்டவர்களிடம் விசுவாசமாக ஏற்பட்டுள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது இனப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நேர்மையாக மேற்கொள்ளப்படுகின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது நாடு அமைதியடைந்திருக்கிறதா? அல்லது அது அபிவிருத்திப் பாதையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினைக்கோ அல்லது ஐக்கியத்துக்கோ செல்லக்கூடிய வழிவகைகளைப் பற்றி நேர்மையாகச் சிந்திக்கப்பட்டிருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்சம் நாட்டைப் பாதிக்கின்ற வகையிலான உள்நாட்டு நெருக்கடியும் வெளிச் சக்திகளின் அழுத்தங்களும் நீங்கியிருக்கின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால் யுத்தம் முடிந்து விட்டது என்று மக்கள் உணர்ந்து கொள்வதற்கான ஏதுக்கள் எதுவும் இல்லை. அதிலும் யுத்தப் பாதிப்புகளை நீக்கக் கூடிய நடவடிக்கைகள் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நடைபெற்ற யுத்தம் தமிழ் பேசும் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழர்கள் அதிகமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அதேவேளை அது ஏனைய சமூகங்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பதற்றத்திலும் பாதிப்பிலுமே இலங்கையின் கடந்த காலம் கழிந்தது.&lt;br /&gt;முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த யுத்தம் முடிந்திருப்பது என்பது சாதாரணமானதல்லத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தின்ற யுத்தம் இது. மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான சொத்துகளையும் இயற்கை வளங்களையும் அழித்த யுத்தம். பலருடைய எதிர்காலத்தைச் சிதைத்த யுத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த யுத்தம் முடிவுக்கு வந்தபோது யுத்தத்துக்குக் காரணமாக இருந்த பிரச்சினைகள் தீர்ந்திருக்க வேணும். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியாவது குறைந்திருக்க வேணும். யுத்தத்துக்குப் பின்னரான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுதான் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, &amp;nbsp;யுத்தம் முடிவுக்கு வந்த மே 18 என்பது நிச்சயமாக ஒரு படிப்பினைக்கான நாள். அது இலங்கையர்களுக்கு பல தரிசனங்களைத் தந்திருக்க வேண்டிய நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்களைப் பொறுத்த அளவில், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பெரும் பொறுப்பைப் பெற்றுக் கொண்ட நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளின் இயங்குநிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, முப்பது ஆண்டுகளாகத் தமிழர்களின் அரசியற் சக்தியாக செல்வாக்குப் பெற்றிருந்த விடுதலைப் புலிகளிடமிருந்து வேறுபட்டதொரு அரசியல் முறைமைக்கு மாறிய நாள். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், பிரபாகரனுக்குப் பின்னரான – பிரபாகரன் அற்ற - அரசியல் செயற்பாட்டைத் தொடரவேண்டிய நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாளில் - மே 18 இல் - யுத்தத்தின் முடிவை இலங்கை அரசும் சிங்களவர்களும் யுத்தவெற்றியாகவும் தமிழர்களைத் தோற்கடித்ததாகவும் கருதியிருந்தால் -&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் இந்த நாளை தங்களின் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் ஒரு படிப்பினையாகக் கொள்வது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-8070245024010434178?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/8070245024010434178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/8070245024010434178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/8070245024010434178'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/18.html' title='மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும்'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Tb_fgMVV-gE/T0ZICPha-_I/AAAAAAAAAMs/0NrH61C_O9k/s72-c/images+(4).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-2069393402802760216</id><published>2012-02-22T02:48:00.001-08:00</published><updated>2012-02-22T02:53:03.356-08:00</updated><title type='text'>இனப்பிரச்சினைக்கான தீர்வு?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-XexIG0AmGf0/T0TH2BuWKeI/AAAAAAAAAMk/yxmOpBI-Zaw/s1600/images+(57).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-XexIG0AmGf0/T0TH2BuWKeI/AAAAAAAAAMk/yxmOpBI-Zaw/s1600/images+(57).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இனப்பிரச்சினை போருக்குப் பிறகும் தொடர்கிறது. இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. புலிகள் இல்லாத சூழலிலும் தொடர்கிறது. தமிழ் இயக்கங்களின் கைகளில் ஆயுதங்கள் அற்ற நிலையிலும் தொடர்கிறது. சமாதானத்தை விரும்புகிறவர்கள்(?), அதற்காக முயற்சிப்பவர்கள்(?) என்று கூறுகின்றவர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வட்டமேசை மாநாடு, அனைத்துக்கட்சிக்குழு, சர்வகட்சி மாநாடு, பேச்சுவார்த்தைகள் எனப் பல சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் தொடர்கிறது. இந்தியாவின் தலையீடு, நோர்வேயின் மத்தியஸ்தம் என்றெல்லாம் நடந்த பிறகும் தொடர்கிறது. இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிய பின்னரும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சி மாறிப் புதிய ஆட்சிகள் வந்துள்ளன. தலைவர்கள் மாறி மாறி புதிது புதிதாக வந்திருக்கின்றனர். ஆனால், பிரச்சினை மட்டும் அதே நிலையில், அதே வலியுடனும் அதே மணத்துடனும் அதே எரிநிலையிலும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இப்போதைக்கு இந்தப் பிரச்சினை முடியாது போலவேயுள்ளது எனக் கேட்டார் ஒரு நண்பர். அமைதிக்கான முயற்சிகள் ஒவ்வொன்றின்போதும் இந்த நண்பர் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என்று விசுவாசமாகவே விரும்புகின்றவர். அவருடைய நாற்பதாண்டுகால அரசியல் அனுபவத்தில் அவர், ஏமாற்றப்பட்டதும், நம்பிக்கையிழக்க வைக்கப்பட்டதுமே அதிகமாக உள்ளது. இப்போது இந்த நண்பருக்கு வயது 71. இனப்பிரச்சினைக்கு வயது....? சுதந்திரத்துக்குப் பிறகான காலம் என்று பார்த்தாலும் 62 ஆண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலங்கள் மாறிவிட்டன. உலக ஓட்டம் மாறிவிட்டது. அரசியற் போக்குகளும் வாழ்க்கை அமைப்புகளும் எவ்வளவோ மாறியிருக்கின்றன. சிந்தனைகளும் நம்பிக்கைகளும் எண்ணங்களும் வௌ;வேறு அனுபவங்களையும் அறிவையும் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நூற்றாண்டின் பிரதான அரசியற் போக்குகளாக இருந்த இடதுசாரி, வலதுசாரிய அரசியல், பனிப்போர் நிலைமைகள் எல்லாம் மாறிவிட்டன. அதையொட்டிய அரசியல் பிரயோகங்கள் எல்லாம் வெளிறிப்போய்விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை மட்டும் கொதித்துக்கொண்டேயிருக்கிறது. அதே தீவிரத்துடன், அதே கொதிப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுகள் நடக்கின்றன. நம்பிக்கையீனங்களின் மத்தியில், இழுபாடுகளின் மத்தியில், உடன்பாடின்மைகளின் மத்தியில் அமைதிக்கான - இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பேச்சுகள் வெற்றியடையுமா? நடக்கின்ற இந்தப் பேச்சுகளில் ஏதாவது அர்த்தம் உண்டா? இவை உண்மையானவையா? என்ற கேள்விகள் இன்று சராசரியான பொதுமக்களிடம் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், இதைவிட்டால் அடுத்த கட்டம் என்ன? இனித் திரும்பி ஆயுதப்போராட்டம் ஒன்றுக்குப் போக முடியுமா? அதற்கான சாத்தியங்கள் உண்டா? அப்படியிருந்தாலும் அது வெற்றியளிக்குமா? அல்லது பேச்சுவார்த்தையை விட்டு வெளியே வந்து அரசியற் போராட்டங்களை நடத்துவதா? அப்படி நடத்துவதானால், அந்தப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது? அது சாத்தியமா? அது வெற்றியளிக்குமா? அதற்கான ஆதரவை எப்படித் திரட்டுவது? அந்தப் போராட்டத்துக்கு பிராந்திய சக்தியாகிய இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுகள் எல்லாம் எப்படியிருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விகள் எல்லாமே பதிலற்ற நிலையிற்தான் உள்ளன. யாரும் இதற்குரிய பதில்களைக் கூறுவார்கள் என்று தோன்றவில்லை. ஆனால், பரபரப்பாக அரசியற் செய்திகள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எந்த முன்னேற்றத்தையும் எட்டாத முயற்சிகளைப் பற்றிய செய்திகளாக அவை இருக்கின்றன என்பதை அரசியலாளர்களும் சிந்திக்கவில்லை. அறிஞர்களும் சிந்திப்பதாக இல்லை. ஊடகவியலாளர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனதிலே இருக்கின்ற ஆத்திரத்தையும் இயலாமையின் நிமித்தமாக எழுகின்ற ஆற்றாமையையும் கொட்டித் தீர்க்கும் விதமாக இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளரையும் சிங்கள அதிகார வர்க்கத்தையும் திட்டித் தீர்த்து விடுவதுடன் தமிழரின் அரசியற் பணிகளின் முதற்பகுதி நிறைவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபகுதியில் இந்தியா மற்றும் மேற்குலகு, ஐ.நா போன்றவற்றிடம் இலங்கை அரசைப்பற்றியும் தமிழ் மக்களுடைய நிலையைப் பற்றியும் முறையிடுவதுடன் மீதி அரசியற் பணிகள் நிறைவடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவை இரண்டினாலும் மட்டும் நிச்சயமாக தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினையோ அரசியல் அதிகாரப் பகிர்வோ சாத்தியமாகிவிடாது. அவ்வாறு ஒரு சாத்தியப்பாடு கிட்டுமானால், இலங்கையில் அது எப்போதோ கிட்டியிருக்க வேணும். இலங்கைக்கு வெளியே இந்த &amp;nbsp;மாதிரிப் பிரச்சினை உள்ள நாடுகளில் எப்போதோ எல்லாம் அவற்றின் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அப்படி எந்த அதிசயமோ அற்புதமோ எங்கும் நடந்ததாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலாக - நிலைமைகள், உலக அரசியற் போக்கின் அசைவுகள், மக்களின் மனவுறுதியைக் கட்டமைத்தல், அவர்களுடைய வாழ்க்கையை இணைந்து நின்று மேம்படுத்திப் பாதுகாத்தல், மக்கள் தொடக்கம் எதிர்த்தரப்பின் நட்புச் சக்திகள் மற்றும் சர்வதேச சமூகங்கள் வரையான உரையாடல் போன்றவற்றை உன்னிப்பாக அவதானித்து அவற்றைச் செயற்படுத்தினாலே பேச்சுகளில் வெற்றியை ஏற்படுத்த முடியும். பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதெல்லாம் இலகுவான வழிமுறைகள் அல்ல. மிகக் கடினமான – கடுமையான உழைப்பைக் கோரும் வழிமுறைகளாகும். இதற்கு அந்த உழைப்பை வழங்கக் கூடிய மனநிலையும் ஆற்றலும் ஆளுமை மிக்க தலைமைத்துவதும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;அது இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்தினரிடத்திலே உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத் தரப்பைக் குற்றம் சாட்டுகின்ற சிறுபான்மைத் தரப்பினரிடம் ஒரு பொது உடன்பாட்டைக் காணவோ எட்டவோ முடியாத நிலையே இன்னமும் உண்டு. தேர்தற்காலக் கூட்டுகள், சந்தர்ப்பத்துக்கேற்ற அணி உருவாக்கங்கள், தேவைக்கேற்ற சமரசங்கள் என்பதற்கு அப்பால், பொது நோக்கில், மக்களின் நலனை முதன்மைப்படுத்தி, எதிர்த்தரப்பை - அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கில் எவரும் ஒரு கட்டமைப்பை உருவாக்கத் தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுகள் கூட சிதைந்த நிலையிலேயே உள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று உறைநிலைக்குப் போய் விட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிறு துண்டாகியுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி தனிக்கட்சி அடையாளத்துடன் இன்று இன்னொரு கூறாகச் செயற்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிஞ்சியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்குமிடையில் வெளிப்படையாகவே பலத்த இழுபறிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி போன்றவற்றுக்குக் குரலே இல்லை. ஏதோ இருக்கிறோம் என்ற அளவில் அவ்வப்போது எதைப் பற்றியாவது கதைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், எவரும் தனித்துப்போய் நின்று தாக்குப் பிடிக்க முடியாதென்ற நிலையில் இழுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மற்றும்படி கொள்கையின்படியோ, செயலொன்றை ஆற்ற வேண்டும் என்ற முனைப்பின்படியோ, தீர்மானத்தின் படியோ பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டடையவேண்டும் என்றோ, பொது உடன்பாட்டின் வழியாகச் சிறுபான்மைச் சமூகங்களைத் திரட்சியாக்கி, சிங்களத் தரப்பிலுள்ள நியாயவாதிகளை அணிப்படுத்த வேண்டும் என்றோ கருதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் எதிர்த்தரப்பான அரசுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இனப்பிரச்சினையை நீடித்துச் செல்ல முடிகிறது. பலவீனமான தரப்பாக சிறுபான்மையினர் இருக்கும் வரையில்; அவர்களைக் கையாள்வது இலகு என்ற மனவுணர்வும் அனுபவமும் சிங்களத்தரப்புக்குத் தாராளமாகவே உண்டு. ஆகவேதான் அது புதிய புதிய அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி அது தெரிவுக்குழு என்ற புதிய அறிவிப்பைச் செய்துள்ளது. இது ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் அரசின் உத்தியே. இந்தத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று இதுவரையிற் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொல்லி வருகின்றனர். ஆனால், என்னதான் சொன்னாலும் இதைத் தீர்மானமாக மறுத்துரைத்து வெளியே வருவதற்கு கூட்டமைப்பினால் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமைப்புத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தவிர்க்க முடியாது. அதில் பெரிய தப்பேதும் இல்லை என்று கூட்டமைப்பை ஆதரிக்கும் அரசியற்பத்தியாளர்கள் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருகின்றனர். கூடவே எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தலை முன்வைத்தாலும் அதிலும் கூட்டமைப்புப் போட்டியிடலாம் என்பது &amp;nbsp;இவர்களுடைய கருத்து. அதாவது, கூட்டமைப்பு எடுத்த எடுப்பிலே பொறியில் வீழ்ந்து விடாமல் கவனமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு, பிகு பண்ணிவிட்டுப் பின்னர் சத்தமில்லாமல் விசயத்தில் இறங்கப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தெரிவுக்குழுவில் இடம்பெறுவதும், மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதும் தற்கொலைக்கொப்பானது என்று இதை மறுத்து விமர்சிக்கும் தரப்பும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் இருந்தாலும் யதார்த்தம் என்பதற்கே எப்போதும் முதலுரிமை உண்டு. அதுவே எதையும் தீர்மானித்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமைப்புக்குள்கூட தெரிவுக்குழுவில் பங்கேற்பதா இல்லையா, மாகாணசபையில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவெடுக்கும் பிரச்சினை வந்தாலும் யாரும் முரண்பாடுகளின் வாயிலாக வெளியே போவதற்குத் தயாரில்லை. அப்படி வெளியே போனால் அது அரசியற் துறவாகி விடும் என்று அவர்களுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்தப் பலவீனங்களை எல்லாம் அவதானித்திருக்கும் சிங்கள அதிகார வர்க்கம் நிச்சமயமாக எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் வராது. அப்படி வரவேண்டிய தேவையும் அதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிராந்தியத்தின் அமைதி, சீனா போன்ற பிற சக்திகளின் தலையீட்டுக்கான வாய்ப்பு போன்ற வித்தியாசமான காரணங்களுக்காக சில வகையான முன்னெடுப்புகளின் நிமித்தமாக அமைதிப் பேச்சுகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். முன்னேற்றங்கள் எட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் இப்போதைக்கு அவை முயற்கொம்புகளே!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் அடுத்தது என்ன? இதைத் தான் பலரும் கேட்கிறார்கள். ஏன் பேச்சுகளில் ஈடுபடுவோருக்கும் அடுத்தது என்ன என்று தெரியாது. என்றபடியாற்தான் அரசாங்கம் நெருக்கடிகளை ஏற்படுத்த, ஏற்படுத்த அதை முறியடிக்க முடியாமல் அதனுடைய வலையில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு தீர்வு யோசனையைக் கூட முன்வைக்க முடியாமல் வாய்பாடுகள், பழைய பாடல்கள், தேய்ந்த குரல்களையே சனங்களுக்குப் பரிசளித்துக் கொள்ள வேண்டியேற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறெனில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியற் தலைவிதி எவ்வாறு அமையப் போகிறது? இதுவே எளிய கேள்வி. இதுவே கடினமான கேள்வியும். இதுவே எல்லோருடைய கேள்வியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றிலும் புதிய அரசியல் வழிமுறைக்கும் அரசியற் சிந்தனைக்கும் தமிழ் பேசும் தரப்பினர் செல்ல வேண்டும். இது படிப்பினைகளின் காலம். மீள் பரிசீலனைகளின் காலம். புதியவற்றுக்காக முயற்சிக்கும் சூழல். கடந்த கால அரசியற் பாதைகளிலும் பயணங்களிலும் செயற்பாடுகளிலும் நோக்கிலும் சிந்தனையிலும் அனுபவங்களிலும் கற்றுக்கொண்ட அரசியல் அறிவை, வரலாற்றறிவைப் பயன்படுத்த வேண்டிய காலமும் சூழலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் செய்வதே இன்றைய அரசியற் செயற்றிட்டமாகும். இத்தகைய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தில் உலகத்திசைகளில் இருக்கும் செயற்பாட்டாளர்களும் தீர்வை விரும்புவோரும் நெருங்கி, ஒருங்கிணைந்து வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமைகளும் அவற்றைக் கையாளும் முறைகளுமே யாரையும் ஒருங்கிணைப்பன. எதுவும் வெற்றியை நோக்கி நகர்த்துவன என்பதற்கு ஏராளம் அடையாளங்கள் வரலாற்றில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இன்று இதைக் குறித்துச் சிந்திப்பதே இன்றைய – நாளைய அரசியலாகும். இதன் வெற்றியே கடந்த காலத் தோல்விகளையும் காயங்களையும் ஆற்றுப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தத் தோல்வியும் எத்தகைய பின்னடைவும் சிந்திக்கும் செயற்படும் தரப்பினருக்கு நிரந்தரமாக அமைவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நூற்றாண்டுத் துயரங்களும் நூற்றாண்டுத் தூரங்களும் கூரிய சிந்தனையில் எளிதாகக் கடக்கப்படும் என்பதை இதை விட எப்படி விளக்குவது?&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-2069393402802760216?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/2069393402802760216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2069393402802760216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2069393402802760216'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_22.html' title='இனப்பிரச்சினைக்கான தீர்வு?'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-XexIG0AmGf0/T0TH2BuWKeI/AAAAAAAAAMk/yxmOpBI-Zaw/s72-c/images+(57).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-4046751854275849103</id><published>2012-02-20T05:51:00.000-08:00</published><updated>2012-02-20T05:58:57.751-08:00</updated><title type='text'>கேள்விகளைச் சுமக்கும் பயணங்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-xf2kcTtyTa0/T0JPZo_ED_I/AAAAAAAAAMc/4Gj2z6x3an4/s1600/images+(61).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-xf2kcTtyTa0/T0JPZo_ED_I/AAAAAAAAAMc/4Gj2z6x3an4/s1600/images+(61).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை மகிழ்ச்சிக் கடலில் பயணம் செய்ய வைப்பதற்காக ஒரு அமைச்சை உருவாக்கக் கூடிய சூழல், இலங்கை அரசாங்கத்தின் கட்டமைப்பில் எதிர்காலத்தில் உருவாகலாம் போலுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நடக்காது என்று மட்டும் கூறி விடாதீர்கள். ஏனென்றால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இரண்டு அமைச்சுகளை இந்த அரசாங்கம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. ஒன்று, மீள்குடியேற்ற அமைச்சு. அடுத்தது, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு அமைச்சுகளும் போரின் பின்னரான சூழலுக்காக உருவாக்கப்பட்டவை. இவை அந்த அர்த்தத்தில் செயற்படுகின்றனவோ இல்லையோ அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இதைப்போல மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைப்பதற்காக புதியதொரு அமைச்சை உருவாக்குவதற்காக அரசாங்கம் கருதினால் அதில் தப்பென்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு ‘எப்போதும் எங்கும்’ என ஏராளம் கொண்டாட்டங்கள், வெகு விமரிசையாக நடந்த வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;போர் வெற்றிக் கொண்டாட்டங்கள், சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் இரண்டையும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. தற்போதுகூட அனுராதபுரத்தில் தேசத்தின் மகுடம் என்ற பெயரில் பெரும் கண்காட்சியொன்று நடந்து கொண்டிருக்கிறது. நாடே அனுராதபுரத்தில் திரண்டிருக்கிறது. இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது தேசத்தின் மகுடத்தைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஒட்டியதாக அது பல நிகழ்ச்சிகளை உருவாக்கி மிக விமரிசையாகவே கொண்டாடுகிறது. ஆடலும் பாடலும் அலங்கார விளக்குகளின் ஒளியுமாக நாடே உற்சாக ஒளிவெள்ளத்தில்தான் மிதக்கப்போகிறது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் களைப்பிலிருந்து மீண்டுள்ள நாட்டுக்கு இந்த மாதிரியான உற்சாகமும் மகிழ்ச்சியும் தேவை என்று அதிகாரத்திலுள்ளவர்கள் சிந்தித்திருக்கக் கூடும். இருண்ட யுகத்தினுள் நீண்ட காலமாகவே சிக்கியிருந்த நாட்டுக்கு சிறிது ஆறுதலும் நெகிழ்ச்சியான நிலைமையும் அவசியம் என்றும் இவர்கள் எண்ணியிருக்கலாம். மட்டுமல்ல, எப்போதும் அச்சத்திலும் துக்கத்திலும் &amp;nbsp;உறைந்தவாறு இருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டு சற்றுக் களிப்பாக இருக்கட்டும் என்றும் கருதியிருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொறுப்பான அரசாங்கம் தன்னுடைய குடிமக்களின் மகிழ்ச்சியைக் குறித்துச் சிந்திக்காதிருக்க முடியாது. ஆகவே, மக்களைச் சந்தோசமாக வைத்திருப்பதற்காக அது எவ்வளவையும் செலவளிக்கத்தான் வேணும். ஆகவேதான் இந்த மாதிரியான தொடர் ஏற்பாட்டுக்கு – மகிழ்ச்சிகரமான உலாக்களுக்கும் வைபவங்களுக்குமாக ஒரு அமைச்சையே தனியாக உருவாக்குவதற்கு அரசாங்கம் சிந்திக்கலாம் என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, பலரும் விமர்சித்து வருவதைப்போல போரின் வெற்றியை ஒரு முதலீடாக்கி அரசியல் ஆதாயங்களைத் தேடிக் கொள்வதற்காக இந்த மாதிரியான முதன்மைப்பாடான நிகழ்ச்சிகளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுத் தன்னுடைய நிகழ்ச்சி நிரலாக்கியுள்ளது என்றும் இவற்றைக் கொள்ளவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதை மறுத்து, இதற்கெல்லாம் இன்னும் சில காரணங்களையும் வியாக்கியானங்களையும் அரச தரப்புக் கூறக்கூடும். போரின் வெற்றிக்காகப் பாடுபட்ட படையினருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடைய பங்களிப்பை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுவதுமே இப்போதுதான் - தங்களுடைய ஆட்சிக் காலத்திற்தான் - ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, இதை - இந்த நிலையில் வருகின்ற சுதந்திரதினத்தை பிரமாண்டமான முறையில் முழுமைப்படுத்திக் &amp;nbsp;கொண்டாடுவது அவசியமே என்பது இன்னொரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அபிவிருத்தியில் மக்களைப் பங்கேற்க வைப்பது, மக்களுக்கு அபிவிருத்தி பற்றிய எண்ணக்கருக்களை விதைத்தல், அவர்களை அபிவிருத்தியோடு இணைத்தல் என்ற நோக்கங்களுக்காகவே இந்தமாதிரியான கொண்டாட்டங்கள் நடக்கின்றன என்ற இன்னொரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே காரணங்களும் நியாயங்களும் தாராளமாகச் சொல்லப்படலாம். இவற்றில் நியாயமும் இருக்கலாம். அதேவேளை இந்தக் கொண்டாட்டங்களுக்கு நிகரான கேள்விகளும் எதிர்ப்புகளும் உள்ள என்பதையும் நாம் கவனிக்க வேணும். அவையும் மக்களுடன், நாட்டின் எதிர்காலத்துடன் சம்மந்தப்பட்ட கேள்விகளே. அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியானாலும் கொண்டாட்டங்களை அரசாங்கம் முதன்மையாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி நாடு முழுவதும் செல்கிறார். அவர் அப்படிச் செல்லும்போது பெருமெடுப்பிலான நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகளும் நடக்கின்றன. அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ செல்கின்ற இடங்களுக்குக்கூட உலங்குவானூர்தியையே பயன்படுத்துகிறார். இவ்வளவுக்கும் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. இதிலும் இளம் பாராளுமன்ற உறுப்பினர். தவிர, இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவராக நாமல் இருப்பதால், அதற்காக அவர் உலங்கு வானூர்தியிற் பயணிக்கும் அளவுக்கு அவருக்கான இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. ஆனால், அவருடைய &amp;nbsp;உலங்குவானூர்திப் பயணங்கள் கோலாகலமாக நடக்கின்றன என்பது மட்டும் உண்மை. இதற்காக எவ்வளவு பணம் செலவாகிறது என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட விசயங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட, ஜனாதிபதி வெளிநாடுகளுக்கான பயணங்களை அடிக்கடி மேற்கொள்கிறார். அதிகமான பிரதானிகளோடு வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் இலங்கையின் தலைவர் மகிந்த ராஜபக்ஷதான் என்பது பலருடைய மதிப்பீடு. ஒரு தடவை சீனாவுக்கு அவர் பயணிக்கும்போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 300 க்கு மேற்பட்ட பிரதானிகளோடு பயணித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே நாட்டுக்காகத்தான். ஆமாம், அவர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். மக்களையும் இதை ஏற்கும்படி கூறுகிறார்கள். எல்லாமே நாட்டுக்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி இவ்வளவையும் இந்த அரசாங்கம் செய்வதற்கான தற்துணிவைக் கொடுத்தது, போரில் அது பெற்ற வெற்றியே. இந்த வெற்றியானது அரசாங்கத்தை கேள்விகளின் விசைக்கு அப்பாலான ஓரிடத்தில் கொண்டு போய் விட்டுள்ளது. ஆகவே, கேள்விகளற்ற உலகத்தில் எதற்குமே பதலளிக்க வேண்டிய அவசியமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணத்தை இந்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் காட்டியது, திருமதி சந்திரிகா குமாரதுங்கதான். அவருடைய ஆட்சிக்காலத்தில் அவர் பெற்றுக்கொண்ட, போரின் வெற்றிகள் அவரை நிதானமிழக்க வைத்தன. அல்லது எல்லையற்ற உற்சாகப் போதையை அவருக்கு ஏற்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;1995 இல் ‘றிவிரஸ’ என்ற இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணத்தைப் புலிகளிடமிருந்து படையினர் கைப்பற்றியபோது அதைப் பிரமாண்டமான வெற்றிவிழாவாக்கிக் கொண்டாடி இதற்கான முதற்புள்ளியை அவரே உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, 1996 இல் ‘சத்ஜெய’ என்ற இன்னொரு இராணுவ நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிய போதும் அதை விழாவாக்கினார் சந்திரிகா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்காக ‘ஜெயசிக்குறு’ என்ற மிகப் பெரிய, நீண்ட இராணுவ நடவடிக்கையை அவர் நடத்தினார். ஆனால், அந்த நடவடிக்கையைப் புலிகள் முறியடித்துத் தோல்வியாக்கிய காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நோக்கம் நிறைவேறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதை இந்த அரசாங்கம், தான் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. போரில் பெற்ற பெரு வெற்றியானது, போர் வெற்றியை மட்டுமன்றி, தான் நினைக்கின்ற – தான் செய்கின்ற அத்தனையையும் விழாவாக்கிக் கொண்டாடுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கேதான் நிச்சயமாகவே அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியை நாம் முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. போரின் வெற்றியை வைத்துக்கொண்டு நாட்டையும் மக்களையும் ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது. அப்படி வைத்திருப்பது பொறுப்புள்ள அரசுக்கும் அரசியல் முதிர்ச்சியுடைய தலைமைக்கும் நல்லதுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிந்த பின்னரும் நாடு பொருளாதார நெருக்கடிகளில்தான் தொடர்ந்துமிருக்கிறது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. புதிய உற்பத்திகளுக்கான ஏற்பாடுகளின் வீதமும் தன்மையும் போதவில்லை. வாழ்க்கை நிலைவரம் மிக மோசமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அரசியற் தீர்வு முன்வைக்கப்படவில்லை. அரசியல் நெருக்கடிகள், ஜனநாயக மேம்பாடு, ஊடக சுதந்திரம், சனங்களுடைய மனக்குறைகள் எதுவும் உரியவாறு சீர்பெற்றதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இலங்கையின் சிறு பான்மைச் சமூகங்கள் இரண்டாம் நிலையில் அதே விலகல் மனவுணர்வுடன்தான் வைக்கப்பட்டுள்ளனர். பொதுவாகச் சொன்னால், நாடு சரியாக முறைப்படுத்தப்படாமலே இன்னும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காயங்களிலிருந்தும் வலிகளிலிருந்தும் துயரங்களிலிருந்தும் சனங்கள் இன்னும் விடுபடவில்லை. அதிலும் வடக்குக் கிழக்கு மக்கள் பிரச்சினைகளின் மையத்தை இன்னும் கடக்கவேயில்லை. ஏறக்குறைய இதே நிலைதான் மலையகத்திலும் நாட்டின் பிற பின்தங்கிய பிரதேசங்களிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தினசரி ஊடகங்களின் வழியாகவும் நேரிலும் யாரும் பார்க்க முடியும். இதற்கெல்லாம் பூதக்கண்ணாடிகளோ, மூன்றாவது நான்காவது கண்களோ தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. நாட்டில் முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. கிராம மட்டத்திலான – சமனிலைப்பட்ட அபிவிருத்தியிலேயே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதே என யாரும் கேட்கக் கூடும். இருக்கலாம். ஆனால், இதன் அடைவு மட்டம் தேவையின் அளவுக்குப் போதாமலுள்ளது என்பதே இங்கே பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியும் தோல்வியும் இருமுனையிலும் கூருள்ள கத்தியைப் போன்றன. கவனமாக இவற்றைக் கையாளவில்லை எனில், இரண்டுமே ஆபத்தானவை. இரண்டும் மிக மோசமான உளநிலையை உருவாக்கக் கூடியன. ஒன்;றில் மோசமான போதையும் அதிகார வெறியும் எல்லை கடந்த உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியது. கண்மண்தெரியாமல் நடக்கும் நிலை என்று சொல்வார்களே, அதை ஒத்த நிலையை உருவாக்கக் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றது மோசமான உளச்சோர்வையும் பின்னடைவு மனநிலையையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்கக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் அரசாட்சி செய்வதும், இந்தப் போக்கைக் குறித்துச் சிந்திக்காமல், இதற்கே ஒத்துப்பாடி ஆதரவளித்து சிறு நன்மைகளைப் பெறுவதும் மிப்பேராபத்திலும் பேரழிவிலுந்தான் கொண்டு போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஒன்றைக் கூறலாம், ‘பெருங்கொண்டாட்டங்களுக்குச் செலவளிக்கும் நிதியில் மூன்றிலொரு பங்கை மக்களின் நல்வாழ்வுக்காக, பாதிக்கப்பட்ட மக்களின் அவசியத்தேவைகளுக்காக ஒதுக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பாதுகாப்புணர்வுமே அமைதிக்குமான அத்திவாரத்தை அவை இடும்.’&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-4046751854275849103?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/4046751854275849103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/4046751854275849103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/4046751854275849103'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_20.html' title='கேள்விகளைச் சுமக்கும் பயணங்கள்'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-xf2kcTtyTa0/T0JPZo_ED_I/AAAAAAAAAMc/4Gj2z6x3an4/s72-c/images+(61).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-5795741966593108969</id><published>2012-02-17T03:31:00.000-08:00</published><updated>2012-02-17T03:33:35.898-08:00</updated><title type='text'>உபாயமும் அதிகாரமும் - 03</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-b93eMSs7EDg/Tz46ARnMKWI/AAAAAAAAAMU/FAEQrCmDqjU/s1600/images+(54).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-b93eMSs7EDg/Tz46ARnMKWI/AAAAAAAAAMU/FAEQrCmDqjU/s1600/images+(54).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாசியப் பிராந்தியத்தில் சிங்கள இராசதந்திரத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக 'இந்தியா என்ற பென்னாம் பெரிய நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை தன்னுடைய இராசதந்திரத்தினாலேயே – உபாயத்தினாலேயே - தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதில் சிங்கள இராசதந்திரத்தின் சிறப்பைக் காணலாம்” என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது “யானைக்குத் தும்பிக்கை பலம் என்றால் எலிக்கு வளை பலம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் சிங்கள இராசதந்திரிகள்” என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் அச்சுறுத்தல் - தமிழ் நாட்டின் படையெடுப்பு அபாயங்கள் - சிங்களவர்களைத் தேர்ந்த இராசதந்திரத்தை நோக்கி அவர்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கலாம்.&lt;br /&gt;மேலும் கடந்த அறுநூறு ஆண்டுகளாக பல தரப்பினரின் ஆதிக்கப்போட்டிக்கான களமாக இலங்கை இருப்பது இன்னும் அவர்களை இந்தத் துறையில் தேர்ச்சியுடையவர்களாக்கியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றபடியால்தான் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன் துலக்கமான தனியான அடையாளங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதிலும் தென்னாசியப் பிராந்தியத்தில் - ஏன் உலகிலேயே – மிகச் சிறிய தரப்பினராக இருந்துகொண்டே வலுவானவர்களாக – தாக்குப் பிடிக்கும் திறனுடையவர்களாக - சிங்களவர்கள் &amp;nbsp;இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்களிடம் உருவாகிய இந்த இராசதந்திரம் அவர்களை அதிகாரத் தரப்பினர் ஆக்கியதுடன், மேலும் உபாயங்களில் நம்பிக்கையுள்ளவர்களாகவும் தேர்ச்சியுடையவர்களாகவுமாக ஆக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;‘அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக இருக்கும் போது அதையொட்டி உபாயங்களும் தேர்ச்சியுறும்@ வளரும்’ என்று சொல்வார்கள். இது சிங்களத்தரப்புக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றபடியால்தான் இலங்கையில் மிகச் செழிப்பான இராச்சியங்களைக் கொண்டவர்களாகவும் புகழுடைய மன்னர்களைக் கொண்டதாகவும் சிங்கள வரலாறு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மகாவம்சம் புனைவுகளை அதிகமாகக் கொண்ட வரலாற்று நூலாக இருப்பினும் அது சிங்கள ஆதிக்கத்தரப்பினுடைய உபாயத்தின் விளைவு அல்லது வெளிப்பாடு எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சக்திவாய்ந்த சிங்களத்தரப்பின் உபாயம் இப்போது நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இதற்குக் காரணம் அது இனவாதத்திற்குள் சிக்கியிருப்பதே. இனவாதம் என்பது குறுகிய அரசியல் எண்ணமாகும். அதேவேளை அது தவறானதாகும்.&lt;br /&gt;ஆனால், உபாயங்களில் தேர்ச்சியுடைய தரப்புகள் இந்த மாதிரித் தவறான அரசிலிலும் கணிசமான காலம் வெற்றிகளைப் பெற்றேயிருக்கும். &amp;nbsp;இதற்குக் காரணம் இவற்றின் தேர்ச்சியான உபாயங்களின் மூலம் இவை, தங்கள் நெருக்கடிகளை மிக இலகுவாகக் கடந்த விடக் கூடியனவாக இருப்பதேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இறுதியில் இந்த வகையான அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் உபாயம் நிச்சயம் தோல்வியிலேயே போய்முடியும். இதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளம் உதாரணங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அதிக நெருக்கடியை இலங்கையில் – சிங்கள இராசதந்திரம் சந்தித்திருக்கிறது. அந்த நெருக்கடிகளைத் தன்னுடைய தேர்ச்சியான அணுகுமுறையின் மூலம் அது வென்றும் வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, இந்திய நெருக்கடி 1987 இல் இலங்கைக்குப் பெரிய சவாலாகவே இருந்தது. அதையும் விட 1980 களில் தமிழ்ப் போராளிகளை இந்தியா தனக்குச் சாதகமாக வளர்த்துக் கையாண்டது. ஆனால் அத்தனை இயக்கங்களையும் இன்று இலங்கை (சிங்கள உபாயம்) தோற்கடித்துத் தன்வசப்படுத்தி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் சிங்கள உபாயத்தின் வெற்றி. இந்தியா வளர்த்த குழந்தைகள் இப்போது இலங்கையின் பிள்ளைகளாகி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஒரு வகையில் சிங்கள அதிகார வர்க்கமும் அதைத் தாங்கும் சிங்கள உபாயமும் தோல்விகளை அல்லது சரிவுகளை இந்தக் காலகட்டத்தில் சந்தித்திருக்கிறது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை ஒடுக்க முற்பட்டவேளையிலேயே சிங்கள உபாயத்தின் தோல்வி ஆரம்பமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்குமுறை என்பது தவறான அரசியல் வழிமுறையாகும் என்று கண்டோம். என்னதான் நுட்பங்களையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தினாலும் ஒடுக்குமுறையை ஒரு போதும் தளர்வற்றுத் தொடரமுடியாது. எவ்வளவு பலத்தோடிருந்தாலும் ஆதிக்கம் ஒருநாள் முடிவுக்கு வந்தே தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிரிக்காவை மேற்குலகம் ஆக்கிரமித்திருந்தது. கறுப்பர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இறுதியில் என்ன நடந்தது? ஒரு நாள் வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டவும் வேண்டியிருந்தது. இங்கே வெள்ளையர்களின் அத்தனை உபாயங்களும் தோற்றுப்போயின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜித்தை வைத்திருந்த பிரித்தானியா – ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தும் பிரித்தாளும் தந்திரத்தில் பேர் பெற்ற பிரித்தானியா- &amp;nbsp;தன்னுடைய ஆதிக்கக் கரங்களை உலகெங்கிலும் இருந்து &amp;nbsp;பின்னே எடுக்க வேண்டிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால், கி.பி 1400 களிலிருந்து ஏறக்குறைய ஆறுநூற்றாண்டுகள் வரையில் உலகத்தின் ஏனைய பகுதிகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது ஐரோப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இன்று இந்த நிலைமை இன்னும் மாறியுள்ளது. இப்போது பல நாடுகள் சுயாதீனமாகவே இருக்கின்றன. பல சமூகங்களும் சுயாதீனமுடையவையாக மாறியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அறுநூறு ஆண்டுகால ஆதிக்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த உபாயம் ஒருபோது முடிவுக்கு வந்ததே உண்மை. இதை நாம் கவனித்துக் கொள்ள வேணும்;.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் குறியாக இருக்கும் சிங்கள அதிகார வர்க்கம் அதற்கான உபாயங்களைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறது. இதனால், அது, வெளிச் சக்திகளையும் உள்நாட்டுச் சக்திகளையும் தனது ஒடுக்குமுறை அரசியலுக்குச் சார்பாக – சாதகமாகப் பயன்படுத்த விளைகிறது. இதற்காகவே அது தன்னுடைய மூளையின் பெரும்பகுதியையும் செலவழிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை சிங்கள அதிகாரவர்க்கத்தைப் பணிய வைக்க விரும்பும் உள் மற்றும் வெளிச் சக்திகள் சிங்களத் தரப்பிற்கு எதிராக இருக்கும் தமிழ்த்தரப்பை தேவைக் கேற்றமாதிரியும் இனவாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்றமாதிரியும் பயன்படுத்திக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது சிங்களத் தரப்புக்குப் பல சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளையே கொடுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகாலத்தினுள், சிங்கள அதிகார வர்க்கம் &amp;nbsp;பல நெருக்கடிகளை உள்நாட்டுச் சக்திகளாலும் வெளிச் சக்திகளாலும் சந்தித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, மேற்குலகம், ஐ.நா அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் என வெளி நெருக்கடிகளாலும் போராட்ட இயக்கங்கள் - குறிப்பாக விடுதலைப் புலிகள் என உள் நெருக்கடிகளாலும் சிங்கள அதிகார வர்க்கம் நெருக்கடிப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நெருக்கடிகளால் இலங்கைத் தீவே பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியேற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் உபாயங்களைக் கையாண்டபோதும் சிங்கள அதிகார வர்க்கம் நினைத்ததைப் போல ஒடுக்குமுறை என்பது இலகுவானதாக இருக்கவில்லை. எவ்வளவுதான் சிறப்பான உபாயங்களைப் பிரயோகித்தாலும் ஒடுக்குமுறையின் எதிர்விளைவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தடுக்க சிங்கள அதிகார வர்க்கத்தினால் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ஒடுக்குமுறையினால் தமிழர்கள் மட்டும் அழிவுகளையும் இழப்புகளையும் வேதனைகளையும் துயரத்தையும் பதற்றத்தையும் பெறவில்லை. சிங்களவர்களும் அழிவுக்கும் இழப்புக்கும் வேதனைக்கும் நெருக்கடிக்கும் பதற்றத்துக்கும் உள்ளானார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒடுக்குமுறையின் விளைவுகளால், சிங்களத் தலைவர்கள் பலரை அது &amp;nbsp;இழந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இனப்போரினால் பலியிடப்பட்டிருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலிழந்தும் கையிழந்தும் இருக்கின்றனர். பல கோடிக்கணக்கான சொத்திழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன ஒடுக்குமுறையினால் இலங்கைத் தீவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இது சிங்கள மக்களின் வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அத்தனைக்கும் சிங்கள அதிகார வர்க்கம் உருவாக்கிய போரே காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை மட்டுமல்ல, இன ஒடுக்குமுறைப் போர் தீவிரம் பெற்று அது மனிதாபிமான எல்லைகளுக்கப்பால், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களையே பலியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் இன்று பெரும் மனித உரிமை மீறல்களாக்கப்பட்டு சர்வதேசத்தின் முன் விசாரணை நடத்தும் அளவுக்கும் தண்டனையைப் பெறவேண்டிய நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளன. இப்போது தமிழர்களை விடவும் சிங்களத் தரப்பினரே அதிகமாகக் கலங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் முன்னே சிங்களவர்கள் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிந்தாலும் அது ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகத்தை அடையாளப்படுத்தவில்லை. ஆனால், சிங்களத் தரப்பில் ஒட்டுமொத்தச் சிங்களச் சமூகமும் இதைத் தன்னுடைய தலையில் விழுந்துள்ள அடியாகக் கருதும் அளவுக்கே நிலைமையுள்ளது. இதை ஏற்படுத்தியதே சிங்கள இனவாதந்தான். அதாவது, சிங்கள இனவாதத்தைப் பாதுகாக்கும் அதிகாரத்தரப்பின் உபாயமே.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள உபாயம் எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று வந்தாலும் அதை ஒரு தீய பிசாசைப்போலச் சூழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நெருக்கடிகளை அதனால் தடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம் முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல அது பின்பற்றும் இனவாதமேயாகும். அதாவது தவறான அரசியல் அணுகுமுறைகளேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சனங்களை அழித்து, சொத்துகளை அழித்து, நாட்டை அழித்து, இன்று தன்னுடைய கழுத்தில் தானே சுருக்குக் கயிற்றைப் போட்டிருக்கிறது இந்தத் தவறான உபாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த நெருக்கடியிலிருந்தும் நாளைக்கு சிங்களத் தரப்பு மீண்டு விடலாம். போரைச் செய்வதற்கும் புலிகளை ஒடுக்குவதற்கும் சர்வதேச சமூகத்தைத் தன்னுடைய உபாயங்களால் வெற்றி கொண்ட சிங்களத்தரப்பு இதிலும் வெற்றியடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இனவாதத்தைத் தொடரும்வரையில் அதனைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பல நெருக்கடிகள். இதைத் தடுப்பதற்கு எந்த உபாயத்தினாலும் முடியாது. இறுதியில் ஒருநாள் இந்த உபாயம் தோல்வியில் முடிந்து சமாதிக்குச் சென்று விடும். இது விதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, உபாயங்கள் என்பது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அவற்றின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தியைப் பயன்படுத்தி மரத்தையும் வெட்டலாம். மனிதரையும் வெட்டலாம். இதில் எதைச் செய்ய அதைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் நமது அறிவு தங்கியிருக்கிறது. நமது பண்பும் தங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-5795741966593108969?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/5795741966593108969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/5795741966593108969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/5795741966593108969'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/03.html' title='உபாயமும் அதிகாரமும் - 03'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-b93eMSs7EDg/Tz46ARnMKWI/AAAAAAAAAMU/FAEQrCmDqjU/s72-c/images+(54).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-2037860699401294942</id><published>2012-02-16T07:26:00.000-08:00</published><updated>2012-02-16T07:26:59.349-08:00</updated><title type='text'>மனச்சாட்சியில் ஓட்டைகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-iJuLLJm916M/Tz0fvBYxwrI/AAAAAAAAAMM/aXdpoebV9hY/s1600/images+(60).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-iJuLLJm916M/Tz0fvBYxwrI/AAAAAAAAAMM/aXdpoebV9hY/s1600/images+(60).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணல் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘வீடற்றவன்’ என்ற ஒரு நாவலை மலையகத்தின் மூத்த எழுத்தாளராக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். இலங்கையின் மத்தியிலுள்ள மலையகப் பகுதியில் இருக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு வீடற்ற வாழ்க்கை என்பது நூற்றாண்டுகளின் நீள்துயரம். அவர்களுடைய வீடுகள் என்பது, லயங்களே. ஏறக்குறைய சேரிப்புற வாழ்க்கை நிலவரத்தை ஒத்த அமைப்பு இந்தக் குடிசைகள். வசதிகளே இல்லாத லயங்களில் மந்தைகளைப் போல வாழ நிர்ப்பந்திங்கப்படும் நிலையை சி.வி வேலுப்பிள்ளை எழுதியிருந்தார்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த மக்களுக்கு வீடு மட்டுமல்ல காணியே இல்லை. ஆனால், நூற்றாண்டுகளாக இவர்கள்தான் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் மாடாக உழைத்து இலங்கையின் பெரும்பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய காணியில்லாப் பிரச்சினையை மையப்படுத்தி ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ என்ற கதையை 1949 இல் எழுதியிருந்தார் அ.செ.மு. உரிமையற்ற மனிதர்களின் கதை என்ற வகையில் பின்னர், இது மிகப் புகழ்பெற்ற சிறுகதையாகியது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதெல்லாம் மலையத்தின் - மலையகத்தமிழர்களின் நிலைமை.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இப்பொழுது இதையும் விட மோசமான கட்டத்தில் இருக்கின்றனர் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள். இந்தப் பிரதேசங்களில் வாழுகின்ற பல குடும்பங்களுக்குக் குடியிருப்பதற்கே ஒரு துண்டு காணி இல்லை. காணியில்லாதவர்களுக்கு வீடெப்படி இருக்க முடியும்? அகதி வாழ்க்கை முடிந்து ஊருக்குத் திரும்பினாலும் இவர்கள் குந்த ஒரு குடிநிலம் இல்லாத நிலை. &amp;nbsp;ஆனால், இவர்கள் போராட்டத்திலும் யுத்தத்திலும் ஏராளம் விலைகளைக் கொடுத்தவர்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதேவேளை தமிழ் அரசியற் பிரமுகர்களிடமும் தலைவர்களிடமும் பெருந்தொகையான காணிகள் ஏக்கர்க்கணக்கில் பராமரிப்பின்றிய நிலையிலேயே உள்ளன. மேலும் புலம்பெயர்ந்திருக்கின்ற மக்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்குத் தாராளமான அளவில் நாட்டில் காணிகள் உள்ளன. இந்தக் காணிகளில் ஒரு சிறு பகுதியை ‘மனம் உவந்து’ ஒவ்வொருவரும் பகிர்ந்தளித்தால் தங்களுடைய இன்றைய காணியில்லாத – வீடில்லாத அவலநிலை தீர்ந்து விடும் என்று சொல்கிறார்கள் காணியற்ற ஈழ மக்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறுபக்கத்தில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாக இருப்பது காணி தொடர்பான பிணக்கு. காணி அதிகாரத்தைத் தமிழர் தரப்பு பிரதான அம்சமாகக் கோரிவருகிறது. இதைக் கொடுப்பதற்குப் பின்னடித்துக்கொண்டேயிருக்கிறது சிங்களத்தரப்பு. சிங்களத்தரப்பிடமிருந்து காணிக்கான அதிகாரத்தைப் பெற விரும்பும் நாம் காணியற்ற மக்களுக்கு எங்களிடம் இருக்கின்ற காணிகளில் ஒரு சிறு அளவைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதே பொது விருப்பமாகும். இந்த நிலையில் இந்தச் சுவையான முரண்களைக் குறித்துப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராகிய ராதாகிருஸ்ணன் மாரியம்மா என்பவரிடம் உரையாடினோம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இவருடைய கணவர் போரின்போது நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். ஒரு மகன் போராட்டத்தில் சாவடைந்துவிட்டார்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;யுத்தத்துக்குப் பிறகு எப்படி இருக்கிறீங்கள்? நிலைமை எப்பிடி இருக்கு?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்தைச் சொல்றது? எங்களுக்கு எப்பவும் பிரச்சினைதான். பாருங்க, இப்ப இருக்கிறதுக்கு காணியில்ல. காணியில்லைங்கிறதால வீடு குடுக்க முடியாதுங்கிறாங்க. அப்ப நாங்க என்ன பண்ண முடியும், சொல்லுங்க? இதப்போயி எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. ம், பாக்கிறம். அப்பிடீன்னு சொல்றாங்களே தவிர, யாருமே ஒண்மே பண்ணல. நாங்க இன்னும் துன்பப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதுக்கு முதல் எங்க இருந்தீங்க?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கதான் - கிளிநொச்சியிலதான் இருந்தம். அதுக்கு முன்னாடி கம்பளையில. 77 கலவரத்தில அடிச்சிக்கிட்டாங்க. ஓடி இங்கிட்டு வந்தம். அப்ப இந்தப் பக்கம் (கிளிநொச்சியின் மேற்கிலுள்ள உதயநகர்ப் பகுதியில்) காடு வெட்டி இருந்தம். நாங்க நாலு பொண்ணுங்க. அப்பாவுக்கு வயசாயிட்டு. அக்கா அவங்களுக்கு அந்தக் காணியக் குடுத்திட்டாச்சு. அப்புறம் எங்க ரண்டு பேருக்கு காணி கிடையாது. நாங்க மருத நகர்ப்பக்கம் கல்யாணமாகிப்பறம் இருந்தம். அதுல இருந்த பெரிய காணியில நாம குடியிருந்தம். ஏம் புருசன் அந்தப் பக்கத்திலதாங் இருந்தாரு. அவுங்க அப்பா, அம்மா எல்லாமே அந்தப் பக்கத்திலதான் ரெம்ப நாளா இருந்தாங்க. நாம்பளே அந்தக் காணியைப் பாத்து வெள்ளாமையைச் செஞ்சுட்டு வந்தம். இயக்கப் பெடியனுவள்கூட எங்களுக்குச் சப்போர்ட் பண்ணினாங்க. நாங்க அவுங்கள பாத்துக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குப் பின்னாடி, சண்டை வந்தப்பிறம் நாங்க ஓடிட்டுப் போறது, பின்னாடி வர்றது. இப்புடியே இருந்திச்சில்லா. கடைசீல நாங்க உசரப்பக்கமா அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி ஒரு கொட்டில போட்டுக்கிட்டு இருந்தம். பெடியங்களும் (இயக்கம்) ஒத்தாசையா இருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, எல்லாமே போயிட்டு. பின்னாடி, சண்டை வந்தப்பிறம், நாங்க ஓடிப்போயி, இந்தக் காடு கடெலெல்லாம் அலைஞ்சிட்டு, முகாமெல்லாம் போயி இப்ப வந்திருக்கம். இஞ்ச வந்தா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இப்ப எப்படி இருக்கிறீங்க?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, அத என்னத்தச் சொல்ல? இப்ப நாம இருக்கிற இந்தக் காணிக்கு ஆளாளுக்கு ரண்டு பேர் வந்து அடிச்சிக்கிறாங்க. தங்க வீட்டுக் காணியாம். அவுங்க தாத்தாட காணி, அப்பாட காணின்னு என்னமோ சொல்லிக்கிறாங்க. இவ்வள நாளா எங்கிட்டு இருந்தாங்களோ... முன்னாடி ஒருத்தர்தான் என் வீட்டுக்காரர்ட அப்பா அவுங்கள இந்தக் காணீல கொண்டாந்து இருத்தினாராம். ஒரு அஞ்சாறு வருசத்துக்கப்பறம் அந்தாளும் வர்ல. வேற யாரும் இந்தப் பக்கமே வர்ல. நாமதான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டது. இல்லைன்னாக்கா இப்படி இந்த நிலம் இருக்குமா? காடெல்லாம் வளந்திருக்குமே. பாருங்க நாங்க வெச்ச தென்னப்புள்ளய காய்க்குது. இருவது புள்ள வெச்சம். இப்ப பதிமூணு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப வந்திருக்காங்க. சண்டை முடிஞ்சிருக்கில்ல. இப்ப பாத்து எல்லாருமே வர்ராங்க. அந்தா அந்தப் பக்கங்கூட யாரோ வந்து தங்கவூட்டுக் காணி அப்பிடீன்னு சொல்றாங்களாம். அங்க இருக்கிறவங்க நம்பள மாதிரி அம்பது அறுவது வருமா அங்கனயே இருக்கிறாங்க. இப்ப வந்து இடத்தை விடு. எழுந்திட்டு எங்கிட்டாவது போ அப்பிடீன்னா என்ன பண்றது, சொல்லுங்க?&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கிட்டக் கூட வந்து நாங்க இங்க இருந்து எழுந்துக் கிட்டு எங்கயாச்சும் எடம் பாத்துக்கிட்டு போங்க அப்படீன்னுறாங்க. அவங்க கூடத்தான் ஜீ. எஸ்ஸ_ம் (கிராம அலுவலர் அல்லது விதானையார்) இருக்கார். பத்திரம் எல்லாம் வைச்சிருக்காங்க. ரண்டு பேருந்தான். அவுங்களுக்க அடிதடி வேற. யார் வூட்டுக்காணிங்கிறதே அவுங்களுக்கப் பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;இம்புட்டு நாளும் வெளிநாட்டுல இருந்தாங்களாம். இப்ப வந்திருக்காங்க. இத்தினை நாள் நாங்கதான் இந்த நிலத்தப் பாத்தம். பாருங்க ஒரு பத்தை இருக்கா? ஒரு செடி இருக்கா. இந்தாளு எந்த நேரம்பாத்தாலும் எதையாவது செஞ்சிட்டிருப்பாரு. ராத்திரில – நிலாவில கூட காணிவேலை பாப்பாரு. எங்க வீட்டு வளவைப் போல இதைப் பாத்திருக்கோம். பிள்ளையைப் போல பாத்திருக்கோம். குடியிருக்கிற இடமெல்லா. ஆனா, இப்ப யாரோ வந்திருக்காங்க, தங்கவூட்டு நிலம்னு. என்ன பண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.டி.எஸ் (கிராம அபிவிருத்திச் சங்கம்) கிட்ட போனா அவங்க ரண்டு பக்கத்துலயும் நியாயம் இருக்கெங்கிறாங்க. அவங்க கையில பத்திரம் இருக்காம். அதனால அவங்களுக்குத்தான் நிலம் சொந்தம்கிறாங்க. ஆனா நாம ரொம்பக் காலமாக, ரண்டு மூணு தலைமுறைங்களா இங்கிட்டே இருக்கிறதால எங்களுக்கும் உரித்துண்டுங்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதெப்பிடி ரண்டு பக்கமும் ஞாயம் இருக்க முடியும், சொல்லுங்க? இந்த ஞாயத்தை ஏ.ஜி.ஏ ஏத்துக்கிட மாட்டேங்கிறாரு. அவருக்குச் சட்டந்தான் பெரிசுங்கிறார். பத்திரம் வைச்சிக்கிறவங்களத் தாம் எதுவும் பண்ண முடியாது. அவங்களா எதனாச்சும் பண்ணினாத்தாங்கிறாரு அவரு. அவங்க விரும்பி காணியைக் குடுத்தாத்தான் எதனாச்சும் செய்யலாம்கிறார் அவரு.&lt;br /&gt;&lt;br /&gt;அவருகிட்ட நம்ப நிலமையை சொல்லிப் பாத்தாச்சு. அதுக்கு என்ன பண்ண முடியும்கிறாரு. வேணும்னாக்கா அரசாங்கத்துக்க காணியில தேடிப்பாத்து எதனாலும் செய்ய முடியுமாம்னு பாக்கறேன் ண்றாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா நாம இத விட்டு இன்னொரு இடத்துக்க போகமுடியுமா? நாலு தலைமுறையா இங்க இருந்திட்டோம். இடமெல்லாம் பழகீட்டு. தொழில் பழகீட்டு. ஆட்களெல்லாம் பழகீட்டு. எல்லாத்தேயும் விட்டுட்டுப் போயிட முடியுமா? இன்னுமா பெட்டி படுக்கை எல்லாம் தூக்கிட்டு இடம்தேடி அலையணும்? இப்பிடியே அலைஞ்சிட்டிருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிட்டுப்போயி என்ன பண்ண முடியும்? இந்த பாருங்க, போன மாசம், இந்தியா கட்டிக் குடுத்த வீட்ட எடுத்திட்டு எங்க அக்கா பொண்ணு அங்க – அறிவியல் நகர்ப்பக்கத்தில ரொம்பக் கஸ்ரப்படுது. எடம் புதுசு. ஆக்களெல்லாம் புதுசு. அங்கிட்டு ஒரு தொழில் கிடையாது. அங்கிட்டிருக்கிற ஆக்கள்லாம் இங்கிட்டுத்தான் வயல் வேல, மேசன் வேலக்கெல்லாம் வர்ராங்க. எல்லாத்துக்கும் இது ஏலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிட்டு தண்ணிக்கே ரொம்பப் பாடு. ரண்டு மூணு நாளுக்கு ஒருக்கா தண்ணி விடுறாங்க. இருக்கி ஆக்கள்லாம் ரெம்பக் கஸ்ரப்படுதுகள். நாங் அங்கிட்டுப் போயிருந்தன். அங்க பாத்தா, ரொம்ப வருத்தமாயிருக்கு. புருசனை எழந்திட்டவங்க, புள்ளய எழந்திட்டவங்க அப்படீன்னுதான் எல்லாரும் இருக்காங்க. அக்கா பொண்ணுட புருசன் செல்லில செத்திட்டாரு. அவ ஒரு புள்ளயோட ரொம்பப் பாடுபர்ரா. இங்கிட்டு இருந்தப்ப, வயலுக்குப் போவ. ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் குடுத்தாங்க. எந்த நாளும் இல்லாட்டியும் நாலு ஐஞ்சு நாளுக்கு வேலை பாக்கும் அந்தப் புள்ள. ஆனா, அங்கிட்டு ஒண்ணுமே கிடையாது. நிவாரணம் கூட இல்லைன்னுட்டாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சரி, இந்தப் பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவில்லையா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லியிருக்கோம். ஆனா அவங்க இப்ப எதுவும் பண்ண முடியாதுங்கிறாங்க. காணிப் பிரச்சினை எல்லாமே இப்ப பாக்க முடியாது அப்பிடீன்னுட்டாங்க. அப்ப நாம என்ன பண்ணறது எண்ணு கேட்டா, அதுக்குப் பதில் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி ஒரு நிலைமைல என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க. நம்பளுக்குத்தான் வீட்டுத் திட்டம் கூட இல்ல. இந்த மாதிரி எவ்ளவோ ஆட்கள் இருக்கிறாங்க. காணி இல்ல அப்பிடீன்னுட்டு வீட்டு உதவியைக் கான்சல்ட் பண்ணிடறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப இந்த உதவியெல்லாம் கிடையாது. ஆனா இதுக்கு எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிடுறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அப்படியென்றால் இப்ப இதுக்கெல்லாம் நீங்கள் என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறீங்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமே பண்ண முடியாது. பாருங்க, இந்த மண்ணில இவ்வளவு காலமா இருந்திருக்கோம். இந்த இடத்திலதான் நாங்க வளந்தது. படிச்சது. கல்யாணம் பண்ணிக்கினதும் இங்கினதான். நம்பட புள்ளங்க பிறந்தது, நாம இருக்கிறது எல்லாம இங்கிட்;டுதான். ஆனா, இப்ப அவனவன் வந்து கிளம்பெங்கிறான். பாருங்கய்யா காலத்த.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நாள இவங்கெல்லாம் எங்கிட்டிருந்தாங்க? அட இப்பகூட இங்கவா இருக்கப்போறாங்க? நாளைக்கே போயிடுவாங்க. ஆனா சொத்த எடுத்துக்கப் போறாங்களாம். இது ஞாயமா சொல்லுங்க? இவ்வளவு காலமா இருந்து இந்த நிலத்தைப் பாத்திருக்கிறம். குடியிருந்திருக்கிறம். இப்ப வேரோட புடுங்கிறாங்கய்யா. அட இதுகூட அரசாங்க நிலந்தான். ஆனா அவங்க கையில பேமிற் (அத்தாட்சிப் பத்திரம்) இருக்குங்கிறாங்க. இதப்பத்தியெல்லாம் ஆருக்குத்தான் உண்மை தெரியுமோ!&lt;br /&gt;&lt;br /&gt;............ (சற்று மௌனமாக இருந்த பின்னர் மீண்டும் தொடர்ந்தார்)&lt;br /&gt;&lt;br /&gt;நம்மட துக்கம் போகாதய்யா. ஆளாளுக்கு வந்து துரத்திக்கிட்டே இருக்கிறாங்க. எல்லாருமே அதிகாரந்தான் பண்றாங்க. அதுக்கெல்லாம் ஒரு ஞாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;காணிப்பத்திரம் இல்லைன்னா, வீடு குடுக்க முடியாதுன்னா நாம என்ன பண்ணுறது? எல்லாருக்கும் வீடு கிடைக்குது. நம்மளக்கு இல்லை. நாம புள்ள குட்டிக்காரங்க. இந்தச் சண்டைக்குள்ள எல்லாம் இருந்து எவ்ளவு கஸ்ரமெல்லாம் பட்டம். ஏன் புருசங்கூட செத்திட்டாரு. புள்ள ஒண்டில்ல. இந்த நிலைமையில என்ன பண்ண முடியும்? குடும்பத்தில உழைக்கிற ஆட்களெ இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயசில என்னால எல்லா இடத்துக்கும் ஓடித் திரிய முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காணியற்ற ஆட்களுக்குக் காணி வழங்குவதைப் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறதே. அப்படியான ஒரு நிலை வந்தால் உங்களுடைய பிரச்சினை தீருமல்லவா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதுக்கு யாரு பொறுப்புச் சொல்றது? சும்மா இப்பிடிச் சொல்லிக்கிறாங்க. ரொம்பப் பேர் காணியில்லாம அலைஞ்சிட்டிருக்காங்க. ஒருத்தருக்கும் காணி குடுக்கிறதாக் காணல்ல. இப்ப இந்தியன் வீட்டில கொஞ்சப் பேருக்குக் குடுத்திருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எப்ப காணி குடுப்பாங்க? எப்ப நாங்க அதில வீடு கட்டிறது? இதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஒண்ணையுமே விவரமா யாரும் பேச மாட்;டேங்கிறாங்க. இந்த வீட்டுத் திட்டம் போயிடுச்சின்னா அவ்வளவுதான். பிறகு எதுவுமே கிடையாது. நாங்க குடிசைக்குள்ளதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதான் சொல்றேன். இதெல்லாம் நடகிற காரியம் இல்ல. அப்பிடி இருந்தா இப்பவே காணிக்கு ஒரு முடிவைச் சொல்லிடுவாங்க. இப்பதான காணிக்கு வழிவேணும். அப்புறம் எதுக்கு? இப்பதானே வீட்டைக்குடுக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இப்பிடியே சொல்லிக் கொண்டிருந்தால் உங்களுடைய எந்தப் பிரச்சினையும் தீராது. ஆனால், நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு. உங்களுடைய இந்தப்பிரச்சினையை விளங்கிக் கொண்டு உதவக்கூடிய ஆட்கள் யாரும் இல்லையா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் உதவ வந்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ண முடியும்? காணிக்குப் பத்திரத்தை அவங்களால வழங்கிட முடியுமா என்ன? அவங்க ஜீ.எஸ், ஏ.ஜீ.ஏ, ஆர்.டி.எஸ், எல்.ஓ இப்பிடி எல்லார்கிட்டயும் பேசிப்பாத்துட்டாங்க. ஆனா ஒரு வழியும் கிடைக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டம் போட்டிருக்காம். நீதி மன்றத் தடை வந்திருக்காம். அப்பிடியெல்லாம் சொல்லிக்கிறாங்க. முன்னாடி நாங்க இருந்த காணிக்கு போம் போட்டாங்க. நாங்க அத நிரப்பிக் குடுத்திருக்கம். ஆனா அதெல்லாம் இப்ப செல்லாதுன்னுட்டாங்க. இப்பிடியே எதெல்லாமோ சொல்லிச் சொல்லிக் காலத்தப் போக்கிக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன பண்றதுன்னே புரியல்ல. இனி திரும்பி நாம கம்பளைக்குப் போக முடியுமா? அங்கிட்டு எனக்கு யாரத்தெரியும்? இப்ப இங்கிட்டும் இருக்க முடியாது. அங்கிட்டும் போவ முடியாது. கடவுளே! நாலு புள்ளங்களையும் வெச்சிக்கிட்டு என்னதான் பண்ணப்போறனோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அப்படியென்றால், இப்ப நீங்கள் இருக்கும் காணிக்கு உரிமை கோரிக்கொண்டு வந்திருப்பவர்களிடம் உங்களுக்குக் கொஞ்சக் காணியைத் தரும்படி கேட்கலாமே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அவங்க எங்களோட பேச மாட்டேங்கிறாங்க. இந்த மாதிரிப் பிரச்சினை எங்களுக்கு மட்டுமில்ல. அந்தப் பக்கமா இன்னும் பத்துக்குடும்பங்க இதே மாதிரி இருக்கிறாங்க. அவங்களும் அவங்க இருக்கிற காணிக்கு வந்திருக்கிற ஆட்கள் கூடப் பேசியிருக்கிறாங்க. ஆனா அவங்க அதுக்குச் சம்மதிக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கட காணிக்குள்ள வேற ஆட்களை வெச்சிருக்கிறது நல்லதில்லன்னு சொல்றாங்க. எப்பிடிருக்கு நிலைமை பாத்தீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்ளவு நாளா நாமளே காணியைப் பாக்கணும். இப்ப மட்டும் அவங்களுக்கு நாம தேவை இல்ல. காரியம் முடிஞ்சிருக்கல்ல. அவ்வளவுதான். இனி நாமெல்லாம் யாருக்கும் தேவையில்ல. என்ன மனுசங்கப்பா இவங்கெல்லாம். என்னதான் படிச்சிருக்கிறாங்களோ!&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;குறிப்பு –&amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;யுத்தம் முடிந்த பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குத் திரும்பி வருவோர், தங்களுடைய காணி உறுதிகளைக் கொண்டு வந்து தங்களின் காணி மற்றும் சொத்து உரிமைகளை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். இதில் பலருக்கு ஏக்கர்க்கணக்கான காணிகள் பராமரிப்பின்றிய நிலையில் உள்ளன. சிலருடைய காணிகளை பல குடும்பங்கள் நீண்டகாலமாகவே பராமரித்து வந்திருக்கின்றன. ஆனால், காணி உறுதிகளைக் கொண்டு வருவோர் அந்த உறுதிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக்குடியிருப்பாளர்களை வெளியேற்றி வருகின்றனர். இப்படி வெளியேற்றப்படும் குடும்பங்கள் பெரும்பாலும் மிக வறிய – ஏழைக்குடும்பங்களாகவே உள்ளன.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதில் அரசாங்கத்தினால் குடியேற்றத்திட்டங்களின் போது வழங்கப்பட்ட காணிகளை விட்டு வெளியேறிப்போனோரும் உண்டு. இந்தப் பெண் இப்படியான காணி ஒன்றிற்தான் நீண்டகாலமாக வசித்து வருகிறார். இப்படிப் பல குடும்பங்கள் வன்னியில் உள்ளன. ஆனால், இப்பொழுது உருவாகியிருக்கும் போருக்குப் பிந்திய சூழலில் பலரும் தங்களுடைய காணிகளுக்கான உரித்தாவணங்களைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டு வந்து உரிமை கொண்டாட முயல்கின்றனர். தங்களுடைய உரித்தைக் கொண்டாடும்போது, இதுவரையில் யுத்தத்தின் மையத்தில் வாழ்ந்து கொண்டு இந்தக் காணிகளைப் பார்த்துப் பராமரித்தவர்களையும் சற்று மனங்கொள்ள வேணும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதனால் பல முரண்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தச் சூழலுக்குள் முப்பது, நாற்பது ஆண்டுகளாக காணிகளைப் பராமரித்து, அதற்குள்ளேயே வாழ்ந்து வந்த குடும்பங்களின் நிலைமையைக் கருத்தில் எடுக்காமல் உரித்துக் கொண்டாடும் மனோ நிலை மிகக் கவலை அளிக்கும் ஒன்றாகும். ஆனால், இதைக்குறித்து யாரும் வெட்கப்படுவதாகவோ சிந்திப்பதாகவோ இல்லை.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ்ச் சமூகத்திற்கும் காணிக்கும் பெரும் பிணைப்புண்டு. காணிக்காகவே – காணியின் எல்லைத் தகராறுகளாலேயே சொந்தச் சகோதரர்களைக்கூடப் பகைத்துக்கொள்ளும் மனநிலை உள்ளவர்கள் ஈழத்தமிழர்கள். இந்தப் பின்னணியில் இந்தப்பிரச்சினையை - இந்த ஏழை மக்களின் நிலையை யாரும் எளிதிற் புரிந்து கொள்ளலாம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மேலும் அரச காணிகளைக் காணியற்ற பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்குப் பின்னடிக்கும் அதிகாரிகள், அரசாங்கத்தின் செல்வாக்கோடு வரும் தனியாருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் தாராளமாகவே காணிகளை வழங்குகின்றனர்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சட்டத்திலும் நிர்வாகத்திலும் தாராளமாக இந்தமாதிரி ஓட்டைகள் இருப்பதொன்றும் புதிதல்ல. ஆனால், மனச்சாட்சியில் ஓட்டைகள் விழுவதே ஏற்றுக்கொள்ளக் கடினமான விசயம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-2037860699401294942?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/2037860699401294942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2037860699401294942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2037860699401294942'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_16.html' title='மனச்சாட்சியில் ஓட்டைகள்'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-iJuLLJm916M/Tz0fvBYxwrI/AAAAAAAAAMM/aXdpoebV9hY/s72-c/images+(60).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-7446469825032821093</id><published>2012-02-05T18:56:00.000-08:00</published><updated>2012-02-05T18:56:52.348-08:00</updated><title type='text'>எல்லைகடந்த அதிகாரம் = ஜனநாயக நெருக்கடி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-3_6ZzAYR3mI/Ty9BWgZWzII/AAAAAAAAAME/wv5mqyuOSMg/s1600/images+(58).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-3_6ZzAYR3mI/Ty9BWgZWzII/AAAAAAAAAME/wv5mqyuOSMg/s1600/images+(58).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசியலில் தமிழ், சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. முன்னர் இருந்த நெருக்கடிகளுக்குப் போர் காரணமாகக் காட்டப்பட்டது. இப்போது போர் முடிந்த பிறகு, காரணங்களைக் காட்ட முடியாது விட்டாலும் தேசிய பாதுகாப்பு என்றொரு காரணமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கமே ஆட்சியிலிருக்கிறது என்பதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தனிநபருக்கான அதிகாரத்தைச் செறிவாக்கியுள்ளது என்ற காரணமும் பெரும்பாலான கட்சிகள் அங்கத்துவம் செய்யும் அரசாங்கமாக அது இருக்கிறது என்பதும் அதிகாரத்தை அரசுக்குக் குவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்காரணமாக ஆட்சியின் மையப்பகுதியில் இருக்கும் தலைவர்கள் தங்களின் சக்தியை மிகவலுவுடையதாக்கியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதியிலே ஓடுகின்ற பஸ் வண்டிகளில் இருந்து அரசாங்கத்தின் உயர் பீடங்கள் வரையில் இந்த அதிகாரத்தின் அடையாளங்களைக் காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் ஒரே அடையாளம் என்ற வகையில் நாட்டின் தலைவரும் அவருடைய குடும்பத்தினரும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு யாரும் சில நியாயங்களைக் கற்பிக்கலாம். ஆனால், இதெல்லாம் நிச்சயமாக ஒரு ஜனநாயக நாட்டுக்கு அழகானவையே அல்ல. இது மன்னராட்சிக் காலமோ குடும்ப ஆட்சிக்கான சட்டங்கள் இயற்றப்பட்ட நாடோ அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பிறருக்கு இடமளித்தல், பிறருக்கும் பிறவற்றுக்கும் விட்டுக்கொடுத்தல், ஏனையவற்றையும் முன்னிலைப்படுத்தல், சமமாக நடந்து கொள்ளுதல் என்ற அம்சங்களை வளர்ப்பதே போருக்குப் பிந்திய நாட்டின் அவசியத் தேவைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடப்பாடுகளைப் பற்றிய அக்கறையற்ற மீறல்களாலும் உச்சகட்ட அடக்குதல்களாலும் மோசமாகக் காயடிக்கப்பட்ட ஜனநாயகச் சூழலை மீண்டும் உருவாக்க வேண்டியுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய புரிதலையும் அதன் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் இனரீதியான போர் நடைபெற்றதொரு நாட்டில் நல்ல சமிக்ஞைகள் காண்பிக்கப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை அந்தச் சமிக்ஞைகள் உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதன் மூலமாக அவர்களின் மனதில் நிரந்தரமாகவே குடியேற முடியும். இதற்கொன்றும் கடினமாக வேலை செய்ய வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சனங்களுக்கு விசுவாசமாக நடந்தாற் போதும். யாருடையதையும் யாருக்கும் எடுத்துக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் காரியங்களைச் செய்தால், அவற்றைப்பற்றி மக்களுக்கு முறையாக எடுத்துச் சொன்னால், இன ஐக்கியத்தின் அத்திபாரத்தை உருவாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதற்குப் பதிலாக தான்தோன்றித் தனமாகப் பேசுவதும் எழுந்தமானமாக நடந்து கொள்வதும் கேள்விகளுக்கு அப்பாலான பிராந்தியத்தில் தங்களை வைத்துக்கொள்வதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இலங்கை அச்சத்தினால் உழன்று கொண்டிருக்கிறது. வெளிநாடுகளின் அழுத்தங்கள் ஒரு பக்கம் இலங்கையைக் கலங்கடிக்கின்றன. உள்நாட்டுச் சக்திகளின் கொந்தளிப்பான மனநிலையை இட்டும் அரசாங்கம் கலங்கிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அரசாங்கத்தின் உளநிலை அமைதியில் இல்லை. இந்த நிலையில் அதனால் எப்படி நாட்டின் சுபீட்சத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று கேட்கிறார் ஒரு மூத்த சிங்கள ஊடகவியலாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;உளநிலையில் அச்சத்தின் பாரம் அதிகரித்தால் குழப்பமும் பதற்றமும் சந்தேகமும் ஏற்படும். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய காலம் என்பது இலங்கையைப் பதற்றமான சூழலுக்குள்தான் தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் சிந்தனையாளர்களும் நாட்டை இந்த நிலையில் இருந்து மீட்பதற்காகப் பாடுபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் பிரதான மதங்களாக இருக்கின்ற பௌத்தமும் கிறிஸ்தவமும் சைவமும் இஸ்லாமும் கூட இரத்தத்தில் தோய்ந்தனவாகவோ இரத்தத்தில் தோய்க்கப்பட்டதாகவோதான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜேர்மனியில் ஹிட்லருக்கு ஆதரவளித்ததைப் போன்ற ஒரு மனநிலையிலும் நியாய உருவாக்கத்திலுந்தான் இலங்கையின் மக்கள் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக அவர்கள் வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தின் வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்கும் பின்னிற்கவில்லை. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையெனில், அமைதியும் வளமும் நீண்ட பாரம்பரியமும் மதக் கட்டுப்பாடுகளை அடியொற்றித் தமது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் வகுத்துக்கொண்ட இலங்கையின் சமூகங்கள் இவற்றுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டதை என்னவென்பது?&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட இனவன்முறைகளுக்கான அடிப்படைகள் எப்படி உருவாகின? இந்த வன்முறைகளின்போது ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக யாரும் &amp;nbsp;வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தினுடைய வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்குப் பின்னிற்கவில்லையே. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடும் விசயத்தை மீள்பதியலாம். அது இரண்டாம் போரின்போது யூதர்களின் மீது, நாஜிகள் உச்ச வன்முறையை நிகழ்த்திக்கொண்டிருந்த காலம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சூழலைப் பற்றிய தன்னுடைய கேள்விகளை ஜெயமோகன் எழுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சாதாரண மக்கள் எப்படி இந்தக் கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள்’.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் எப்படி நிகழ்ந்தன?&lt;br /&gt;&lt;br /&gt;காலம் மாறியிருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் முடிந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிந்திய காலம். அந்த நூற்றாண்டு முடிவுற்று இன்னொரு புதிய நூற்றாண்டு பிறந்து விட்டது. மனிதனின் அறிவியல் வளர்ச்சிகள் மிகப் பெரும் எல்லையை நோக்கி விரிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தவறுகளில் இருந்தும் குற்றங்களில் இருந்தும் போதாமைகளில் இருந்தும் மனிதனையும் அவனுடைய சமூகத்தையும் விடுவித்துக்கொள்வதற்கான சிந்தனையும் தத்துவங்களும் தொழில் நுட்பமும் அறிவும் விஞ்ஞானமும் உழைப்பும் பண்பாடும் உருவாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவையெல்லாவற்றையும் நிராகரித்து விட்டு அல்லது இவற்றின் இடுக்குகளுக்குள்ளால் அதிகாரத்தைக் கைப்பற்றும் மனோபாவம் மட்டும் அதே விலங்குநிலையில் இன்னும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் மானுட குலத்தின் துயரவிதியா? இப்படி எண்ணும்படியே நிலைமைகள் உள்ளன. அரசியல் என்பது எதையும் எவரையும் பாதுகாப்பது, உருவாக்குவது, மேம்படுத்துவது என்ற அர்த்தத்துக்கு அப்பால், எல்லாவற்றையும் சிதைப்பது என்ற முறைமையில் - பழைய சுவடுகளின் தடத்தில் பயணிப்பது பொருத்தமானதே அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அரசியலின் பலவீனங்களை முதலீடாக்கிக் கொண்டு மேற்குலகின் எஜமானர்களும் ஏகாதிபத்தியர்களும் தங்களின் மூக்கை நுழைத்துக் கால்களைப் பதித்துக் கொள்கிறார்கள் உலகெங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிலையிற்தான் இன்றைய இலங்கையின் நிலைவரமும் உள்ளது. பதற்றமும் அந்நியச் சக்திகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து விடக்கூடிய நிலையும் அதிகரித்துள்ள சூழலில்தான் இலங்கை அரசியலும் ஆட்சியம் நடந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியாரின் தலையீட்டினால் வெளியாரைத் தவிர வேறு யாருக்குமே நன்மைகள் கிட்டாது. இதை மக்கள் புரிந்து கொள்வதும் குறைவு. மக்களுடன் உரையாடலைச் செய்வதற்கு யாருக்கும் நேரம் இல்லை. அதை யாரும் விரும்பிக் கொள்வதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் கேள்விகள் தங்களைக் காயப்படுத்தி விடக்கூடும். அல்லது நிர்வாணப்படுத்தி விடக்கூடும் என்று ஆட்சியாளர்களும் அரசியல் செய்வோரும் அஞ்சுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அரசியலைப் பொறுத்து மக்களின் கேள்விகளே அரசியலைச் சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயிருக்கு ஊற்றப்படும் நீரைப் போன்றும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சனங்களின் கேள்வி அரசியலாளர்களை யதார்த்தத்துடனும் உண்மையுடனும் இணைத்து வைத்திருக்கின்றன. இப்படியான ஒரு நிலைமை ஏற்படும்போது சனங்களின் மனங்களில் அந்த அரசியலாளர்களும் அவர்களுடைய கொடிகளும் இடையறாது பறந்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இது மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான வெளியைக் குறைத்து ஒன்றாக்கி விடும் என்று ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் கருதுகிறார்கள். இடைவெளியொன்றில் இருக்கும் அதிகாரப் படிநிலையில் இருக்கின்ற சுவை மற்ற ருஸிகளைச் சுவையற்றதாக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தின் ருஸியைச் சுவைத்த நாக்கு, ஒரு போதுமே பிற சுவைகளை விரும்புவதில்லை. அது மரணத்தின்வரையிலும் அதற்காகவே ஏங்கிக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு என்னதான் மகத்தான பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கான மனம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பேராழுமைகள் என்று சொல்லத்தக்க மனிதர்கள் தங்களைத் தாங்களே உருவாக்காத வரையில் - ஒவ்வொரு மனிதரும் தன்னை மனிதராக, மனச்சாட்சியின் பாற்பட்டவராக, தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும்வரையில் அரசியலும் அறமும் வாழ்க்கையும் நாடும் பிழைத்தேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் திரும்பச் சொல்வதானால், அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசியலிலும் தமிழ் சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. இந்த நிலை நீடிக்குமானால், தொடருமானால் எந்த நெருக்கடியும் தீராது@ வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-7446469825032821093?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/7446469825032821093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_4451.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/7446469825032821093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/7446469825032821093'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_4451.html' title='எல்லைகடந்த அதிகாரம் = ஜனநாயக நெருக்கடி'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3_6ZzAYR3mI/Ty9BWgZWzII/AAAAAAAAAME/wv5mqyuOSMg/s72-c/images+(58).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-2460995575784743811</id><published>2012-02-05T02:18:00.000-08:00</published><updated>2012-02-05T02:20:02.779-08:00</updated><title type='text'>இலங்கையில் இந்தியாவும் சீனாவும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-1V6Psojwlz8/Ty5XR40re6I/AAAAAAAAAL8/w--Z4tqjvpM/s1600/images+(56).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-1V6Psojwlz8/Ty5XR40re6I/AAAAAAAAAL8/w--Z4tqjvpM/s1600/images+(56).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இந்தியா. இலங்கையில் இன்று இந்தியா. இலங்கையில் சீனா. இலங்கையில் இன்று சீனா. இலங்கையில் (இன்று) இந்தியாவும் சீனாவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்தால், இலங்கையின் உள்நாட்டு அரசியலையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் இலங்கையின் சமகால அரசியலைக் குறித்த விளக்கத்தைப் பெறலாம். மேலும் தமிழ்பேசும் மக்களின் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வைக் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் முதலில் நாம் இலங்கையில் இந்தியா, இலங்கையில் இன்று இந்தியா என்பதைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பிற தொடர்புகள், உறவுகள் எல்லாம் நீண்ட பாரம்பரியத்தை உடையவை. உலகின் வேறெந்த நாடுகளுடனும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தையும் நீண்ட தொடர்ச்சியையும் உடையது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த உறவும் தொடர்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிராந்தியத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலும்கூட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மானசீகமான ஒரு உணர்வோட்டம் நெருக்கமாகவே இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கடந்த நூற்றாண்டில் உலக அரங்கில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நிகழ்ச்சிகளின் விளைவாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அதிகார நிகழ்ச்சி நிரல் ஒரு புதிய வடிவத்தை எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்தப் பிராந்தியத்தில் நிலவிய அந்நியர் ஆட்சிக்காலத்தின் நிகழ்ச்சி நிரலையும் அதற்கு முன்னர் தொன்மைக் காலத்தில் நிலவிய நிகழ்ச்சி நிரலையும் விட வேறு பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அரங்கில் ஏற்பட்ட அதிகார வலுப்போட்டிகள், பூமிப்பந்தை வேறு விதமாக வகைப்படுத்தியிருந்தன. இதன் தாக்கத்தை இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இந்தியா ஆகிய நாடுகளும் எதிர்கொண்டன. அல்லது இந்த வகைப்படுத்தல் விசையில் இந்த நாடுகளும் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டன. ஆகவே, இந்த விசைக்கமையவே இலங்கையின் வெளியுறவுக்கொள்கையும் உள்நாட்டரசியலும் பெருமளவுக்கும் அமைந்தது. அவ்வாறே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அதனுடைய உள்நாட்டரசியலும் அமைந்தது. மட்டுமல்ல, இலங்கை - இந்திய உறவும் அவற்றின் நிகழ்ச்சி நிரலும் கூட இந்த அடிப்படையிலேயே நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மேலும் விளங்கிக் கொள்வதானால், சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கையில் ஏற்பட்ட அரசியற் தலைமைகளின் போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ப இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. அல்லது அமைந்தது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.தே.க ஆட்சிக்கு வரும்போது அது மேற்குலகைச் சார்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆசிய மண்டலத்தைச் சார்ந்தும் நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. என்றபோதும் இந்தியாவுடனான உறவை இலங்கை பகை நிலைக்குக் கொண்டு சென்றதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தியா இலங்கையை ஒரே விதமாக நோக்கவில்லை. குறிப்பாக இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அல்லது இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் காலத்தில் (1977 க்குப் பின்னர்) இருந்து இந்தியா சற்றுக் கடினமான ஒரு நிலைப்பாட்டை இலங்கை தொடர்பாக எடுத்தது. 1990 வரையில் இந்தக் கடினப் போக்கு நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.ஆர். வெளிப்படையாகவும் சற்றுத் தூக்கலாகவும் மேற்கைச் சார்ந்து இயங்கினார். அன்று நிலவிய பனிப்போர்க் கால அரசியலில் - இரு துருவ அரசியலில் - ஜே.ஆரின் இத்தகைய நிலைப்பாடு இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்தியா – அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் அணுகுமுறை - இலங்கையின் உள்நாட்டரசியலில் ஒரு தீர்மானகரமான சக்தியாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை இந்தியா தன்னுடைய இந்தப் பிடியைத் தளர்த்தவேயில்லை. அது தனக்கேற்றவாறு தமிழர்களையும் சிங்களவர்களையும் கையாள்கிறது. அல்லது இனமுரண்பாட்டைக் கையாள்கிறது. அல்லது இலங்கையின் உள்நாட்டு முரண்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்விளைவாக இந்தியா இன்று இலங்கையில் அரசியல் ரீதியாக நேரடித் தன்மைவாய்ந்த ஒரு முக்கிய தலையீட்டைச் செய்கிறது. மட்டுமல்ல, உள்முரண்பாடுகளின் விளைவாக அழிவடைந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினைகளின் - பலவீனங்களின் - வழியே அது முதலீடுகளையும் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் சந்தையை இந்திய உற்பத்திகளே பெருமளவுக்கும் நிறைக்கின்ற ஒரு நிலையை இந்த முப்பது ஆண்டுகாலத்துக்குள் இந்தியா பெற்றுள்ளது. இன்னும் இதைச் சற்று விளக்கமாகச் சொல்வதாயின், இந்தியாவை விட்டு விலகி மேற்குலகைச் சார்ந்த ஜே.ஆரின் அணுகுமுறை ஒருவாக்கிய விளைவே இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இன்று இந்தியா இந்தப் பின்னணியினூடாக இலங்கையில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வலுவான சக்தியாக மாறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை இதன் மீதியாக, இன்றுள்ள சர்வதேச அரசியல் இந்தியாவை மேலும் இலங்கையில் தலையிடவும் ஆதிக்கம் செலுத்தவும் வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இந்தியாவுக்குப் போட்டியாகச் சீனா மாறியிருக்கும் சூழல் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பாத்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையைச் சீனா முன்னெடுத்து வருகிறது. இதை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே அது இலங்கையை பிறர் தட்டிப்பறித்து விடக்கூடாது என்பதற்காக அழுத்திப் பிடிக்கிறது. இவ்வாறு இலங்கை என்ற குழந்தையை இந்தியா அழுத்திப்பிடிக்கப் பிடிக்க குழந்தைக்கே பாதிப்பு அதிகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை என்ற குழந்தையை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற ஒரு நிலையில் இந்தியாவும் சீனாவும் இன்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்தியாவுக்குப் பதிலாக வெளியே செல்லச் செல்ல இந்தியாவின் பிடி மேலும் அழுத்தமாகும். ஆனால், இப்போது மேற்குலகின் பக்கம் இலங்கை சாய்ந்தால் இந்தியா முன்னரைப்போல அதிக அழுத்தத்தைக் கொடுக்காது. அப்படி அதனால் மேற்குலகத்துக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. இப்போது மேற்கின் கூட்டாளியான ஒரு பாத்திரத்தையும் ஒரு எல்லைவரையில் இந்தியா கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்போது இந்தியாவின் ஆதிக்கத்தைச் சமனிலைப்படுத்த சீனாவுடனான உறவையும் தொடர்புகளையும் இலங்கை கையாள்கிறது. சீனாவின் பக்கம் இலங்கை அதிக சாய்வைக் கொள்ளுமானால் இந்தியாவின் பிடி நிச்சயமாக அழுத்தம் பெறும். (இதை மிக நன்றாக உணர்ந்துள்ளது சிங்களத்தரப்பு அல்லது மகிந்த ராஜபக்ஷ அரசு).&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்தியா இன்று சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அவசியத்திலும் மேற்குலகின் அசைவைச் சமனிலைப்படுத்துவதிலும் தன்னுடைய சந்தையை வலுப்படுத்துவதிலும் என்ற முக்கோண அணுகுமுறையில் இலங்கையில் தன்னுடைய செயற்களத்தை விரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையிலேயே இந்தியத் தலைவர்கள், பிரதானிகளின் வருகைகள் அமைகின்றன. உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டரசியல் பற்றிய கேள்விகளை இந்தியா எழுப்பும் அளவுக்கு இலங்கையின் நிலையும் இந்தியாவின் செல்வாக்கும் உள்ளது. இதன் விளைவு இன்று இந்தியாவைக் கடந்து எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நாம் இலங்கையில் சீனா, இலங்கையில் இன்று சீனா என்பதைப் பார்க்கலாம். இலங்கையில் சீனா என்றால், வரலாற்றில் சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகளைப் பற்றியும் அதன் வழியான செல்வாக்கு மண்டலத்தைப் பற்றியும் பார்ப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவிலும் பௌத்தம் முதன்மை மதம். இலங்கையிலும் பௌத்தமே முதன்மையான மதம். ஆனால், இரண்டு பௌத்தங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டு. என்றபோதும் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் நீண்டகாலத் தொடர்ச்சியான உறவுண்டு. ஆனால், அது இந்தியாவைப் போல நெருக்கமும் பண்பாட்டு ஒற்றுமைகளும் கொண்டதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் செழிப்பான உறவெழுச்சியுடைய காலமாக இருந்தது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்திலேயாகும். ஐ.தே.க கடைப்பிடித்த மேற்குச் சார்பை மாற்றிச் சீனாவுடன் நெருக்கத்தைக் கொண்டார் சிறிமாவோ.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மீண்டும் ஐ.தே.க ஆட்சியைக் கைப்பற்றி மேற்குக்குச் சார்பாக இலங்கையை நகர்த்தினாலும் பின்னர் நாட்டில் நிலவிய யுத்தம் சீனாவை நோக்கித் திரும்ப வேண்டிய நிலைக்குள்ளாக்கியது. இன்று சீனா இலங்கையில் தீவிரமாகச் செல்வாக்கைச் செலுத்தும் நாடாக மாறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதைச் சீனா மிக நுட்பமாகச் செய்கிறது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களிலோ வேறு விசயங்களிலோ தான் சம்மந்தப்பட்டுக்கொள்ளாமல் தூர நிற்பதைப்போன்ற ஒரு தோற்றத்தைக் காண்பித்துக் கொண்டு தன்னுடைய கால்களை மிக நிதானமாக உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத் தலைவர்களின் வருகைகளைப் போல, அமெரிக்கத் தரப்பின் விஜயங்கள், அறிவிப்புகளைப் போல சீனப் பிரதிநிதிகளும் தலைவர்களும் இலங்கைக்கு அடிக்கடி படையெடுப்பதும் இல்லை@ விஜயங்களைச் செய்வதும் இல்லை@ அறிவிப்புகளை விடுப்பதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அபூர்வமாகச் சிலவேளைகளில் இலங்கைக்கு வரும் சீனத்தலைவர்களோ பிரதானிகளோ இலங்கையின் அரசியற் தலைவர்களையும் கட்சிகளையும் சந்திப்பதில்லை. மேலும் இலங்கையின் அரசியலைப் பற்றி வாய் திறப்பதும் இல்லை. அறிக்கைகள் விடுவதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சீன முதலீடுகளும் உதவிகளும் சீனப் பொருட்களுக்கான சந்தையும் இலங்கையில் தாராளமாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, சீனா இலங்கையை இந்தியாவிடமிருந்தும் மேற்குலகத்திடமிருந்தும் நகர்த்தி தனக்கும் பொதுவான முக்கோணத்தன்மையுடைய ஒரு பொது – சமநிலை அரங்கில் நிறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இன்று சீனா இலங்கையின் நிராகரிக்கவே முடியாத ஒரு பாத்திரமாகத் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் இத்தகைய நிலைப்படுத்தலைச் சமாளிப்பதற்கும் இதைச் சிதைப்பதற்கும் இந்தியா நிச்சயமாக இலங்கையின் உள்விவகாரங்களையே நிச்சயமாகக் கையாளும். இதையே நாம் முன்னரும் பார்த்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இன்று இலங்கையில் இந்த இரண்டு நாடுகளின் ஆதிக்கப்போட்டி பகிரங்கமாக நடைபெற்று வருகின்றது. இரண்டு யானைகள் மோதும்போது செடிகளே சேதமடைவது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையே இந்தப் பிராந்திய நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஆதிப்போட்டியாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போட்டியில் - அல்லது இந்த மோதுகையில் எப்படி இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார மேம்பாடுகளும் அமைதியும் இனங்களுக்கிடையிலான பிணக்குகள் தீர்வதும் சாத்தியமாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;பிராந்தியச் சக்திகளின் பின்னணியில் மேலும் சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியும் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் வென்று நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சாணக்கியம் யாருக்குண்டு? இந்த நிகழ்ச்சி நிரல்களுக்குச் சமதையான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கிக் காய்களை நகர்த்தி இலங்கை மக்களைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் எவரிடம் இருக்கிறது? &amp;nbsp;அல்லது, உள்நாட்டரசியலை தமது நலன்களுக்காகக் கையாள அனுமதிக்காத ஒரு நிலையை ஏற்படுத்தக்கூடிய செயற்றிறன் யாரிடம் உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் இலங்கையில் இன்னும் பல ஆதிக்கச் சக்திகள் தங்களின் செல்வாக்கு மண்டலத்தை விரிவாக்கம் செய்வது தவிர்க்க முடியாமற்போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியாரின் கொல்லைக் களமாக உங்களின் முற்றம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்பதை இதற்கு மேல் இங்கே விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-2460995575784743811?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/2460995575784743811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2460995575784743811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2460995575784743811'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post_05.html' title='இலங்கையில் இந்தியாவும் சீனாவும்'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1V6Psojwlz8/Ty5XR40re6I/AAAAAAAAAL8/w--Z4tqjvpM/s72-c/images+(56).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-7688377466189422201</id><published>2012-02-02T03:45:00.000-08:00</published><updated>2012-02-02T03:45:05.833-08:00</updated><title type='text'>நெருக்கடிக்குள்ளிருந்து மீளத் துடிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vkj4uWkV_YA/Typ3LHcMQ2I/AAAAAAAAAL0/dm8dOtqg-0E/s1600/download+(7).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-vkj4uWkV_YA/Typ3LHcMQ2I/AAAAAAAAAL0/dm8dOtqg-0E/s1600/download+(7).jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தையும் விட தற்போது அதிக நெருக்கடிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சந்தித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;கட்சிக்குள் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி.&lt;br /&gt;2.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;இலங்கை அரசாங்கத்துடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.&lt;br /&gt;3.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் எழுந்துள்ள நெருக்கடி.&lt;br /&gt;4.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாக உருவாகியுள்ள நெருக்கடி.&lt;br /&gt;5.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி.&lt;br /&gt;6.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினர் (இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை) ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி.&lt;br /&gt;7.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடி. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமான நெருக்கடி, வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடியாகும். வரலாற்றின் நெருக்கடியே எப்போதும் மிகப் பெரிய சவாலாகவும் விளைவுகளின் விசையை அதிகப்படுத்துவதாகவும் அமைகிறது. இந்த நெருக்கடியே பெரும்பாலும் பிற நெருக்கடிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. இங்கும் அதுதான் நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றின் எச்சரிக்கையே – அது உருவாக்கியிருக்கும் நெருக்கடியே - கூட்டமைப்பைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. எனவே, அது தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் எழுந்துள்ள நெருக்கடிகளையும் சமாளித்துக்கொள்வதற்காக சில உபாயங்களைநோக்கிச் சிந்திக்கிறது. அதிலொன்றே இலங்கை அரசுடன் நடக்கின்ற பேச்சுகளுக்கு மூன்றாந்தரப்பொன்றின் மத்தியஸ்தம் வேண்டும் என்ற அறிப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போதும் அப்படி ஏமாற்றவே முயற்சிக்கின்றனர். அதிலும் மகிந்த ராஜபக்ஷ அரசு போரின் வெற்றிக்குப் பின்னர் இன்னும் அதிகார மமதையுடன் நடந்து கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘போரில் கிடைத்த வெற்றியின் மூலமாக தான் கருதுகிற – விரும்புகிற தீர்வொன்றைத் தமிழர்களின் தலையில் கட்டிவிடுவதற்கு அது முயற்சிக்கிறது. இந்த நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன், பேச்சுகளில் ஈடுபடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடந்து கொள்ள வேண்டும்’ என்று சிந்திக்கும் ஒரு போக்கு வரலாற்றின் எச்சரிக்கையாக முன்னிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எச்சரிக்கையே கூட்டமைப்பிற்கு, தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களாலும் ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாகவும் உருவாகியுள்ள நெருக்கடியாகும். மேலும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியிற் பாதியும் இவ்வாறான நெருக்கடியைக் கூட்டமைப்புக்கு உருவாக்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ‘போரில் வெற்றியடைந்திருக்கும் அரசு தமிழர்களுக்கான தீர்வை உரிய முறையில் முன்வைக்காமல், தான் விரும்புகின்ற ஒரு முழுமைப்படுத்தாத தீர்வைத் திணித்து விடும். இதை எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்த்தரப்புப் பெற்றுவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;‘அப்படிப் பெற்றுக்கொண்டால், அது இதுவரையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கும் இதுவரை செய்த தியாகங்களுக்கும் ஈடாகாது. மேலும் &amp;nbsp;எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் தலைவிதியை அது பலவீனப்படுத்தி விடும்’ என்றும் இந்தத் தரப்பினர் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அவர்கள் மறைபொருளில் கூறுகின்ற விசயம் அல்லது நியாயம், ‘இலங்கை அரசு போரில் வெற்றியடைந்திருந்தாலும் அந்த வெற்றியை அது செய்த போர்க்குற்றங்கள் பாதிக்கின்றன. அதாவது, போரின் வெற்றியை அதனுடைய போர்க்குற்றங்கள் சமனிலைப்படுத்துகின்றன’ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ‘இந்த நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஆதாரப்படுத்தி, அதை ஒரு வலுவான நெருக்கடியாக மாற்றினால், போரினால் பின்னடைந்திருக்கும் அல்லது பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தரப்புக்கான பலமாக அது மாறும். ஆகவே அப்படி இதை மாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் கூட்டமைப்பு தீவிர நிலையிற் செயற்பட வேண்டும். அப்படிச் செயலாற்றினால், அது தமிழ்த்தரப்பின் பலமாக மாறி, இலங்கை அரசுக்கு மாற்றான ஒரு சமனிலைப் பலத்தை தமிழ்த்தரப்புக்கு வழங்கும்’ என்பது இந்தத் தரப்பின் கணிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கணிப்பொன்றை தீவிரத் தமிழ்த்தேசியச் சக்திகள் தர்க்க பூர்வமாக இதுவரையில் முன்வைக்கவில்லையாயினும் அவர்களின் கூற்றுகளும் அணுகுமுறைகளும் இதையே மறைபொருளில் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மீறி அல்லது இதைப் பொருட்படுத்தாமல் அரசுடன் மென்தன்மையாகக் கூட்டமைப்பினர் நடந்து கொண்டால், அது நிலைமையை மோசமாக்கி விடும் என்பதே இந்தத்தரப்பினரின் எச்சரிக்கையாகவும் நிர்ப்பந்தமாகவும் உள்ளது. இதை இவர்கள் வரலாற்றின் எச்சரிக்கையாகவும் நெருக்கடியாகவும் கூட்டமைப்பின் முன் வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த எச்சரிக்கைகளையும் நிபந்தனைகளையும் எதிர்கொள்வதில் கூட்டமைப்புக்கு இயலாத நிலையே தென்படுகின்றது. ஆகவேதான் அது வெளிப்படையாகப் பதிலளிக்க முடியாமல் தன்மீது முன்வைக்கப்படும் கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் கனத்த மௌனத்தின் மூலம் கடக்க முயற்சிக்கிறது. இதை அது ஒரு உபாயமாகவே கொண்டுமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான உத்தியொன்றை அது கடைப்பிடித்து ஒரு எல்லைவரை நகரலாம். ஆனால், தொடர்ந்தும் வெற்றிகரமாக இந்தப் பாதையிற் பயணிக்க முடியாது.&lt;br /&gt;எனவேதான், கூட்டமைப்புக்கு இன்று பலவகையான நெருக்கடிகள் உள்ளும் புறமுமாகக் குவிந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை மீளவும் இங்கே வரிசைப்படுத்தினால்,&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;கட்சிக்குள் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி.&lt;br /&gt;2.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;இலங்கை அரசாங்கத்துடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.&lt;br /&gt;3.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் எழுந்துள்ள நெருக்கடி.&lt;br /&gt;4.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாக உருவாகியுள்ள நெருக்கடி.&lt;br /&gt;5.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி.&lt;br /&gt;6.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினர் (இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை) ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி.&lt;br /&gt;7.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடி. &lt;br /&gt;&lt;br /&gt;என்றவாறாக இந்தப் பட்டியலின் சுருக்கம் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமைப்பை ஒரு அமைப்பாக மாற்றுவதிலும் கட்சியாக வடிவமைப்பதிலும் அதற்கான செயற்பொறிமுறைத் திட்டமொன்றை வகுப்பதிலும் அது கொண்டுள்ள இடர்ப்பாடுகள் பெரிது.&lt;br /&gt;&lt;br /&gt;பல அணிகளின் கூட்டாக அது இருப்பது வெளித்தோற்றத்துக்கு கவர்ச்சிகரமானதாகவும் பலம்பொருந்தியதாகத் தெரிந்தாலும் உள்ளே அதற்குள் ஏகப்பட்ட உள்விலகல்களும் நெருக்கடிகளும் செயல்முறைத் தளர்வுகளும் இருப்பதை அவதானிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அண்மைய உதாரணம், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துள்ளதாகவும் அதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதேகாலப்பகுதியில் கொழும்பிலே தமிழரசுக் கட்சியின் கிளை நிலையத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடந்துள்ளன. கொழும்புக்கிளைக்குச் செயலாளராக ஊடகவியலாளரான திரு. வித்தியாதரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர, மேலும் பல உள்விலகல்கள் கூட்டமைப்புக்குள்ளே உண்டு. கட்சியின் தலைமைப் பதவிகளை நோக்கிய குறிவைப்புகளோடு போட்டி நிலையில் பலர் இருப்பதும், &amp;nbsp;எனினும், தனித்து நிற்க முடியாத நிலையில் விருப்பின்மைகளின் மத்தியில் ஒரு அமைப்பாக இவர்கள் இணைந்திருக்க வேண்டியிருப்பதும் இந்த உள்விலகல்களை அப்படியே பேணிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான நிரந்தரப் பரிகாரத்தைக் காணுவதற்கு இதுவரையில் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை. அதை அது செய்யப்போவதும் இல்லை என்கின்றனர் அவதானிகள். ஏனெனில் முன்னர் திரு. ஆனந்தசங்கரிக்கும் திரு.சம்மந்தனுக்கும் இடையில் நடந்த அதிகாரப்போட்டியில் பிளவு ஏற்;பட்டதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, உள்நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் இப்போதைக்குக் கூட்டமைப்பு ஈடுபடப்போவதில்லை. இதேவேளை இந்த நெருக்கடியைத் தொடர்ந்து பேணவும் முடியாது. ஆகவே இந்தப் பிரச்சினையைத் திசைதிருப்பி வைத்துக் கொள்வதற்கு கூட்டமைப்புக்கு உள்ள ஒரு உபாயம் பேச்சுவார்த்தையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பேச்சுகளின் தேக்கத்தைப் பற்றியும் அதன் போக்கைப் பற்றியும் வெளியே எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவரவர் தமக்கேற்றவாறு பதிலளித்து வருகின்றனர். இது அமைப்பினுள்ளே உள்விலகல்களை மேலும் அதிகரிப்பது மட்டுமல்ல, அரசுடன் பேச்சுகளைத் தொடர்வதில் சிலவேளை நெருக்கடிகளையும் உருவாக்கி வருவதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கவலையுடன் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இந்த நிலையில் மூன்றாந்தரப்பின் மத்தியஸ்தத்துடன் பேசுவதானால், முன்னர் குறிப்பிட்டதைப்போல பாவமோ பழியோ அந்த மூன்றாந்தரப்புக்கும் சேர்ந்தது. தான் மட்டும் முழுக்குற்றவாளி இல்லை என்பதாகும். இது சற்று ஆறுதலை அளிக்கும். நெருக்கடியைக் குறைக்கும் என்று கூட்டமைப்புக் கணித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, இலங்கை அரசுடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுகளின்போது தீர்வை முன்வைக்கும் யோசனைகளும் சமிக்ஞைகளும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவிக்கும் கூட்டமைப்பு இந்த நிலையில் எப்படிப் பேசுவதென்று தெரியாமல் திணறுகிறது. ஆனால், எப்படியான நிலையிலும் பேச்சுகளிலிருந்து வெளியேற முடியாத நிர்ப்பதந்ததும் அதற்குண்டு. சர்வதேச அழுத்தம் உட்பட. பேச்சுகளை விட்டால் அதற்கு மாற்றுவழி என்ன என்ற கேள்வியை முன்வைத்தாலே இந்த நிலைமையை விளங்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, தான் உருவாக்க முயற்சிக்கும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது கூட்டமைப்புக்கு ஒரு நெருக்கடி நிலையே. பேச்சுகளைத் தொடருமாறும் தீர்வொன்றைக் காணுமாறும் வலியுறுத்தி வருகின்ற இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன ஜனநாயக மயப்படுத்தப்பட்ட நிலையிலான பேச்சுகளையும் அணுகுமுறைகளையுமே ஆதரிக்கிறது. இதன்படி இலங்கை அரசின் தெரிவுக்குழு முறைமையை இவை நிராகரிக்காது. இந்த நிலையில் தெரிவுக்குழுவில் பங்கேற்கும்படியா ஒரு அழுத்தம் கூட்டமைப்புக்கு ஏற்படுகிறது. ஆனால், தெரிவிக்குழுவில் பங்கேற்பது காலத்தைக் கடத்தும் செயல் என்ற வரலாற்றனுபவங்களும் அதை நிபந்தனையாக்கும் பிறதரப்பின் அழுத்தங்களும் கூட்டமைப்பைத் தெரிவுக்குழுவுக்கு வெளியே நிறுத்துகின்றன. இது ஒரு நெருக்கடி நிலையே.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர்த்து, அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை அல்லது தீர்வை இழுத்தடிக்குமானால், அடுத்த கட்ட நிலை என்ன என்ற கேள்வியும் நெருக்கடியாக எழுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நெருக்கடியானது, சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினராக விளங்கும் இலங்கை அரசியலில் தாக்கத்தை விளைவிக்கும் தரப்பினராகிய இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை ஏற்படுத்தும் நெருக்கடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தரப்புக்கு இலங்கை அரசும் தேவை. சிங்களச் சமூகத்தின் ஆதரவும் அவசியம். தமிழர்களின் அபிப்பிராயத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இவை இவற்றுக்கமைவான ஒரு மென்போக்கு – நழுவல் நிலை - இரண்டுக்கும் நடுவிலான ஒரு அணுகுமுறை – சமாளித்து ஓடுதல் என்றவாறான ஒருவகை அரசியல் உபாயத்தைக் கையாள்கின்றன. இந்த உபாயத்துக்கு இடமளிப்பதா இல்லையா என்ற நெருக்கடி இப்பொழுது கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. (சரி பிழைகளுக்கு அப்பால், புலிகள் இந்த மாதிரி இடத்தில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற மாரியாகக் கறாராக முடிவெடுத்து விடுவர்). இந்த இடத்தில் கூட்டமைப்பின் நிலை தர்மசங்கடமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிர நிலைப்பாட்டைக் கூட்டமைப்பு எடுப்பதையும் பேச்சுமேசையில் இருந்து &amp;nbsp;அது வெளியேறுவதையும் இந்தத் தரப்புகள் விரும்பவில்லை. ஆகவே ஒரு அழுத்த நிலையில் இருந்து இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அழுத்தத்துக்கு இணங்கினால், தீவிரத் தமிழ்த் தேசியவாதிகளாலும் ஊடகங்களாலும் கடுமையான எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக வேண்டிய நிலை. இணங்காது விட்டால், இந்தத் தரப்பின் அறிவுறுத்தல்களுக்குப் பதிலளிக்க முடியாத நிலை. ஆகவே, இரண்டுபக்க அழுத்தங்களுக்குட்பட்டுத் தவிக்கின்றது கூட்டமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த நெருக்கடிகளில் இருந்தெல்லாம் விடுபட்டுக்கொள்வதற்கே அது மூன்றாந்தரப்பொன்றின் மத்தியஸ்தத்தைக் கோருகிறது. அதேவேளை சேர்த்துக்கொள்ளப்படும் மூன்றாந்தரப்பின் மூலம் இலங்கை அரசையும் மேற்கூறிய சர்வதேசத் தரப்பையும் நெருக்கடிக்குள்ளாக்கி விடலாம் என்றும் அது கருதுகிறது. இது ஒப்பீட்டளவில் புத்திசாதுரியமான ஒரு நடவடிக்கையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, மூன்றாந்தரப்பொன்றைக் களத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் எல்லா நெருக்கடிகளிலும் அந்த மூன்றாந்தரப்பைப் பொறுப்பாளியாகவும் பங்காளியாகவும் ஆக்கிவிடலாம். இதன்மூலம் தன் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகள், நம்பிக்கையீனங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தளித்து, வெற்றிக்கும் தோல்விக்கும் தான் மட்டும் பொறுப்பாளியல்ல - இத்தகைய நிலைமைகளுக்கு பிற சாட்சியமும் உண்டு என்று கூறிவிடலாம் என்பதே இன்றைய தெரிவாகக் கூட்டமைப்புக்கு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என்னதானிருந்தாலும் அரசுக்கு தற்போதிருக்கும் நெருக்கடிகளையும் விடக் கூட்டமைப்புக்கிருக்கும் நெருக்கடிகளே அதிகமாக உள்ளன. அரசு போர்க்குற்ற விசாரணைகளை அழுத்தப் பிராந்தியத்திற்கு அப்பால் தள்ள முயன்று கொண்டிருக்கிறது. அதற்கான சர்வதேச வியூகமொன்றை அது வகுத்துமுள்ளது. இதன்படி அது இந்தியா, சீனா, மேற்கு என்ற விசைநிலையைச் சமாந்தரப் புள்ளியை நோக்கித் தற்காலிகமாக நகர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-7688377466189422201?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/7688377466189422201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/7688377466189422201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/7688377466189422201'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/02/blog-post.html' title='நெருக்கடிக்குள்ளிருந்து மீளத் துடிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vkj4uWkV_YA/Typ3LHcMQ2I/AAAAAAAAAL0/dm8dOtqg-0E/s72-c/download+(7).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-6192724803876244136</id><published>2012-01-21T20:30:00.000-08:00</published><updated>2012-01-21T20:31:44.826-08:00</updated><title type='text'>பாதுகாப்பென்பது படைகளிடமா, மக்களிடமா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4IZu5OKSATQ/TxuQu03gRLI/AAAAAAAAALs/PnVT_L504g8/s1600/images+%252855%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-4IZu5OKSATQ/TxuQu03gRLI/AAAAAAAAALs/PnVT_L504g8/s1600/images+%252855%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;''பின்தங்கிய நாட்டை அடிமை கொள்வது உலகத்துக்கு மிகச் சுலபம். பின்தங்கிய நாட்டில் மக்கள் வாழ்வது மிகக் கடினம். ''&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் பிரச்சினைகளுக்கான தீர்வு அல்லது தீர்வுகள் என்ன? அந்தத் தீர்வை அல்லது தீர்வுகளை எப்படிக் காணமுடியும்? இலங்கையை ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக எப்படி மாற்ற முடியும்? என்ற கேள்விகள் நீண்டகாலமாகவே வௌ;வேறு அரங்குகளில் கேட்கப்பட்டு வரப்படுகிறது. அல்லது சில அரங்குகளில் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கேள்விகள் பலருடைய மனதிலும் அடிக்கடி எழுவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நீண்டகாலத் தொடர்ச்சியை உடைய இந்தக் கேள்விகளை – இவற்றுக்கான பதில்களையும் இவற்றுக்கான நடவடிக்கைகளையும் பெறமுடியாதிருக்கும் இந்தக் கேள்விகளை - மீளவும் இங்கே முன்னிறுத்தி இந்தப் பத்தியில் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;இலங்கையின் பிச்சினைகளுக்கான தீர்வு அல்லது தீர்வுகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விக்கான பதிலை நாம் காண்பதற்கு முன்னர், இலங்கையின் பிரச்சினைகள் என்ன? என்று நாம் பார்க்க வேண்டும். அதன்படி பார்த்தால், முதலாவதாக இனப்பிரச்சினை. இது தமிழ்பேசும் மக்களிடத்தில் அரசியற் போராட்டங்களையும் ஆயுதப்போராட்டத்தையும் தோற்றுவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை அதற்குச் சமாந்தரமாக உள்ள இரண்டாவது பிரச்சினை - பொருளாதாரச் சமனற்ற நிலையும் பிரதேச ரீதியிலான சமனின்மைக் குறைபாடுகளும். இதுவே ஜே.வி.பி யின் தோற்றத்துக்கும் அதனுடைய போராட்டங்களுக்கும் காரணமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இலங்கையில் இரண்டு பிரச்சினைகள் மிக முக்கியமாகவும் முதன்மை நிலையிலும் உள்ளன. இந்த இரண்டு பிரச்சினைகளின் காரணமாகவும் இலங்கைத் தீவு அளவுக்கதிகமான இரத்தத்தைச் சிந்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான – பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன. பல கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் இயற்கை வளங்களும் அழிவடைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், சமூகங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து, முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இன்னும் வெளிப்படையாகவும் சுருக்கமாகவும் சொல்வதெனில், இந்த இரண்டு பிரச்சினைகளுக்காகவும் மிகத் தீவிரமான ஆயுதப்போராட்டங்கள் நீண்டகாலமாகவே நடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது இந்த ஆயுதப் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டிருந்தாலும், போராட்டங்கள் முளைவிடுவதற்குக் காரணமான பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. ஆகவே, அவற்றுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும். அப்படித் தீர்வைக் காண்பதே இலங்கைத் தீவின் அமைதியும் அபிவிருத்தியும் தன்னிறைவும் சுயாதிபத்தியமும் நிலைபெறுவதற்கான வழியை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறெனில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? அல்லது தீர்வுகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கேதான் பிரச்சினை திரும்பவும் உருவாகிறது. தீர்வைப் பற்றி யோசிக்கும்போதே அல்லது தீர்வுக்காக முயற்சிக்கும்போதே தீர்வை நோக்கிச் செல்ல முடியாத ஒரு பயங்கரமான நிலை இலங்கை அரசியற் பண்பாட்டுச் சூழலில் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக - இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வை முன்வைக்க அரசாங்கம் முயற்சிக்கும்போது அதை சிங்களத் தீவிரவாதக் கட்சிகளும் எதிர்க்கட்சியும் கடுமையாக எதிர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போல, தமிழ்க்கட்சிகள் வடக்குக் கிழக்கு இணைப்பையும் அரசியற் தீர்வையும் கோரும்போது முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பற்றியும் அவர்களின் நிலையைப்பற்றியும் சரியாக அக்கறைக்கு எடுப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்கு ஏற்றவாறு சிந்திக்கும் முறைமையையும் இவை கைக்கொள்வதில்லை. ஆகவே, தீர்வைப்பற்றிச் சிந்திக்கும்போது இத்தகைய எதிர்நிலைகளும் குறைநிலைகளும் உள்ளடக்கங்கொண்டேயிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இலங்கைத்தீவில் முரண்பாடுகளுக்கான – பிரச்சினைகளுக்கான தீர்வைப் பற்றிச் சிந்திப்பதே தீர்வுக்கு எதிரானதாக அமைகிறது என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இதுதான் - இப்படியான ஒரு துயர நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலை தொடரும்வரை நிலைமை மேலும் மேலும் மோசமடையுமே தவிர, ஒருபோதுமே சீருக்குத் திரும்பாது. பிரச்சினைகளும் தணியாது. நெருக்கடிகளும் குறையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதற்காக தீர்வைப் பற்றியோ தீர்வுகளைப் பற்றியோ பேசாமலும் சிந்திக்காமலும் இருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தகைய விலையைக் கொடுத்தேனும் தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக தீர்வொன்றைப் பொருத்தமான முறையில் கொண்டு வருவதன் மூலம் அல்லது பொருத்தமான தீர்வொன்றைக் கொண்டு வருவதன் மூலம், ‘விலை’களையும் ‘தலை’களையும் கொடுக்கும் நிலையை மாற்றிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கடந்த காலங்களில் நடந்தது வேறு. தீர்வுக்குப் பதிலாக முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் காரியங்களே அரசியல் உபாயமாக்கப்பட்டது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், யுத்தத்தில் வெல்வதன் மூலம் தனியரசொன்றை உருவாக்கி இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியும் எனத் தமிழர்கள் சிந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தில் வெல்வதன்மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்த அரசியற்குரல்கள் தணிந்து விடும் என்று அரசு சிந்தித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே, ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கையில் பொருளாதாரச் சமநிலையுடைய அரசொன்றை ஸ்தாபித்து விடலாம் என்று ஜே.வி.பி சிந்தித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக இலங்கை பேரழிவிற்குள்ளும் ஸ்திரமின்மைக்குள்ளும் தள்ளப்பட்டதே வரலாறாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பது அல்லது &amp;nbsp;தீர்வுகளைக் காண்பது என்பது இன்று மிக அவசியமாக உள்ள ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி, இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான – நீதியான – சமூகங்களுக்கிடையில் கொந்தளிப்பைத் தணிக்கக்கூடிய வகையிலான – அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உருவாக்கக்கூடிய – சமநிலையையுடைய – ஒவ்வொரு சமூகங்களின் இருப்புக்கும் உத்தரவாதமுடைய – அச்சநிலையைப் போக்கக்கூடிய - நிரந்தரத் தீர்வொன்றைக் காணவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே பிரதேசங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அபிவிருத்திச் சமனிலையற்ற நிலையைப் போக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கையினையும் அரசியற் கொள்கையினையும் வகுத்து நடைமுறைப்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கைக்கான - இலங்கை அரசுக்கான உள்நாட்டு நெருக்கடியும் உள்நாட்டுச் சக்திகளின் அச்சுறுத்தலும் நீங்கிவிடும். இந்த அச்சுறுத்தல் நீங்குமானால், இலங்கையின் பாதுகாப்புச் செலவீனத்தில் ஐந்தில் மூன்று பங்கு மீதப்படுத்தப்படும். ஆளணிச் சக்தியும் மீதமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை உள்நாட்டு முரண்பாடுகளைப் பயன்படுத்தி, உள்ளே இருக்கும் எதிர்ச் சக்திகளைப் பயன்படுத்தி தமது அரசியல் நலன்கனை முன்னெடுக்க முயலும் வெளிச்சக்திகளின் உபாயங்களும் தடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை அல்லது தீர்வுகளை &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; எப்படிக் காணமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முற்றிலும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். முதலாவதாக &amp;nbsp;இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சூழலை உருவாக்குவது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி, தீர்வுக்குத் தடையாக இருக்கின்ற சக்திகளையும் காரணிகளையும் அடையாளம் காண்பது முதலாவது பணியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, அந்த எதிர்ச் சக்திகளை எப்படித் தணிவு நிலைக்குக் கொண்டு வருவது? தடைக்காரணிகளை எவ்வாறு அகற்றுவது? என்று ஆராய்ந்து அதற்கான தீர்வைக் காண்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பார்க்கும்போது எதிர்ச்சக்திகளான தீவிர நிலையாளர்களையும் முஸ்லிம் விரோதப் போக்கையும் பலவீனப்படுத்த வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அமைப்பு தடையாகவோ நெருக்கடியாகவோ இருக்குமானால், அதைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேணும். நாட்டினதும் மக்களினதும் தேவைகளுக்காகவே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கேற்பவே அது காலத்துக்குக்காலம் திருத்தத்துக்குட்படுத்தப்படுவதும். ஆனால், துரதிருஷ்ரவசமாக இலங்கையில் அரசியல் அமைப்பின் திருத்தம் அரசையும் ஆட்சியாளரையும் பாதுகாப்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்தும் மக்களின் - சமூகங்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஏற்றவாறு அமைக்கப்படவில்லை. ஆகவே, இதைக்குறித்துச் சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையதொரு அவசியச் சிந்தனைகளை மையப்படுத்திய அமுக்கக்குழுக்கள் (pசரளரசந பசழரிள) &amp;nbsp;இன்றைய நிலையில் மிக அவசியமாகத் தொழிற்படவேண்டியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், முன்னெப்போதையும் விட இப்பொழுதே இனப்பிரச்சினையைக் காண்பதற்குப் பொருத்தமான – பதமான சூழலொன்று அமைந்துள்ளது. போரினாலும் இன முரண்பாடுகளினாலும் பொருளாதாரப் பிரச்சினைகளாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அனுபவங்களை இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகத்தினரும் சகல மக்களும் பெற்றிருக்கும் சந்தர்ப்பம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;போரினால், முற்றுமுழுதாகவே பாதுகாப்பற்ற ஒரு நிலையில் இலங்கையிலுள்ள சமூகங்கள் இருந்தன. ஸ்திரமற்ற நிலையில் நாடு இருந்தது. இப்போது சகிக்கமுடியாத அளவுக்குத் துயரந்தரும் நிகழ்வுகளின் மத்தியில் போரின் பிடியிலிருந்து நாடு மீண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, போரற்ற ஒரு நிலை எதிர்காலத்தில் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்படியான ஒரு நிலையை உருவாக்கி, ஸ்திரப்படுத்துவதற்கான அடிப்படைகள் இப்போதே உருவாக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடையே அரசியல் வேலைகளைச் செய்வதற்கு இதுவே மிக வாய்ப்பான – பொருத்தமான சந்தர்ப்பமாகும். இதைப் புரிந்து கொண்டு, தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையச் சமூகங்களிலுள்ள அமுக்கக்குழுக்கள் தொழிற்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த அமுக்கக்குழுக்கள் தங்கள் தங்கள் சமூகங்களின் அடையாளங்களின் வழியாக மேலும் தீவிரநிலைகளை – முரண்நிலைகளைக் கூர்மைப்படுத்தும் வகையிற் சிந்தித்தால் நிலைமை மேலும் விபரீதமாகும் என்பதையும் இங்கே கவனிப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமுக்கக்குழுக்களானது, தங்களுக்கிடையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை வரைந்து, அதில் இணைந்து தொழிற்படுவதன்மூலமாக இடைவெளிகளைக் குறைத்து தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அது இயலுமானதுங்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச் செய்யப்படும்போது, அப்படி இவை தொழிற்படும்போது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்குமான அரசில் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு ஆட்சியாளர்களுக்கும் அரசியலைக் கைக்கொள்வோருக்கும் வாய்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இப்போது அரசியலை முன்னெடுப்பதென்பதும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கையாள்வதென்பதும் முழுமக்களினதும் முழு அக்கறைக்குரிய ஒன்றாக உள்ளது. இதில் முக்கிய பாத்திரத்தை ஏற்கவேண்டிய பணி அந்தந்தச் சமூகங்களைச் சேர்ந்த சிந்திக்கும் தரப்பினருடையதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது கேள்வி. இலங்கையை ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக எப்படி மாற்ற முடியும்? என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விக்கான பதில் மிகச் சுலபமானது. மேற்படி கேள்விகளுக்கான பதிலைக் காண்பதன் மூலம் இந்தக் கேள்விக்கான பதிலும் இந்தக் கேள்வியின் உள்ளேயுள்ள நிலைமைக்கான பதிலும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு நெருக்கடிகள் தீரும்போது, அரசின் ஒடுக்குமுறையும் தணிந்து விடும். அதனுடைய அச்சமும் தீர்ந்து போகும். இதன்மூலம் நாட்டில் முதலாவது நிலையிலான தளம்பலுக்கு முடிவுவந்து விடும். மக்களும் அரசும் எதிரெதிர்ச் சக்திகள் என்ற நிலை அநேகமாக மாறிவிடும். அப்படியான ஒரு நிலையில் மக்கள் அரசின் - ஆட்சியின் பாதுகாவலர்களாக இருப்பர். அதுவே சரியானதும். அந்தப் பாதுகாப்பே படைகளின் பாதுகாப்பையும் விடப் பலமானது. உறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, உள்நாட்டிலுள்ள முரண்சக்திகளை வெளிச் சக்திகள் பயன்படுத்தி தமது காரியங்களைச் சாதிக்க முடியாத நிலையும் உருவாகும். அத்துடன் உள்நெருக்கடிகாரணமாக ஏற்படும் அழிவுகளும் சேதங்களும் ஆக்கத்திறனுக்கான ஏதுகளற்ற நிலையும் தடுக்கப்படும்போது, வெளியே கடன்படவும் கையேந்தவும் வேண்டிய நிலையும் ஏற்படாது. அத்துடன், உள்நாட்டு நெருக்கடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வெளி உதவிகளை (புலிகளையும் ஜே.வி.பி யையும் அடக்குவதற்கு வெளி உதவிகளை இலங்கை அரசு நாடியிருந்தது) நாடவேண்டிய தேவையும் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நாடு எந்த நிலையிலும் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கு மேற்சொன்ன இரண்டு பிரதான கேள்விகளுக்கான பதில்களையும் காணும் நடவடிக்கைளை &amp;nbsp;மேற்கொள்ளும்போது மூன்றாவது கேள்விக்கான பதிலும் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தீர்வுக்கான முயற்சிகளோ – பேச்சுகளோ வழமையான பாரம்பரியத்தைக் கொண்டதாகவே உள்ளன. அரசு – தமிழ்த்தரப்பு என்ற எதிரெதிர்த்தரப்புகளின் மோதற்களமாகவே பேச்சுகளும் பேச்சுமேசையும் அமைந்துள்ளன. அப்படியே தோற்றங்காட்டவும் படுகிறது. அப்படியே புரிந்து கொள்ளவும் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுகள் தொடர்பாக இரண்டு தரப்பு வெளிப்படுத்தும் செய்திகளும் அறிக்கைகளும் இதையே நிரூபிக்கின்றன. பேச்சுகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும் இந்தத் தரப்புகளின் ஆதரவு ஊடகங்களும் இதே மனநிலையில்தான் இதை அணுகுகின்றன. ஒருவரை ஒருவர் தோற்கடிக்க அல்லது ஒருவரை ஒருவர் வெல்ல முயற்சிக்கின்ற எத்தனங்களே பேச்சுமேசையாகக் காணப்படுகிறது. இது அடிப்படையிலேயே தவறானது.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுகளின் மூலமாகத் தீர்வொன்றைக் காணமுற்படும்போது இரண்டு தரப்பும் பதற்றங்களற்ற முறையில், சந்தேகங்களை மேலும் உருவாக்குவதற்கு இடமளிக்காமல் அரங்கிற் செயற்பட வேண்டும். ஆனால், அப்படியான நிலை உருவாகவேயில்லை. பதிலாக தட்டையான – ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முனைகிற அதே அமைப்பிற்தான் பேச்சுகள் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழமையான – பழைய – தோற்றுப்போன பாரம்பரியத்தையுடைய பேச்சுவார்த்தையின் மூலம் எத்தகைய தீர்வையும் இந்த நாடு கண்டு விடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலாகக் காலம் கரையும். தீவிர நிலையாளர்கள் மேலும் பலம் பெறுவர். நெருக்கடிகள் மேலும் உக்கிரமடையும். வெளிச்சக்திகள் தாராளமாகவே இடைவெளியுள்ள சமூகங்களிடையே புகுந்து விளையாடும். நாடு அச்சத்திலும் நிம்மதியின்மையிலும் உழலும். பாதுகாப்புச் செலவினங்களும் சட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் படைகளின் பெருக்கமும் அதிகரிக்கும். ஸ்திரமற்ற தன்மை தாராளமாகவே ஏற்படும். நாடு மிகமிகப் பின்தங்கியே செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்தங்கிய நாட்டை அடிமை கொள்வது உலகத்துக்கு மிகச் சுலபம். பின்தங்கிய நாட்டில் மக்கள் வாழ்வது மிகக் கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-6192724803876244136?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/6192724803876244136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/6192724803876244136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/6192724803876244136'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_21.html' title='பாதுகாப்பென்பது படைகளிடமா, மக்களிடமா?'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4IZu5OKSATQ/TxuQu03gRLI/AAAAAAAAALs/PnVT_L504g8/s72-c/images+%252855%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-1587021066019090447</id><published>2012-01-17T22:20:00.000-08:00</published><updated>2012-01-17T22:20:25.152-08:00</updated><title type='text'>ஓட்டம் முடியவில்லை -- முன்னர் துரத்தியது போர். இன்று துரத்துவது கடன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-uNAY8tfysWM/TxZkOpa9egI/AAAAAAAAALk/f7abhedzVCY/s1600/images+%252842%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-uNAY8tfysWM/TxZkOpa9egI/AAAAAAAAALk/f7abhedzVCY/s1600/images+%252842%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br class="Apple-interchange-newline" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, சீட்டுக் கட்டிச் சம்பாதித்துச் சீதனத்துக்குக் காசு சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்கள். பிறகு, தங்களின் சம்பாத்தியங்களை வங்கிகளில் வைப்பிலிட்டுச் சேமித்தார்கள். வங்கிகளில் சேமிப்பது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தது அவர்களுக்கு. யுத்தச் சூழலில் இது இன்னும் பாதுகாப்பானதாகத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கங்கள் கூடக்கூட சேமிப்பின் மகிழ்ச்சி உச்சத்துக்கு ஏறும். அதைவிட அதிலொரு பெருமை வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய வங்கிகள் சேமிப்பில் முதலிடம் வகித்தன. ஆனால், தெற்கு மற்றும் மேற்கிலுள்ள சிங்களப்பகுதிகளின் வங்கிக் கிளைகள், சேமிப்புக்குப் பதிலாகக் கடனைத் தாராளமாக வழங்கிக் கொண்டிருந்தன. சிங்களவர்கள் சேமிப்பதற்குப் பதிலாகக் கடனை வாங்கிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மறுவளமாகப் பார்த்தால், தமிழர்களின் காசில் சிங்களவர்கள் வாழ்ந்தனர் எனலாம். அவர்கள் வங்கிகளில் குறைந்த வட்டிக்குக் கடனை வாங்கி, தங்களுடைய தொழில் முயற்சிகளைச் செய்தனர். முதலீடுகளிலும் தாராளமாக ஈடுபட்டனர். வடக்குக் கிழக்கையும் விட ஏனைய பகுதிகளில் நிலவிய ஒப்பீட்டளவிலான அமைதிச் சூழல் இதற்கு மேலும் சாதகமான வாய்ப்புகளை வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சேமிப்பதற்குப் பதிலாகத் தாராளமாகச் செலவு செய்யும் பழக்கம் சிங்களவர்களுக்கு எப்போதும் அதிகம். செலவு செய்வதற்காகவே சிங்களவர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று தென்பகுதியில் நீண்டகாலம் இருந்த நண்பர்கள் சொல்வர். &amp;nbsp;உழைப்பதைத் தாராளமாகச் செலவழிக்கும் இயல்பு அவர்களிடம் உண்டு. விதவிதமாகச் சாப்பாடுவதிலும் சுற்றுலாக்களுக்குப் போவதிலும் கொண்டாட்டங்களில் தாராளமாகச் செலவழிப்பதிலும் அலாதிப்பிரியம் அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறுவனாக இருந்த காலத்தில் தெற்கிலிருந்து தினமும் பஸ் வண்டிகளில் சுற்றுலாவாக ஏராளம் சிங்களவர்கள் வடக்கே வருவர். வசதியுள்ளவர்கள்தான் இப்படி வருவதாக யாரும் எண்ணவேண்டாம். மிக வசதி குறைந்தவர்கள்கூட குடும்பம் குடும்பமாக வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வருகிறவர்களுடைய உடற் தோற்றத்திலும் உடைகளிலும் அவர்கள் உடல் உழைப்புச் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியும். ஆனால், ஊர்களைப் பார்ப்பதிலும் பயணங்களைச் செய்வதிலும் அவர்களுக்கு நிறைய விருப்பம் என்றபடியால், செலவைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான இயல்புள்ள சிங்களவர்கள் முதலீகளைச் செய்யவும் ஏதாவது தொழில்களை ஆரம்பிக்கவும் வங்கிகளில் தாராளமாகவே கடன்களை &amp;nbsp;எடுத்தார்கள். வடக்கிலே குறைந்த வட்டியைக் கொடுத்துத் தமிழர்களின் சேமிப்பைப் பெற்றுக் கொண்ட வங்கிகள், கூடுதலான வட்டிக்குச் சிங்களவர்களுக்குக் கடன்களைக் கொடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;போதாக்குறைக்கு போர் நடந்த காலத்தில், அரசாங்கமே தமிழர்களின் சேமிப்பைப் போருக்குப் பயன்படுத்தியதாகவும் ஒரு அபிப்பிராயம் உண்டு. வெளிநாடுகளில் இருந்து போருக்காகப் பட்ட கடன் போதாதென்று வங்கிகளில் இருந்த சேமிப்பை அரசாங்கம் கடனாகப் பெற்றுப் போருக்குப் பயன்படுத்தியதாக அந்த நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ அன்று இப்படியாக இருந்த ஒரு நிலைமை இன்று &amp;nbsp;மாறியிருக்கிறது. இது யுத்தம் ஏற்படுத்திய மாற்றம். இப்பொழுது தமிழர்களும் வங்கிகளில் தாராளமாகக் கடன்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் வன்னியில் வங்கிக் கடன்களைப் பெறாத குடும்பங்களே இல்லை. கடன்படவில்லை என்றால் அவர்களால் வாழவே முடியாது என்ற நிலை. இந்த நிலையில் எப்படி கடனை எடுக்காமல் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் நடந்த இறுதிப்போர், எல்லோரையும் அகதிகளாக்கியது. அகதிகளோ எல்லாவற்றையும் இழந்து விட்டவர்கள். எனவே, இந்தப் போர் இன்று எல்லோரையும் அகதிகளாக்கிக் கடனாளிகளாக்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சாதாரண கடனாளிகளில்லை. பெருங்கடனாளிகள். எதற்கும் கடன் எடுக்க வேண்டும் என்பதால், எல்லோரும் இரண்டு மூன்று கடன் என்று எடுத்துப் பெருங்கடனாளிகளாகிக் கொண்டேயிருக்கிறார்கள். வட்டியைக் கட்ட முடியாமல், மேலும் புதிய கடனெடுத்து பழைய கடனின் வட்டியைக் கட்டுகிறார்கள். பிறகு புதிய கடனுக்காக வேறு கடனை எடுக்கிறார்கள். தொடர்கடன்கள். நிரப்பவே முடியாத கடன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகளும் தவிச்ச முயலை அடிப்பதைப் போல பாதிக்கப்பட்ட மக்களை வைத்துக் கடனைக் கொடுத்து வட்டியையும் முதலையும் கறக்கின்றன. கடன்கொடுப்பதற்காகவே ஏராளம் வங்கிகள். ஏராளம் கிளைகள். ஏராளம் திட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போருக்குப் பிந்திய வடக்கில் 64 நிதி நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளைத் திறந்து கடன் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன. ஊர் ஊராக, வீடு வீடாகக் கடன் திட்டங்களைப் பற்றிய பிரச்சாரம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;சனங்களைக் கடனாளிகளாக்குவதற்கே அரசாங்கமும் திட்டமிட்டுள்ளது போலும். இல்லையென்றால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களையும் நிவாரணத்தையும் வழங்கியிருக்கும். அழிவுகளை முழுமையாகப் புனரமைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அப்படியான எதையும் அது செய்யவில்லை. அப்படியான எதையும் செய்யவும் அது யோசித்திருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு உதவிகள் எந்த நிலையிலும் இந்த மக்களுக்குப் போதியதாக இருக்காது. முற்றாக இழந்த மக்களுக்கு முழுமைப்படுத்தப்பட்டதொரு உதவித்திட்டமே அடிப்படையான ஆதாரத்தை உருவாக்கும். அந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் தங்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;போரினால் பாதிக்கப்பட்ட மக்களாக இருப்பது வேறு. போரினால் முழுதாகவே அழிவடைந்த ஊர்களில் எல்லாவற்றையும் இழந்த மக்களாக இருக்கும் நிலை வேறு. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் எந்த வேறுபாட்டைப் பற்றியும் சிந்திக்கவும் இல்லை@ எந்த வித்தியாசங்களைப் பற்றியும் அக்கறைப்படவும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களும் தாய்நிலத்தில் இருக்கின்ற தமிழர்களுக்காகப் பாசக்கண்ணீரை வடிக்கிறார்களே தவிர, பாசத்துடன் நடப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போர் வாழ்க்கையையே மாற்றி விட்டது. தமிழர்களின் பொருளாதாரச் செயற்பாட்டையும் நோக்குநிலையையும் கூட மாற்றிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அது சேமிப்புகளைச் சிதைத்து விட்டது. சேமிப்பாளர்களையும் சேமிப்புக்கான அடிப்படைகளையும்கூடச் சிதைத்தே விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, சேமிப்புக்குப் பதிலாக இப்போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் கடனுக்காகவே உழைக்கிறார்கள். கடனையும் வட்டியையும் கட்ட வேண்டும் என்ற கடப்பாட்டுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கடன் அவர்களைத் துரத்துகிறது. ஓய்வில்லாமல் ஓடும்படி அது துரத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘முன்னர் போர் துரத்தியது. இப்போது கடன்துரத்துகிறது’ என்று ஒரு கடனாளி வேடிக்கையாகச் சொன்னார். அவர் இப்படிச் சொன்னபோதும் அவருடைய இந்தப் பேச்சினுள்ளே ஒருவித துயரம் இழையோடியிருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போரின்போது கைகளை, கால்களை, கண்களை என்று உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கூட ஓட முடியாத நிலையில் கடனுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நிலையைக் காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவதொரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிலையிலேயே இவர்கள் வங்கிகளில் கடனாளியானார்கள். ஆனால், பட்ட கடனைக் கட்டக்கூடியவாறு உழைப்போ வருமானமோ இவர்களுக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுதான் முயன்றாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போதிய வருமானத்தை யாராலும் எதிர்பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் சனங்களும் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களிடம் தாரளாமாகச் செலவைச் செய்யக்கூடியவாறான நிதிவளம் இருப்பதில்லை. நிதிவளம் இல்லாத இடத்தில் எப்படி அதிக வருவாயை எதிர்பார்க்க முடியும்? வருவாய் குறைந்த நிலையில் எப்படிக் கடனுக்கும் வட்டிக்குமான உழைப்பை எதிர்பார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று - வங்கிகள் வந்த பிறகு, ஊர்களில் தவிச்ச முயல் அடிக்கிற நாள் வட்டி, அறா வட்டி, மீற்றர் வட்டிக் காரர்களின் கைகள் வீழ்ந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நாடே கடன் பட்டுக் கொண்டிருக்கும்போது குடிமக்கள் கடன்படுவதில் என்ன புதினம் என்று நீங்கள் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான ஒரு கேள்வியைத்தான் ‘எத்தன்’ என்ற படத்திலும் கேட்கிறார், விமல். கடனிலேயே நாடும் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ வேண்டியிருக்கிறது என்பதை மிகச் சுவாரஷ்யமாகச் சொல்லும் படம் இது. ஆனால், படத்தைச் சுவாரஷ்யமாகப் பார்ப்பதைப்போல வாழ்க்கை இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சேமிப்பையே தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த ஒரு நிலை பெயர்ந்துள்ளதைப்போலவே தமிழர்களின் அடையாளங்களாக இருந்த பல சிறப்பம்சங்களும் போரினால் பெயர்ந்தும் சிதைந்தும் விட்டன. இவற்றை மீளுருச் செய்யும் காலம் எப்போது எந்த வடிவில் வருமோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;br class="Apple-interchange-newline" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-1587021066019090447?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/1587021066019090447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/1587021066019090447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/1587021066019090447'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_17.html' title='ஓட்டம் முடியவில்லை -- முன்னர் துரத்தியது போர். இன்று துரத்துவது கடன்'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-uNAY8tfysWM/TxZkOpa9egI/AAAAAAAAALk/f7abhedzVCY/s72-c/images+%252842%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-2948185594573149067</id><published>2012-01-15T22:21:00.000-08:00</published><updated>2012-01-15T22:26:45.731-08:00</updated><title type='text'>இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-lCvNymJ4sSw/TxPBnNmGedI/AAAAAAAAALc/1XEvz-4lmRY/s1600/images+%252837%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-lCvNymJ4sSw/TxPBnNmGedI/AAAAAAAAALc/1XEvz-4lmRY/s1600/images+%252837%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;span style="font-size: 21px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மேற்படி தலைப்பை என்னிடம் கேள்வியாகக்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கேட்டார் ஒரு நண்பர். அவருடைய இந்தக் கேள்விக்குள் பெருந்துக்கம் நிறைந்திருக்கிறது&lt;/span&gt;@ &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அத்துடன் எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் கலந்திருக்கிறது. இது தனியே ஒருவருடைய கேள்வியோ கவலையோ அல்ல. தமிழ்பேசும் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய கேள்வியும் இப்படித்தானிருக்கிறது. அவர்களுடைய கவலைகளும் அச்சங்களும் இந்தக் கேள்வியில் கலந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் இது இன்று தமிழ் பேசும் மக்களின் பொதுக்கேள்வியாகவும் பொதுக் கவலையாகவும் பொதுவான அச்சமாகவும் உள்ளது எனலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆகவே இந்தப் பொதுக் கேள்வி குறித்து நாம் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும். வெளியே சாதாரண கேள்வியாகத் தெரியும் இதனுள்ளே அசாதாரண நிலைமைகளே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. காரணம் இந்தக் கேள்வியின் பின்னால் ஏராளம் வலைப்பின்னல்களும் பொறிகளும் உள்ளன. அதேவேளை இந்தக் கேள்வியில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தலைவிதியும் எதிர்காலமும் ஏன் நிகழ்காலமும் கூட பொதிந்திருக்கின்றன. ஆகவேதான். இந்தக் கேள்வி எழுந்ததற்கான பின்னணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்தக் கேள்வி ஒரு சூழ்நிலையின் வெளிப்பாடு. தமிழ்பேசும் சமூகங்கள் இன்று எதிர்கொள்கின்ற &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அரசியல் வெறுமை நிலை&lt;/span&gt;&lt;span lang="ZH-CN" style="font-family: SimSun;"&gt;’&lt;/span&gt;&lt;span lang="ZH-CN"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உருவாக்கிய சூழ்நிலையிலிருந்தே இந்தக் கேள்வி பிறக்கின்றது. அறுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களும் முயற்சிகளும் தோல்வியில் வந்ததன் விளைவு இது. அவ்வாறாயின் தமிழ் பேசும் மக்களின் மனதில் தற்போதிருக்கும் தலைமைச் சக்திகள் குறித்தும் கட்சிகள் குறித்தும் கேள்வி நிலை எழுந்திருக்கிறது&lt;/span&gt;@ &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது என்பதே பொருளாகும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் பேசும் மக்கள் தங்களுக்குரிய தலைமைச் சக்திகள் குறித்த தெளிவையோ தெரிவையோ கொண்டிருக்கவில்லை. அப்படி அவர்கள் தமக்கான தெரிவைச் செய்யக் கூடிய அளவுக்கு இந்தச் சக்திகளும் இப்போதிருக்கும் தலைவர்களும் துலக்கமான நடவடிக்கைகளைச் செய்யவுமில்லை. அரசியல் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கான தலைமைத்துவப் பண்பையும் வினைத்திறனையும் இந்தத் தலைவர்கள் கொண்டிருக்கவும் இல்லை. அதாவது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அரசியல் உரிமைகளுக்காகப் போராடிப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் மனதில் இவர்களில் எவரும் தக்கதொரு இடத்தைப் பிடிக்கவில்லை என்பதே இந்தக் கேள்விக்கான காரணமாகும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எவரும் இன்னும் மக்களின் மனதோடு நெருங்கவில்லை. மக்களின் பிரச்சினைகளோடும் அவர்களுடைய உணர்வுகளோடும் கலந்திருக்கவில்லை. மட்டுமல்ல&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் பேசும் சமூகங்களின் கடந்த கால&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நிகழ்கால&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எதிர்கால அரசியற் பிரக்ஞையோடும் இவர்களில்லை என்பதே இவர்களின் பெரிய பலவீனமாகும். சு&lt;/span&gt;p&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;லரிடம் ஒரு மெல்லிய விகித வேறுபாடிருக்கலாம்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்தத் தலைவர்கள் குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளைக் கூடச் செயற்படுத்த முடியாத நிலையிலேயே அனைத்துத் தரப்பினரும் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொது உதவித்திட்டத்தை வரைய முடியாமலும் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமலும் பொது உதவிநிதியமொன்றை உருவாக்க முடியாமலும் இவர்கள் இருக்கிறார்கள். அதாவது எதற்கும் வக்கற்ற நிலையிலும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று கூறுமளவுக்குமே இவர்கள் செயற்படுகிறார்கள்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு என்று அதிக தலைவர்களும் அதிக கட்சிகளும் உருவாகியிருக்கின்றன. &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நாடு கடந்த&lt;/span&gt;&lt;span lang="ZH-CN" style="font-family: SimSun;"&gt;’&lt;/span&gt;&lt;span lang="ZH-CN"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நிலையில் கூட அரசியற் செயற்பாட்டு அணிகளும் ஆட்களும் தாராளமாக உருவாகியிருக்கும் சூழல் இது. அதிகளவான கட்சிகள் என்பதால் அதிகளவான நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உருவாகுவது இயல்பு. அதுவும் நீண்டகாலமாக ஒற்றைப் பரிமாண அரசியற் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ்பேசும் சமூகங்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலை உருவாகியிருப்பது எதிர்பார்க்க வேண்டியதே. அத்துடன் ஒரு ஜனநாயகக் சூழலில் இதுமாதிரி ஏராளம் அபிப்பிராயங்களோடும் நிலைப்பாடுகளோடும் பலரும் செயற்படுவது இயல்பானது என்று யாரும் சொல்லலாம். இது ஒரு வகையில் நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்த நிலைப்பாடுகள் எல்லாம் அரசியல் ரீதியாகவும் வாழ்நிலை ரீதியாகவும்&amp;nbsp; பலவீனமடைந்திருக்கும் சமூகங்களை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதற்காக ஏகப்பிரதிநிதித்துவ நிலைப்பாடும் அணுகுமுறையும் பொருத்தமானது என்று அர்த்தம் அல்ல. தமிழ் முஸ்லிம் தரப்பினரிடையேயுள்ள கட்சிகளிலும் இந்தக் கட்சிகளின் தலைவர்களிடமும் எப்போதும் ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையும் அணுகுமுறையுமே காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னையே ஏகபிரதிநிதித்துவ அமைப்பாகச் சொல்கிறது. முஸ்லிம் கொங்கிரஸ் சொல்கிறது முஸ்லிம் மக்களின் தலைமைத்துவ ஏக அமைப்பு தானே என்று. நாடுகடந்த தமிழீழ அரசினரும் இதற்கு விதிவிலக்கில்லை. எதிர்க்கட்சியை விரும்பாத&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மாற்று அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத ஒரு சூழலில் அரசியல் நடத்தவே இந்தத் தரப்புகள் எப்போதும் விரும்புகின்றன. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இது எந்த வகையிலும் பொருத்தமற்றது. அதுவும் இன்றைய உலகத்தின் போக்கில் இந்த &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஏக விருப்பு அரசியல்&lt;/span&gt;&lt;span lang="ZH-CN" style="font-family: SimSun;"&gt;’&lt;/span&gt;&lt;span lang="ZH-CN"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எதிர் நிலை அம்சங்களையே பெருக்கும். (இதுகுறித்துப் பின்னர் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம்).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஏகப் பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசும் இந்தக் கட்சிகளும் தலைமைகளும் மக்களின் தேவைகள்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பிரச்சினைகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை என்பது துக்ககரமான இன்னொரு கதை. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு இவை தீர்வு காண முயற்சிப்பது கூட இல்லை. பலவீனமான நிலையில் இருக்கும் சமூகங்களை மேல் நிலைப்படுத்தி அவற்றை வலுப்படுத்திக் கொண்டு அந்தச் சமூகங்களை வழிநடத்துவதே பொருத்தமானது என்றும் இவை சிந்திப்பதில்லை. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்னதான் இந்தச் சமூக மக்கள் &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கெட்டு நொந்தா&lt;/span&gt;&lt;span lang="ZH-CN" style="font-family: SimSun;"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;லும் பரவாயில்லை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமது அரசியல் இருப்பு முக்கியமானது. அதிலும் அதை மற்றவர்கள் பங்கு போடக் கூடாதது என்றே இவர்கள் விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்படவேண்டியது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எனவே&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இன்றைய நிலை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கடந்த காலத்துயரங்கள்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கடந்த காலத்தில் இந்த மக்கள் அளித்த அரசியற் பங்களிப்புகள்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;போராட்டத்தையும் அரசியலையும் வழிநடத்திய சக்திகளின் தவறுகள்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்தச் சமூகங்களின் எதிர்காலம் என்பவற்றைக் கணக்கிற் கொண்டு புதிய அரசியற் செயற்பாட்டை மிகப் பொறுப்போடு ஏற்று&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;புத்திப+ர்வமாகச் செயற்படும் அமைப்பும் தலைமைத்துவமுமே இன்றைய தேவை. இந்தத் தேவையின் பாற்பட்டே மேற்குறிப்பிட்ட பொதுக்கேள்வி மக்களிடையே எழுகிறது. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்தக் கேள்விக்கான பதிலைக் காண முடியாத நிலையில்தான் மக்கள் துக்கத்தோடிருக்கிறார்கள். இந்தத் துக்கம் பல பத்தாண்டுகள் நீடித்தது. இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது. இது இன்னும் நீடிக்கக் கூடாதென்பதே இங்கே பொதுக் கேள்வியாகப் பரிணமித்திருக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;02&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கைத்தீவின் அரசியல் களம் இது. புலிகள் இருந்த கால நிலைமைகள் இன்று மாறிவிட்டன. புலிகளின் மேல் இனியும் பாரத்தைச் சுமத்திக் கொண்டு அரசாங்கமும் இருக்க முடியாது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சர்வதேச சமூகமும் இருக்க முடியாது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் பேசும் தரப்பினரும் இருக்க முடியாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உள்நாட்டில் ஜனநாயக நடைமுறை சார்ந்த செயற்பாட்டில் பொதுவாக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கின்றனர். ஆகவே இந்தத் தளத்திலிருந்து பிரச்சினைகளை அணுகவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும் வேணும். கடந்த காலத்தின் தவறுகள் தடைகளாக இருக்கலாம். ஆனால் அதைக் கடந்து செல்ல வேண்டியது இன்றைய அரசியற் செயற்பாட்டாளர்களின் கடமை. அப்படி நடைபெறுகிறதா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்றால் அதுதான் இல்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;விடுதலைப் புலிகள் இல்லையே தவிர அவர்கள் இருந்த காலகட்டத்தைப் போலவே பிரதான பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. அரசாங்கமோ பிற தரப்புகளோ இந்தப் பிரச்சினைகளைக் குறைக்கவும் தீர்க்கவும் முயற்சிக்கவில்லை. குறிப்பாக தமிழ்&lt;/span&gt;,&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியற் பிரச்சினைக்கான தீர்வு தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. தமிழ் பேசும் சமூகங்களின்மீதான பாரபட்சங்கள் நீங்கவில்லை. படைவிலகல் நிகழவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடடையவில்லை. தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவு நிலை சீராகவில்லை. இடம் பெயர்ந்த மக்கள் முழுமையாக் குடியமர்த்தப்படவில்லை. வாழ்க்கைச் சுமைகள் குறையவில்லை. சட்டத்தால் சமூக உணர்வைக்கட்டுப் படுத்தும் நிலைமை மாறவில்லை. ஆகவே புலிகள் இல்லையே தவிர&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பிரச்சினைகளும் பழைய நிலைமைகளும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எனவேதான் மேற்சொன்ன கேள்வி பொதுக்கேள்வியாக மக்களிடம் பரிமாணங் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் புலிகள் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கண்டிருப்பார்கள். மக்களெல்லாம் மகிழ்வோடும் நிம்மதியோடும் இருந்திருப்பார்கள். பிரச்சினைகளே இல்லாத உலகம் ஒன்று பிறந்திருக்கும் என்பதல்ல.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;புலிகளைக் குற்றம் சுமத்தி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அவர்களின் மீது பழிகளைச் சுமத்திக் கொண்டிருக்கக்கூடியவாறு இன்று நிலைமை இல்லை என்பதே இங்கே கவனிக்க வேண்டியது. யாரும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு இப்பொழுது புலிகளின் அச்சுறுத்தல்&lt;/span&gt;,&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தடை&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; இல்லை என்பதே இங்கே கவனிக்கவேண்டியது. ஆகையால் பந்து இப்போது அவரவர் காலில் உள்ளது. அவரவர் அதை திறம்பட விளையாடவேண்டியதுதான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு நிலையில் புதிய சாத்தியங்களைக் காண முடியும் என்ற உற்சாகத்தை இன்றைய சூழல் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது இன்னொரு பெரிய விசயம்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆகவே&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவு நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த இரண்டு சமூகங்களும் முதற்கட்ட நெருக்கடியைக் கடக்கலாம். அதேவேளை அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலம் பெறலாம். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இதற்கு தமிழர்கள் முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகளையும் நலனையும் பேணவும் அவற்றை உத்தரவாதப்படுத்தவும் வேணும். அதைப்போலவே முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் வாழ்வு குறித்து கரிசனைகளைக் கொள்வது அவசியம். இதை நடைமுறைப் படுத்தும் அரசியற் செயற்பாட்டாளர்கள் யார்&lt;/span&gt;?&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அடுத்தது ஜனநாயகச் சூழலை வளர்த்தெடுப்பது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மாற்றுக் கருத்துகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் திறந்த மனதோடு இடமளிப்பது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வசைபாடுதல்களையும் துரோகி &lt;/span&gt;– &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தியாகி போன்ற சட்டகங்களுக்குள் செயற்பாட்டாளர்களை அடைப்பதையும் முத்திரை குத்தி வகைப்படுத்துவதையும் நீக்குவது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மறுவாழ்வுப் பணி உள்ளிட்ட முக்கிய நிலைமைகளில் ஒன்றிணைந்து நிற்பது போன்ற புதிய முறைச் செயற்பாடுகள் இன்று அவசியமானவை. இதைச் செய்வது யார்&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இதெல்லாம் முன்சொன்ன கேள்விக்கான அடிப்படைக்காரணங்களாகும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;00&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் ஊடகங்கள் கறுப்பு வெள்ளை அரசியலுக்குள் சிக்கியிருக்கும் வரை அவற்றினால் மக்களின் யதார்த்தமான பிரச்சினைகள் குறித்துச் சிந்திக்க முடியாது. உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் அப்பால் இந்த ஊடகங்கள் கற்பனாவாதத்திலும் தவறுகளைக் களையாமலும் இருக்கின்றன. வியாபார நோக்கத்திற்காக உயிர்களையும் குருதியையும் கண்ணீரையும் அவலங்களையும் தாராளமாகப் பயன்படுத்திப் பழகி விட்டன. வேறு சூழலில் என்றால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்த மாதிரி ஊடகங்களைக் கையாள்வதற்குக் கூச்சப்படுவார்கள். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழில் இந்தக் கூச்சம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நாகரீகம் எல்லாம் கிடையாது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாணியில் - எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஊடகங்களை நடத்தும் சமூகம் என்றால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அது ஈழத்தமிழ்ச் சமூகமாகத்தானிருக்கும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஊடக அறநெறி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தொழில்முறைப் பொறுப்பு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தொழில் நேர்த்தி எல்லாம் தமிழ் ஊடகங்களிடம் கிடையவே கிடையாது. அப்படியிருந்திருந்தால் இப்படித் தமிழ் ஊடகங்கள் சீரழிந்திருக்காது. சில ஊடகங்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் அவர்களால் ஒரு பிரத்தியேக வெளியை உருவாக்க முடியவில்லை. சிங்கள இனவாதத்துக்குப் பதிலாக தமிழ் இனவாதத்தை வளர்ப்பதிலேயே தமிழ் ஊடகத்தின் பொதுப் போக்கு இருக்கிறது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எனவேதான் கறுப்பு வெள்ளை அரசியல் இந்த ஊடகங்களில் பேணப்படுகிறது. கறுப்பு வெள்ளை அரசியலில் ஒரு போதும் விரிந்த பார்வைக்கு இடமில்லை. விமர்சனங்களுக்கு இடமில்லை. நியாயங்களுக்கு இடமில்லை. இந்த நிலை இப்படியே வளர்ந்து உண்மைக்கும் இடமில்லாமற் போய் விடுகிறது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இதனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் பேசும் மக்களின் அரசியற் குறைபாடுகளைப்போலவே தமிழ் ஊடகங்களின் குறைபாடுகளும் இருக்கின்றன. இந்த ஊடகங்களோ முறையான ஜனநாயகச் சூழலை தமிழ் ஊடகத்திலும் அரசியலிலும் வளர்த்திருக்கின்றனவா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அல்லது புதிய விவாதங்களுக்கான வாசல்களையாவது திறந்திருக்கின்றனவா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அல்லது நெருக்கடியான கட்டங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மக்களைத் தயார்படுத்தும் காரியங்களுக்குப் பின்னணியாக இருந்திருக்கின்றனவா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அல்லது போரினாலும் அகதி வாழ்வினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைப் பற்றிய விழிப்புணர்வை இந்த ஊடகங்கள் தமிழ் பேசும் சமூகங்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றனவா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அல்லது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அரசியல்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பண்பாடு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மனிதாபிமானப் பணிகள் போன்றவற்றில் ஒரு அழுத்தத்தரப்பாக இந்த ஊடகங்கள் பணியாற்றக்கூடிய &lt;/span&gt;– &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆலோசனை வழங்கக் கூடிய நிலையைப் பெற்றிருக்கின்றனவா&lt;/span&gt;? &lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அப்படியெல்லாம் நடந்ததாக இல்லையே! ஆனால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;விடுதலைக்காகப் போராடிய சமூகங்கள் என்றவகையிலும் பெரும் அழிவுகளைச் சந்தித்த சமூகங்கள் என்றவகையிலும் இன்னும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமூகங்கள் என்ற வகையிலும் இந்த ஊடகங்கள் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும்&lt;/span&gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆகவே தமிழ் பேசும் சமூகங்களின் மனதில் இருக்கும் பொதுக்கவலைகளுக்கும் பொதுக்கேள்விகளுக்கும் விடைகாண்பது என்பதே புதிய அரசியல் நடவடிக்கைதான். அ ந்த அரசியல் நடவடிக்கை என்பது அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து புதிய அரசியற் பாதையை &lt;/span&gt;– &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வழிமுறையை &lt;/span&gt;– &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;செயற்படு நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெற்றி வாய்ப்புகளை அரசுக்கும் அதன் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்துக் கொண்டேயிருப்பதாகிவிடும். மக்களைத் தொடர்ந்தும் தோற்கடிக்கக் கூடாது. அப்படித் தோற்கடிக்கவும் முடியாது. அதன் ஒரு வெளிப்பாடே மக்களிடம் எழுந்துள்ள இந்தப் பொதுக் கவலைகளும் பொதுக் கேள்விகளும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&amp;nbsp;00&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;i&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நன்றி- எதுவரை, புகைப்படம் - இணையம்&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-2948185594573149067?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/2948185594573149067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2948185594573149067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/2948185594573149067'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_15.html' title='இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-lCvNymJ4sSw/TxPBnNmGedI/AAAAAAAAALc/1XEvz-4lmRY/s72-c/images+%252837%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-5058398081474994475</id><published>2012-01-14T22:23:00.000-08:00</published><updated>2012-01-15T04:48:34.626-08:00</updated><title type='text'>இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா  = இந்தியாவின் அரசியல் நலனில் இலங்கை இனப்பிரச்சினை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Qrufn3SU_I4/TxJwY9Zv2II/AAAAAAAAALU/x4NNHDoVHsY/s1600/images+%252832%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-Qrufn3SU_I4/TxJwY9Zv2II/AAAAAAAAALU/x4NNHDoVHsY/s1600/images+%252832%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றித் தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விசயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் எனப் பலவகைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் எனப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத் தக்கவை. சில விழல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய அமைதி, பாதுகாப்பு, இந்த நாடுகளிலுள்ள சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டு நீக்கத்துக்கான வழிவகைகள், அவற்றின் அவசியம் போன்றவற்றை, கடந்த கால - சமகால – எதிர்கால அடிப்படைகளில் வைத்து பொறுப்புடன் சிந்திப்போர் இந்தக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் பல ஆய்வுகள் இந்தப் பிராந்தியத்தின் அமைதியையும் இந்தப் பிராந்திய மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் மையப்படுத்தியவை.&lt;br /&gt;&lt;br /&gt;பிராந்தியத்திலுள்ள நாடுகளை மையப்படுத்திய ஆய்வுகள் என்பதற்குப் பதிலாக, அரசுகளின் நலனை மையப்படுத்தியவை என்பதற்கப்பால், இந்தப்; பிராந்தியத்தின் மக்கள் மற்றும் அவர்கள் அடையாளப்படுத்தும் சமூகங்களை மையப்படுத்திய ஆய்வுகளும் கவனங்களும் இதில் முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தொடர்ச்சியாகவும் பரந்த அளவிலும் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பாக இந்திய அரசு எத்தகைய அக்கறையைக் கொண்டுள்ளது? அது எத்தகைய புரிதல்களைப் பெற்றிருக்கிறது? அல்லது அது இவைகுறித்து அக்கறைப்படவேயில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான கேள்விகள் இன்று பதில் காணப்படவேண்டியவையாக உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா வகித்த பாத்திரம் தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடி நிலையை இலங்கைத் தீவிலுள்ள அனைத்துச் சமூகங்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும் சரி, இந்தப் பிரச்சினையைத் தனது நலன்களுக்காகப் பயன்படுத்தியதிலும் சரி, இந்தியா பெரும் பாத்திரமொன்றைக் கொண்டுள்ளது. இன்னும் அப்படியான ஒரு முக்கியத்துவத்தையே அது கொண்டுமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மேலும் கூறுவதானால், பிராந்தியத்தில் முக்கியமான சக்தி என்ற வகையிலும் இலங்கைச் சமூகங்களுடன் வரலாற்று ரீதியாக இந்தியாவுக்குள்ள பிணைப்புகள் தொடர்பாகவும் இந்தியா இலங்கை விவகாரங்களில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்ற பாத்திரத்தை வகித்து வருகிறது எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையிலே, இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசும் இந்தியத் தலைவர்களும் உயர் மட்ட அதிகாரிகளும் இராச தந்திரிகளும் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நடைமுறையில் அவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்துகளுக்கும் வெளிப்படையான நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் மாறாகவே நிலைமையும் யதார்த்தமும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா திடசங்கற்பமான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது என்று இந்தியாவின் தலைவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றிக் கால பேதமின்றிச் சொல்லி வந்திருக்கின்றனர் - சொல்லி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்தத் திட சங்கற்பத்தின் தாற்பரியம் என்ன? அதன் அளவு என்ன? அது எத்தகையதாக இருக்கிறது? அதன் பெறுமானம் எத்தகையது? அல்லது அது வெறும் வாய்ப்பேச்சு என்ற அளவிற்தான் - சம்பிரதாயபூர்வமானதாக உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது என்று இன்னொரு தளத்தில் அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அப்படியானால், இந்தக் கரிசனையின் உண்மைத் தன்மை எத்தன்மையை உடையது? அல்லது இந்தக் கரிசனையின் வீச்செல்லையும் விசையும் எத்தகையன?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது? இன்னும் அத்தகைய முயற்சிகளை அது முன்னெடுத்து வருகிறது என்று இந்தியத் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இலங்கை வரும் இந்திய இராசதந்திரிகளும் முக்கியஸ்தர்களும் அமைச்சர்களும் இதைத் தான் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இப்படி அவர்கள் சொல்வது சம்பிரதாயமானதாகக் கூட இப்பொழுது மாறிவிட்டது. தாங்கள் சொல்லும் இந்தக் கூற்றுகளை இலங்கையில் இப்போது யாரும் நம்புவதும் இல்லை. பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்வதும் இல்லை என்றுகூட அவர்கள் யோசிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தொடர்ந்து தங்கள் சம்பிரதாயபூர்வமான அறிவிப்புகளை இயந்திரமொன்றின் செயற்பாட்டைப்போல எந்த உணர்ச்சியுமின்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் இந்தச் செயலாண்மைக்குள்; - (இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியா எடுத்துக்கொண்டு திடசங்கற்பம் (உறுதிப்பாடு), கரிசனை, முயற்சிகள், நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குள்ளும்) தான், இலங்கையில் இனப்பிரச்சினைப் போர் தீவிரமடைந்ததும் அது மூன்று லட்சம் வரையான உயிர்களைக் குடித்ததும் நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், இந்தியாவின் விசுவாசமான நடவடிக்கைகளும் திடசங்கற்பமும் கரிசனையும் செயற்பெறுமதியும் இந்தியாவின் செல்வாக்கும் இந்த விசயத்தில் எப்படியுள்ளன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியை இங்கே எழுப்பவேண்டியிருப்பதே மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். ஏனெனில், இதையும் விடக் காட்டமான கேள்விகள் இந்தியாவை நோக்கி இந்த விசயத்தில் ஏற்கனவே பலர் எழுப்பியிருக்கிறார்கள். இப்போது மீண்டும் இதை இங்கே கேட்பது எல்லோருக்கும் சலிப்பூட்டலாம். ஆனால், என்ன செய்வது இந்தக் கேள்வி மீண்டும் எழுகிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா இலங்கைக்கு வரவுள்ளார் என்ற செய்தி கடந்த வாரத்தில் வெளியாகியபோது இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்களும் இந்தச் செய்தியைக் கேலிப்படுத்தியே பிரசுரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஊடகங்கள் கேலிச்சித்திரங்களைக் கூட வெளியிட்டிருந்தன. சில ஊடகங்களின் ஆசிரிய தலையங்கள், கிருஸ்ணாவினுடைய விஜயத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மையையும் இந்தியா தொடர்பான அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஏன் இப்படி நடந்து கொள்கிறது? என்ற கேள்வி பெரும்பாலான தமிழர்களிடம் இன்று தீவிர நிலையில் எழுந்துள்ளது. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் இந்தியாவின் மீது பெரும்பான்மையான தமிழர்கள் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர் என்பது உண்மையானது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தரப்பின் அரசியலாளர்களிற் பலரும் பெரும்பாலான ஆய்வாளர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கையும் பாத்திரத்தையும் பெரிதாகவே பேசியும் கருதியும் வந்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவர்களைக் கூட இந்தியா பொருட்படுத்தவில்லை. – அதாவது, தன்னை நம்பியவர்களையும் தனக்கு விசுவாசமாக இருப்போரையும்கூட அது கவனத்திற்கொள்ளவில்லை என்று சில விமர்சகர்கள் இந்த நிலைதொடர்பாகக் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், இந்தியாவை மட்டும் நம்பினாற் போதாது, அதற்கப்பால் மேற்குலகத்தையும் நம்ப வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் திரட்ட வேணும் என்ற கருதுகோளுக்கு இலங்கைத் தமிழர்களிற் பலரும் இன்று நகர்ந்துள்ளனர். தமிழர் சார்பான அரசியலாளர்களிற் பலரும்கூட இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அவர்களுடைய அண்மைய கருத்துகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் மேற்குலகத்தை நம்பி, அதை நோக்கி நெருங்கிச் செல்ல இலங்கையோ இந்தியாவை நோக்கி நெருக்கமாகிறது. “என்னதான் இருந்தாலும் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கத்துக்குரிய நாடுகள். எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு இந்தியாவே நட்புச் சக்தி“ என்று அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவும் வேறு பலரும் தெரிவித்திருந்ததையும் நாம் கவனிக்க வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இனப்பிரச்சினை விசயத்தில் யார் என்ன சொன்னாலும் இந்தியா தனக்கென்று வகுத்துக் கொள்ளும் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே செயற்பட்டு வருகிறது. அதற்கேற்பவே அது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுவே துலக்கமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மைக்கு அப்பால், யாரும் அதன்மீது கண்டனங்களை வைப்பதும், பாராட்டுவதும் குற்றம்சாட்டுவதும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதும் நம்பிக்கை வைப்பதும் எதிர்ப்பதும் பயனற்றது. அவற்றைக் குறித்து இந்தியா கவலைப்படுவதில்லை. அது அவற்றையிட்டுக் கவலைப்படும் நிலையிலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பொறுத்தவரையில் அது உள்நாட்டிலும் சர்வதேச நிலையிலும் பிராந்திய ரீதியிலும் தனக்கு எழுகின்ற நெருக்கடிகளையும் அபாயங்களையும் குறித்தே சிந்திக்கிறது. அதற்கேற்ப அது இப்போது அமெரிக்கா தலைமையிலான நாடுகளுடன் நட்பாக உள்ளது. முன்னர் ரஷ்யா தலைமையிலான அணியுடன் நட்பாக இருந்தது. இரண்டும் இந்தியாவின் தேவைகளைப் பொறுத்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;இது முதலாவது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, தனக்கு சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியிலும் உள்நாட்டிலும் எத்தகைய நன்மைகள் கிட்டுகின்றன? என்ன வகையான நலன்கள் கிட்டும் என்பதற்கேற்பவே அது அசியற் கொள்கையையும் வெளியுறவுக் கொள்கையையும் இராசதந்திர நகர்வுகளையும் செய்கிறது. இதற்கேற்பவே அதனுடைய நிகழ்ச்சி நிரல்கள் அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மை பரகசியமானதும்கூட. பல தடவைகள் இது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே இந்தியாவின் திடசங்கற்பத்தைக் குறித்தும் கரிசனையைக் குறித்தும் முயற்சிகளைக் குறித்தும் இந்தியத் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கத்தான் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத் தலைவர்களும் பிரதானிகளும் இலங்கைக்கு வரும்பொழுதெல்லாம் இனப்பிரச்சினை தொடர்பாகவும் அவர்கள் ஏதாவது கதைக்கத்தான் போகிறார்கள். அதேபோல, இலங்கையின் அரசியற் தலைவர்கள் இந்தியாவுக்குச் செல்லும்வேளையில் எல்லாம் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசத்தான் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஒரு சம்பிரதாய பூர்வமான விளையாட்டாக மாறியுள்ளது என்று இப்போது சிங்கள அதிகார வர்க்கத்தினருக்கும் தெரிந்து விட்டது. ஆனால்,&amp;nbsp;&amp;nbsp;தமிழர்களில் ஒரு சாரார் இந்தக் கூற்றில் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கவே போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பனிப்போர்க்காலத்தில் நிலவிய உலக ஒழுங்கின் காரணமாக - அன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகளையிட்டு இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக இலங்கைக்கு அச்சங்கள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தமிழர்களின் ஆயுதந்தாங்கிய அரசியற் போராட்டத்துக்கு இந்தியா வழங்கிய ஆதரவையிட்டும் இலங்கைக்கு நெருக்கடிகளும் இருந்தன. அச்சமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பின்னர் - குறிப்பாக 1990 க்குப்பிந்திய நிலைமைகள் முற்று முழுதாகவே மாறின. பின்னர், இந்தியாவானது இலங்கை அரசை – சிங்களத் தரப்பை - அனுசரித்துப் போகும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது, வரவேண்டியதாக உள்ளது என்பதை இலங்கை தெளிவாகவே புரிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பொறுத்தவரை அது தமிழ்த் தரப்புக்கும் சிங்களத்தரப்பினருக்கும் இடையிலான ஒரு இரட்டை அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முற்படுகிறது. தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் தமிழ்த்தரப்புக்கான தன்னுடைய ஆதவைத் தெரிவித்துக்கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, ஐக்கிய இலங்கைக்குள் ஒருமைப்பாட்டைச் சிதைக்காத வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். அத்தகைய தீர்வொன்றுக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று சொல்வதன் மூலமாக சிங்களத்தரப்பின் உளநிலையிற் கலவரத்தை உண்டு பண்ணாமல், அதைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் இந்த சமாளிப்புத் தனமான நிலைப்பாட்டைத் தெளிவாகவே சிங்கள அதிகாரத் தரப்புப் புரிந்துள்ளது. எனவேதான், அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஒரு தோற்றப்பாட்டைத் தொடர்ச்சியாக – ஆனால், வௌ;வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இந்தியாவுக்கு ஒரு முக்கிய பிரச்சினை தீர்ந்து விடுகிறது. அதனுடைய &amp;nbsp;நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் இலங்கை அரசு இந்தியாவை விட்டு வேறு பிராந்தியங்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு விடக்கூடாது என்பதே இந்தியாவின் கவலை. இந்தக் கவலை நீங்க வேண்டுமானால், இலங்கை – சிங்களத்தரப்பு – முகஞ்சுழிக்காதவாறு ஒரு அணுகுமுறையையும் நிலைப்பாட்டையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான், சிங்களத்தரப்பின் - இலங்கையின் - விருப்பத்துக்கு மாறாக இலங்கையின் இனப்பிரச்சினை விசயத்தில் தமிழர்களுக்கு – தமிழ் பேசும் மக்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்க அது விரும்பவில்லை. ஆகையாற்தான் அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்தங்களற்ற வகையில் தன்னுடைய அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையைப் பொறுத்த இந்தியாவின் புரிதல் என்பது, சிங்களத் தரப்பின் முதன்மைப்பாட்டையே கொண்டதாக உள்ளது. அதாவது, இலங்கை என்பது சிங்களவர்களின் தலைமைத்துவத்தைக் கொண்டது, அவர்களுடைய விருப்பத்தையே பிரதானமாகக் கொண்டது என்பதாகும். அதாவது, இந்தியாவின் நலனுக்குத் தமிழர்களை அனுசரிப்பதையும் விடச் சிங்களவரை அனுசரிக்கலாம் என்பதே இந்தியாவின் முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இதையே இந்தியாவின் நிலைப்பாடும் நடைமுறையும் அணுகுமுறைகளும் நிரூபிக்கின்றன. இதை மறுத்துரைப்போர் இந்தியாவின் பிற அணுகுமுறைகளைப் பற்றிய ஆதரங்களை முன்வைக்க வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்தியாவின் அரசியல் நலன்களுக்காகப் பலியிடப்படும் ஒரு விசயமாகவே இலங்கையின் இனப்பிரச்சினையும் இலங்கைத்தமிழ் பேசும் மக்களின் அரசியல் போராட்டங்களும் உள்ளன என்பது தெளிவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனுடைய நீட்சி இன்னும் நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடும். இங்கே நாம் இந்தியாவைக் குறைத்து மதிப்பீடுவதாகவோ, குறை சொல்வதாகவோ இந்தக் குறிப்பை எழுதவில்லை. பதிலாக இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் அது, அதனுடைய நலன்களைக்குறித்தே அக்கறைப் படும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதை இங்கே குறிப்பிடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்தியாவின் அறிவிப்புகளும் அணுகுமுறைகளும் சொல்லும்சேதிகளின் பின்னாலுள்ள “சொல்லாத சேதிகள்“ இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கையர்களின் சொந்த விசயம் என்பதாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கப்பால், அது சிங்களத் தரப்பின் முகக்கோணலை விரும்பவில்லை என்பதாகவும் இருக்கிறது. எனவே, தமிழர்களின் அரசியல் அணுகுமுறைகள் மீள்பரிசீலனைக்கும் அனுபவ மீள்பார்வைக்கும் உரியதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விடுத்து, இந்தியாவைக் குறைசொல்வதாலோ, இழிவு படுத்துவதாலோ, நம்பிக்கை கொள்வதாலோ விசுவாசமாக இருப்பதாலோ எதுவும் நடந்து விடப்போவதில்லை. – அரசியல் அநாதைகளாகுவதைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-5058398081474994475?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/5058398081474994475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/5058398081474994475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/5058398081474994475'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_14.html' title='இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா  = இந்தியாவின் அரசியல் நலனில் இலங்கை இனப்பிரச்சினை'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Qrufn3SU_I4/TxJwY9Zv2II/AAAAAAAAALU/x4NNHDoVHsY/s72-c/images+%252832%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-3000827922464739143</id><published>2012-01-09T19:51:00.000-08:00</published><updated>2012-01-09T20:10:56.051-08:00</updated><title type='text'>உபாயமும் அதிகாரமும் -02</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-FSC8CsG3DfE/Twu1m5tjUaI/AAAAAAAAALM/c-zu-ofieZI/s1600/images+%252829%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-FSC8CsG3DfE/Twu1m5tjUaI/AAAAAAAAALM/c-zu-ofieZI/s1600/images+%252829%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போரின்போது யப்பானின் மீது அணுக்குண்டை வீசித் தாக்கியது அமெரிக்கா. இதற்குக் காரணம், அப்போது யப்பான் ஜேர்மனியோடு சேர்ந்து போரில் ஈடுபட்டதே. இதை அமெரிக்கா குற்றமாகக் கருதியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான தண்டனையாகவே யப்பானின் மீதான அமெரிக்கத் தாக்குதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தாக்குதலால் யப்பானின் இரண்டு முக்கிய நகரங்களான ஹிரோஸிமாவும் நகஸாகியும் அழிந்தன. இந்த அணுக்குண்டின் பாதிப்பை இப்போதும் இந்த நகரங்களில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் முடிந்து விட்டது. காலமும் மாறிவிட்டது. அரசியற் போக்குகளும் மாறிவிட்டன. இப்போது யப்பானும் அமெரிக்காவும் நண்பர்கள். பல விசயங்களில் கூட்டாளிகள். இது எப்படி நிகழ்ந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, இன்னும் யப்பானில் அமெரிக்காவின் கடற்படைத்தளங்களும் விமானப்படைத்தளங்களும் உள்ளன. அதற்காக அமெரிக்காவின் அடிமையாக – கீழ்ப்படிந்திருக்கவில்லை யப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் சமாதானப் பேச்சுகளின்போது அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தூதுவர்களில் முக்கியமானவர் யஸ_ஷி அகாஸி. இவர் வன்னிக்கும் வந்து சென்றார். வந்தவர் வன்னியில் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பார். அப்போது வன்னியில் அகாஸி சொன்னவை முக்கியமானவை. குறிப்பாக, அவை பெரும்பாலும் அரசியல் உபாயங்கள். இலங்கைத் தமிழர்கள் தங்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய உபாயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;அகாஸி சொன்னவை:-&lt;br /&gt;&lt;br /&gt;“உலகத்திலேயே அதிக இழப்பையும் அதிகமான கொடுமையையும் சந்தித்த மக்கள் நாங்கள்(யப்பானியர்கள்). இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் விளைவுகளை இன்னும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சந்தித்த இழப்பின் அளவுக்கு இந்த உலகத்தில் வேறு யாரும் அதிக இழப்புகளையோ கொடுமையையோ சந்திக்கவில்லை. ஆனால், நாங்கள் இந்தத் தாக்குதலை நடத்திய அமெரிக்காவுடன் இப்பொழுது நண்பர்களாக இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியுடன், தாக்குதல் நடத்தியவர்களுடன், அழிவுகளைத் தந்தவர்களுடன், மன்னிக்கவே முடியாதவர்களுடன் எப்படி நட்புக் கொண்டாட முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். எங்களிடமும் இந்தக் கேள்வி இருக்கிறது.&lt;br /&gt;இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் - யப்பானின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் போது, புதிய உலக ஒழுங்கின்படி நாங்கள் அமெரிக்காவுடன் நட்புக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதை அங்கீகரிப்பதற்கு யப்பானிய மக்கள் தயாரில்லாத நிலையிலேயே இருந்தனர். காரணம், அந்த அளவுக்கு யப்பானியர்களின் மனதில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. மனிதாபிமானமற்ற அந்தத் தாக்குதலை யாரும் மன்னிக்கத் தயாராக இல்லை. அப்படி அமெரிக்காவுடன் நட்பு வைத்துக் கொள்வதென்பது யப்பானை அடிமை நிலைக்கே கொண்டு செல்வதாக இருக்கும் என பெரும்பாலான யப்பானியர்கள் கருதினார்கள். அவர்கள் அப்படிக் கருதியதில் தவறும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு அமெரிக்காவின் மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும் யப்பானிய மக்களுக்கிருந்தது. ஆனால், நாங்கள் எதிர்கால யப்பானைப் பற்றியே சிந்தித்தோம். எதிர்கால யப்பானைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் எங்கள் கசப்பான கடந்த காலத்தை மறக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே எதிர்கால யப்பானுக்காக கசப்பான – மறக்கவே முடியாத – மன்னிக்கவே முடியாத கடந்த காலத்தை மறக்கத்தான் வேண்டும் என்று யப்பானிய மக்களை உணரவைத்தோம். இது இலகுவான காரியமாக இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், அந்த அளவுக்கு ஒவ்வொரு யப்பானியரும் அமெரிக்காவினால், வஞ்சிக்கப்பட்டிருந்தனர். எந்தத் தலைமுறையிலும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத காயமாக இருந்த நாகஸாகி, ஹிரோஸிமா தாக்குதல்களை எவரும் இலகுவாக மறந்து விடமுடியாதிருந்தனர்.&lt;br /&gt;ஆனாலும் நாங்கள் யதார்த்தத்தைப் பற்றி, எங்களுக்கிருந்த அவசியத்தைப் பற்றிச் சிந்தித்தோம். எனவே எப்படியோ எங்கள் மக்களைத் தயார்ப்படுத்தி அமெரிக்காவுடன் நட்புக்குக் கரம் நீட்டினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக நாங்கள் (யப்பானியர்கள்) அமெரிக்காவுக்கு விசுவாசிகளாகவோ அடங்கியவர்களாகவோ மாறிவிடவில்லை. யப்பானியர்களின் தனித்துவத்தையும் அவர்களுடைய அடையாளத்தையும் அவர்களுடைய முதன்மையையும் இன்று உலகம் வியப்போடு அங்கீகரித்துள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே யப்பான் வளர்ச்சியடைந்து உலகத்தின் முதன்மைப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதும் அமெரிக்கத் தளங்கள் யப்பானில் இருக்கின்றன. இதை நாங்கள் அரசியல் ரீதியாக சுமையற்ற முறையில் மாற்றி வைத்துள்ளோம்.&lt;br /&gt;யப்பான் இன்று சுயாதீனமான நாடாக, முதன்மை நாடுகளில் ஓரங்கமாக, உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்வுக் கொண்டுவர உதவும் நாடாக, இலங்கைக்கும் உதவும் நாடாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இலங்கைக்கு ஒரு நண்பனாக, உதவும் ஆளாக, யப்பானியர்களின் பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக, இந்த உலகத்தில் நன்மைகளையும் அமைதியையும் விரும்புகின்ற யப்பானியராக இங்கே வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யப்பானியர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பாடங்களாக, வழிகாட்டிகளாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் பொறுத்தவரை (இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை) யில் உங்களுடைய கடந்த காலத் துயரங்கள் மறக்க முடியாதவை. ஆனால், உங்களின் எதிர்காலத்துக்காக – எதிர்காலத்தின் நன்மைகளுக்காக நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மன்னிக்கவும் மறக்கவுமே வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தையும் விட எதிர்காலமே எப்போதும் பெறுமதியானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலம் என்பது உங்கள் இளைய சகோதரர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உரியது. அவர்களுக்கு நீங்கள் எதைக் கொடுக்கப் போகிறீர்கள். கடந்த காலத்தின் கறைகளையும் தேங்கிய கண்ணீர்த்துளிகளையுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக அப்படி வேண்டாம். அவர்களுக்கு நிகரற்ற மகிழ்ச்சியான காலமொன்றைப் பரிசளியுங்கள். அந்தப் பரிசு உங்கள் திறமையாலும் சிந்தனையாலும் மனதாலுமே சாத்தியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நீங்கள் மக்களுக்கு நன்மைகளை நோக்கிச் சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான – சுமைகளும் அபாயங்களும் இல்லாத ஒரு எதிர்காலத்தைப் பரிசாகக் கொடுத்தால் அதுவே போதும்..”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அகாஸி சொன்னபோது, இதை அப்போது பலவிதமாக பலரும் மொழிபெயர்த்தார்கள். ‘அகாஸி ஒரு தந்திரப் பொறியை வைக்கிறார்’ என்றனர் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தமிழர்களைச் சிங்களவர்களிடம் சரணடையும்படி தந்திரமாகச் சொல்கிறார் அகாஸி’ எனச் சொன்னார்கள் வேறு சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இது அடிமைச் சாசனமொன்றுக்கான புதிய விளக்கம். இதை மிக அழகாகச் சொல்லி ஏமாற்றுகிறார்’ என்று வேறு சிலர் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லை, அகாஸியின் கூற்றை நாங்கள் முழுதாகப் புறக்கணிக்க முடியாது. இவரைப் பரிசீலிக்கலாம்’ என்றனர் வேறு சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே பலவிதமான கருத்துகள் அகாஸியின் கூற்றுத் தொடர்பாக முன்வைக்கப்பட்டன. ஆனால், அகாஸி சொன்னதைப் போலவோ அவர் எதிர்பார்த்ததைப் போலவோ எதுவும் நடந்து விடவில்லை.&lt;br /&gt;மாறாக பகை முற்றிப் பாதகமாகவே எல்லாம் முடிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரையில் அகாஸி சொன்னவை ஒரு உபாயத்தின் பாற்பட்டவை. பெரும் அழிவையும் இழப்பையும் சந்தித்தவர்கள், அதிலிருந்து மீண்ட – எதிர்த்தரப்பை நட்புக் கொள்ள வைத்த, நட்புடன் நடப்பதற்கு இணங்க வைத்த, யப்பானைத் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு புத்திபூர்வமாக்கிய அணுகுமுறையை அவர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகாஸி பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இன்றைய உலகத்தில் அந்தச் சிறிய தோற்றமுடைய முதிய மனிதர் மிகச் சிறந்த இராசதந்திரியாகவே எனக்குத் தெரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் பொருத்தம் கருதி வன்னியில் அப்போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் சொல்ல வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளிடன் நடந்த சந்திப்புகளின் போது அகாஸி பல விசயங்களைப் புலிகளிடமும் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அகாஸியிடம் கேட்டார், “விடுதலைப் புலிகளை யப்பான் அங்கீகரிக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுடைய விருப்பமும் தலைவர் பிரபாகரனின் விருப்பமும்” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பதிலளித்த அகாஸி, “யப்பான் என்பது ஒரு பெரிய கப்பல். அதைச் சட்டெனத் திருப்பிவிட முடியாது” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அர்த்தம் பலவாக இருக்கலாம். ஆனால், முக்கியமாக யப்பான் என்ற நாட்டின் தீர்மானத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் சட்டென மாற்றிக் கொண்டுவிட முடியாது. யப்பான் பல நாடுகளுடன் தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டுள்ள நாடென்பதால், அவற்றைப் பாதிப்படையாத வகையில் பேணிக்கொண்டு, புலிகளை அங்கீகரிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அதற்குக் கால அவகாசமும் கொஞ்சக்கால நட்புறவுப் பயணமும் (நம்பிக்கையும்) தேவை என்பதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அகாஸியின் இந்தப் பதிலைத் தமிழ்ச்செல்வன் திரு. பிரபாகரனிடம் சொன்னார். இதைக் கேட்ட பிரபாகரன், சற்றுக் கோபத்துடன் அகாஸியிடம் சொல்லும்படி சொன்ன பதில்:-&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியென்றால், அந்தக் (யப்பான் என்ற) கப்பலை இந்தத் துறைமுகத்தில் (புலிகளிடம் - தமிழ்ப்பகுதியில்) கட்டமுடியாது” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு? - இப்போது எங்களுக்குத் துறைமுகமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அகாஸி 2011 இல் மீண்டும் கிளிநொச்சிக்கு வந்திருந்தார். அதுவும் புலிகள் அவரை வரவேற்ற அதே இடத்துக்கு அவர் வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவரைச் சந்தித்தேன். அவர் முன்னர் பேசிய எதையும் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அடையாளங்கண்டு சிரித்தார். ஆனால், அவருடைய சிரிப்பில் மெல்லிய துக்கம் படிந்திருந்ததைக் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-3000827922464739143?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/3000827922464739143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/3000827922464739143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/3000827922464739143'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/02.html' title='உபாயமும் அதிகாரமும் -02'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-FSC8CsG3DfE/Twu1m5tjUaI/AAAAAAAAALM/c-zu-ofieZI/s72-c/images+%252829%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-1533680435134108425</id><published>2012-01-09T19:30:00.000-08:00</published><updated>2012-01-09T19:33:14.861-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சொல்லும் பொருளும் மனமும் அருள்வீர்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-YR4b307MOn0/TwuwN95T_jI/AAAAAAAAALE/068WXvdYd_c/s1600/download+%25283%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-YR4b307MOn0/TwuwN95T_jI/AAAAAAAAALE/068WXvdYd_c/s1600/download+%25283%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் மேலும் ஒரு சிறுவர் இல்லம் வன்னியில் - முல்லைத்தீவில் - திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில் - இந்த வாரம் - கிளிநொச்சியில் மேலும் ஒரு முதியோர் இல்லம் புதிதாகத் திறக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதனைக் காட்டுகிறது? சமூகத்தில் ஆதரவற்றோரின் நிலை அதிகரித்துள்ளது. அவர்களைப்பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பராமரிக்கும் முயற்சிகள், அந்த அரும்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் நடந்த போர் அங்கே, ஆதரவற்றோரையும் உதவி தேவைப்படுவோரையும் பெருக்கியுள்ளது. ஆனால், இந்தத் தேவைகளுக்கான உதவிகளைச் செய்வோரை அது பெருக்கியுள்ளதா என்றால், சற்று வருத்தத்துடன்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியுள்ளது.&lt;br /&gt;உதவிகளும் ஆதரவும் தேவைப்படும் அளவுக்கு அவற்றைச் செய்வோரின் தொகை குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவுவதே சிறந்த பணி. தொண்டிற் சிறந்தது, தேவைப்படுவோருக்குத் தேவைப்படும் காலத்தில் செய்யும் பணியே!&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் ‘காலத்திற் செய்யும் பணி, ஞாலத்திற் சிறந்தது’ என்று சொல்வார்கள். இடமறிந்து, நிலையறிந்து செய்யும் உதவியே பேருதவியாகும்.&lt;br /&gt;போர் எப்போதும் வேர்களை அறுத்தெறியும். சிதைவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும். அதிலும் நவீன போர்கள் மிக அதிகமான சேதாரங்களை ஏற்படுத்துவன. நவீன போர்களில் அதிக சேதங்களையும் அழிவுகளையும் சந்திப்பவர்கள் பொதுமக்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களே, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். போர்ப்பயிற்சியோ, பாதுகாப்புக்கான ஆயுதங்களோ இல்லாத நிலையில் இருப்பவர்களும் இவர்களே. &lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமல்ல, நவீன போரானது, வெடிபொருட்களை ஆதாரப் பொருளாகக் கொண்டிருப்பதால், அதன் தாக்கம் போர்க்களத்துக்கு அப்பாலும் ஏற்படுகிறது. இதைவிடப் பொது மக்களை மையப்படுத்தி, அவர்களை இலக்கு வைத்துத் தாக்குதலை நடத்தும் போர் முறையில் மக்களுக்கே அதிக சேதமேற்படுகிறது.&lt;br /&gt;முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அந்தப் போர் நடந்த நாடுகளில் மிக உச்ச நிலையில் இருந்தன. மனித வரலாறு கண்டிராத அளவுக்கிருந்த அந்தத் தாக்கங்களினால், லட்சக்கணக்கான சனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்றே தெரியாத நிலையில் திணறின அரசுகள். குறிப்பாகப் போரில் ஈடுபட்ட அரசுகள். மேலும் சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நிலை ஒரு சவாலாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையானது மனித குலத்துக்கே பெரும் சவாலை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்டோரை அந்தப் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுப்பதற்காகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய அவசியமேற்பட்டது மனித குலத்திற்கு.&lt;br /&gt;இதன் விளைவுகளாகவே, பல்வேறுபட்ட தொண்டு அமைப்புகள் தோற்றம்பெற்றன. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக அன்று தோற்றம் பெற்ற அமைப்புகளே, இன்று உலகெங்கும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் போர் நடந்த வேளையிலும் இப்போதும் தொண்டாற்றிக் கொண்டிருப்பவையும் இந்த அமைப்புகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;(வெள்ளைக்காரன் - அந்நியநாட்டுக்காரன் எல்லாம் உதவுகிறான், ஆனால், எங்கட சொந்த உறவுகள்மட்டும் ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் காலத்தைக் கடத்தித் தங்களின் கைகளை இறுகப் பொத்திப் பிடிக்கின்றன. மனம் விரியாததே இதுக்கெல்லாம் காரணம். விடுதலையை உண்மையாக இவர்கள் விரும்பியிருந்தால், இவர்களிடம் நிச்சயமாக மனவிரிவு ஏற்பட்டிருக்கும். பாசாங்கு செய்பவர்களிடம் எப்படி மனவிரிவு ஏற்படும்?’ என்று கேட்கின்றார் வன்னியில் ஒரு முதியவர்.)&lt;br /&gt;&lt;br /&gt;போரின் பாதிப்புகளுக்கு அப்பால், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சந்திக்கும் மக்களைப் பராமரிப்பதிலும் இந்த அமைப்புகளின் பணியும் பங்களிப்பும் உள்ளது. அதாவது, அனர்த்தமோ இடரோ எந்த வகையில் வந்தாலும் அவற்றாற் பாதிக்கப்படும் சனங்களைப் பராமரிப்பது, பாதுகாக்க முற்படுவது, ஆதரிப்பது, இத்தகைய பணிகளினூடாக பாதிக்கப்பட்டோரின் உளநிலையைச் சீராக்கி அவர்களை இயல்பு வாழ்வில் மேம்பட வைப்பதே இந்தத் தொண்டு அமைப்புகளின் பணியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பணியை எந்தச் சமூகம் முன்னின்று செய்ய முனைகின்றதோ அதுவே பண்பாட்டிற் சிறந்த சமூகமாகும். மனிதாபிமானமும் மனித நேயமுமே சிறந்த ஒரு பண்பாட்டின் அடிப்படைகளாகும். இவை வரண்டநிலையில் இருக்கும் எந்தச் சமூகமும் தனது பண்பாட்டை இழந்ததாகவே மாறும். இதற்குப் பிறகு, அந்தச் சமூகம் பண்பாட்டுப் பெருமைகளைப் பேசுவதால் பயனே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், போரை உச்சநிலையில் நடத்திய, அதை ஆதரித்த ஈழத்தமிழ்ச் சமூகமும் இலங்கை அரசும் போரினாற் பாதிக்கப்பட்ட சனங்களைப் பராமரிக்கும் விதம் மிகக் கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகவே இருக்கிறது. அதிலும் போரினால் அநாதரவாக்கப்பட்ட மக்களின் நிலையைப் பற்றிய கரிசனை இந்தத் தரப்புகளுக்குப் போதாது என்றே கூற வேண்டும். (பண்பாட்டிலும் வரலாற்றிலும் தாம் சிறந்த சமூகத்தினர் என்று இவர்கள் கூறிக்கொண்டிருப்பது எதன் அடிப்படையில்?).&lt;br /&gt;&lt;br /&gt;பிரதானப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பணி பாராமுகமாக்கப்பட்டுள்ளது. அல்லது சில சில்லறைத் தரப்பினர் இந்தப் பாதிப்புகளையும் பாதிக்கப்பட்டோரையும் வைத்து அரசியல் நடத்துகிறார்கள். அல்லது வியாபாரம் செய்கின்றனர். இவர்களிற் பெரும்பாலானோர் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அரசியற் செயற்பாட்டாளர்களும் சில இணையத்தளத்தினருமே!&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், பாதிக்கப்பட்டோர் மனிதாபிமான எல்லைகளுக்கு அப்பால், நீதிக்கும் தர்மத்துக்கும் அப்பால், மிக மோசமான முறையில் விற்பனைப் பண்டங்களாகவும் காட்சிப் பொருட்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pCgKEyIAPNs/TwuwHnvJm-I/AAAAAAAAAK8/sOnddsqMt2A/s1600/images+%252828%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-pCgKEyIAPNs/TwuwHnvJm-I/AAAAAAAAAK8/sOnddsqMt2A/s1600/images+%252828%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இத்தகையதோர் அவலப் பின்னணியில், இந்த அவலநிலைக்கு மாறாகவும் இந்த அவலப்பரப்பிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுப் பராமரிப்பதாகவும் சில காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தி பூத்தாற்போல என்பார்களே, அதைப்போல அருமையாகச் சில காரியங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சில முக்கியமான – முன்னணிப் பாடசாலைகள், பாதிப்புக்குள்ளான சிறார்களை, போருக்குப் பின்னரான சூழலில் பொறுப்பேற்று அவர்களுடைய கல்வியை வழங்கி வருகின்றன. சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி போன்ற இதில் முன்னுதாரணமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல அங்குள்ள சில சிறார் &amp;nbsp;இல்லங்களும் குறிப்பிட்ட தொகையிலான ஆதரவற்ற சிறுவர்களைப் பொறுப்பேற்று அவர்களுடைய எதிர்காலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தத் தொகை மிகக் குறைவானவே. பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் - உதவி தேவைப்படுவோரின் தொகையுடன் ஒப்பிடும்போது இவ்வாறு பொறுப்பெடுக்கப்பட்டோரின் அளவு மிகமிகக் குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் - கிளிநொச்சி மாவட்டத்தில் ‘மகா தேவ ஆச்சிரமம்’ மற்றும் ‘குருகுலம்’ போன்றவற்றில் சுமார் முன்னூறுக்கும் அதிகமான பிள்ளைகள் பராமரிக்கப்படுகிறார்கள். இந்த இல்லங்களில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவே பராமரிக்கப்படுகின்றனர். இந்த இல்லங்களுக்கான உதவிகளைப் பலர் முன்வந்து செய்வது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் - முத்தையன் கட்டில் இயங்கும் அன்பு இல்லத்தில் (புனித பூமி இல்லத்தில்) சுமார் அறுபது வரையான சிறார்கள் பொறுப்பேற்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறார்கள். இந்தத் தொகை வரவர அதிகரித்து வருவதாக அங்குள்ள நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இல்லத்துக்கான செலவீனங்களைப் பெருமளவிலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உதவும் மனப்பாங்குடையோரே செய்து வருகின்றனர். இவர்கள் எந்த வகையான அரசியலையும் விட பாதிக்கப்பட்ட மக்களுக்கு – அநாதரவான சிறார்களுக்கு உதவுவதையே தங்களுடைய பிரதான அக்கறையாகக் கொண்டிருக்கின்றனர். சிலர் நேரிலேயே இந்த இல்லத்துக்கு வந்து நிலைமையைப் பார்த்து தங்களின் பங்களிப்பு எல்லையை விரிவாக்கம் செய்கின்றனர். அத்துடன், நிலைமையை நேரிற் பார்த்துச் செல்வதால், இவர்கள் இன்னும் பலரையும் இந்த இல்லத்துக்கான பங்களிப்பாளர்களாகவும் ஆக்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘முதலில் சொந்த உறவுகளுக்கு உதவுவோம். அவர்களைப் பராமரிப்போம். சிதைவு நிலையில் உள்ள சமூகத்தை நிலைப்படுத்துவோம். மீள் நிலைப்படுத்தப்படும் ஒரு சமூகத்தினாலேயே அதனுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஆதரவும் வழிகாட்டலும் தேவை. முக்கியமாக உணவும் கல்வியும் அவசியமானவை. இதைச் செய்வோம். &amp;nbsp;இதற்கு உதவுவோம்’ என்பதாக இருக்கிறது இவர்களுடைய நோக்கமும் சிந்தனையும் அபிப்பிராயமும்.&lt;br /&gt;‘இந்த அடிப்படையில் உதவிகள் கிட்டினால், இளைய தலைமுறையை நல்லமுறையில் - சிதைவின்றி ஆற்றுப்படுத்தி வளர்த்தெடுக்க முடியும் என்று சொல்கிறார் அன்பு இல்லத்தின் நிர்வாகி.&lt;br /&gt;&lt;br /&gt;‘முக்கியமாக கல்வியை இவர்களுக்கு ஊட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு இவர்கள் கல்வி கற்பதற்கான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வன்னியில் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் கற்கின்ற சாதாரண மாணவர்கள் கூட ஒழுங்காகப் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அதற்கான வீட்டுச்சூழலும் இவர்களுக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இங்கே போதிய ஆசிரிய வளமும் இல்லை. இந்த நிலையில் இந்தப் பகுதிச் சிறார்கள் மிக மோசமான எதிர்காலத்தையே தங்கள் வாழ்வில் சந்திக்கும் அபாயமுண்டு. ஆகவே, இதைக் கவனத்திற் கொண்டே நாம் இந்த இளைய தலைமுறையைப் பொறுப்பெடுத்துப் பராமரிக்கும் பணியைச் செய்யத்தீர்மானித்தோம்’ என்கிறார் மேலும் இந்த நிர்வாகி.&lt;br /&gt;&lt;br /&gt;‘நடந்த போரினால், உழைப்பாளர்களையும் தலைமை உறுப்பினர்களையும் இழந்த நிலையிலேயே வன்னியில் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. இந்தக் குடும்பங்களினால், தங்களுடைய இளைய தலைமுறையைச் சீராகப் பராமரிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமல்ல, இன்னும் இந்தப் பகுதிகளுக்கு நல்ல வீதிகள் இல்லை. மின்சாரம் இல்லை. தொடர்பாடல் வசதிகள் இல்லை. இந்த மாதிரியான பற்றாக்குறைகள் எல்லாம் இளைய தலைமுறையையே அதிகமாகப் பாதிக்கிறது. ஏனெனில் இவர்களே எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுடைய எதிர்காலத்துக்கான தயாரிப்புகளை, ஆற்றல் மேம்பாடுகளை இவர்களுக்கு இப்போதே செய்யவில்லை என்றால், இந்தத் தலைமுறையினர் நிச்சயமாக நாளை சீரழிந்து போகும் நிலையே ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கான பாதுகாப்புத் தொடக்கம், கல்வி மற்றும் இதர அடிப்படைத் தேவைகளை உருவாக்கிக் கொடுப்பதே இன்றைய முக்கியமான மனிதாபிமானப் பணியாகும். அதுவே மிகச் சிறந்த சேவையாகவும் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் செய்வதே பாதிக்கப்பட்ட சமூகத்துக்கான அரசியற் செயற்பாடாகவும் இருக்கும்’ என வன்னியில் உள்ள மூத்த ஆசியரியர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;‘போருக்காகவும் விடுதலைப் போராட்டத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஒரு பிரதேசத்தின் மக்கள் தங்கள் சக்திக்கு மீறி, அளவுக்கதிகமான விலைகளைக் கொடுத்ததன் விளைவே இந்த அநாதரவான நிலைக்குக் காரணம்’ என்று துக்கப்படுகிறார் வன்னியிலுள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு நிலையில், அன்பு இல்லைத்தைப்போல, பெண் சிறார்களுக்கான இன்னொரு இல்லத்தை – ‘பாரதி இல்லம்’ என்ற பெயரில் கடந்த வாரம் ஆரம்பித்திருக்கிறார்கள் அன்பு இல்லத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினர். இந்த இரண்டு இல்லங்களையும் வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனமே மையமாக நின்று பராமரிக்கிறது.&lt;br /&gt;இந்தப் பாரதி இல்லம் முன்னர் - போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் இயங்கியது. பின்னர் செயலிழந்திருந்தது. இப்பொழுது இந்த இல்லம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், முன்னரை விட இப்போதே இந்த இல்லத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதையும் விட, இளைய தலைமுறைப் பிள்ளைகளுக்கான ஆதரிப்பு மையங்களின் தேவைகள் அதிகமாக உள்ளன என்பதே புரிதலுக்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர், அதிகமான தொண்டு நிறுவனங்களும் தொண்டுப் பணியாளர்களும் மனிதாபிமான அடிப்படையில் அந்த நாடுகளில் பெருகியதைப் போல ஒரு நிலை ஈழத்தமிழ்ச் சமூகத்திலும் உருவாகியிருக்க வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், துரதிரஷ்டவசமாக அப்படியான பொது அமைப்புகள் எதுவும் மனிதாபிமான அடிப்படையில் உருவாகியதாக இல்லை. உருவாகிய அமைப்புகளைப் பற்றிய குறைகளைப் பேசுவதிலும் அவற்றைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதிலும் இருக்கின்ற ஆர்வம் பாதிப்புக்குள்ளாகிய மக்களின் நலனில் இருக்கவில்லை.&lt;br /&gt;இது கண்டிக்கப்பட வேண்டி ஒரு செயலாகும். திருத்தப்படவேண்டி ஒரு முக்கிய குறைபாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு எரியும்போது அதை அணைப்பதற்குப் பதிலாக அது எரிவதைப் பற்றிய விமர்சனங்களைச் செய்வதும், அது எரிவதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வதும் குற்றஞ்சாட்டுவதும் பொருத்தமானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டுமானால், வீட்டைப் பாதுகாத்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்கலாம். அப்போது வீடும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான தகுதியும் கிடைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு புரிதல் நிலையே இன்று தமிழ்ச் சூழலுக்கு அவசியமாக உள்ளது. இதுவே இன்றைய அவசியமான அரசியற் பணியாகவும் இருக்கிறது.&lt;br /&gt;இந்த இளைய சமூகத்தினரே நாளைய பிரஜைகளாக வளரப் போகிறார்கள். இன்று இவர்களை யாரும் கவனிக்க வில்லை என்றால், நாளை இவர்கள் சீரழிந்த நிலையில் காணப்படுவர். அல்லது இன்றைய நிலையில் - உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அந்த உதவியைச் செய்யாததையிட்ட தரப்பினர் மீதான வன்மத்தோடே இவர்கள் வளருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதிர்காலத்தில் வன்முறைச் சமூகமொன்றை நாம் எதிர்கொள்வதற்கான அடிப்படையையே ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, ‘காலத்திற் செய்யப்படும் உதவி, சிறிதெனினும் ஞாலனத்தால் மானப் பெரிது’ என்ற வள்ளுவரின் அறவாக்கினை, அரசியல் வாக்கினை, மனிதாபிமான வாக்கினை மனங்கொள்ளவேண்டும் நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வளரும் பயிர்களுக்கு நீர்வார்ப்பது பயிரை வளர்ப்பது மட்டுல்ல, சமூகத்துக்கான விளைச்சலைக் காண்பதற்கான ஒரு அருஞ்செயலாகுமல்லவா! அதுதான் அறிவியற் செயற்பாடுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் இதுவும் நமது அரசியற் பணிதான். இன்னொரு வகையில் இது அறப்பணி. மனிதாபிமானப்பணி. உரிமையான பணி. இதையெல்லாம் விட்டு விட்டு போலித்தனமாகப் தேசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கவனத்தைத் திசை திருப்புவது என்பது, உண்மை நிலைமையை மறைக்கும் தந்திரோபாயமாகவே எதிர்காலத்திற் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்களின் விளைச்சல்களும் தவறுகளின் பெருக்கங்களும் எப்போதும் பின்னடைவுகளையும் உட்பிளவுகளையுமே உருவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இப்போது நாம் தவறுகளைத் திருத்திக் கொண்டு. காலப்பணிகளைச் செய்வோம். இல்லையெனில் இந்தத் தவறை வரலாறு மன்னிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-1533680435134108425?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/1533680435134108425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/1533680435134108425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/1533680435134108425'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_09.html' title='சொல்லும் பொருளும் மனமும் அருள்வீர்!'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YR4b307MOn0/TwuwN95T_jI/AAAAAAAAALE/068WXvdYd_c/s72-c/download+%25283%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-5516091276090246443</id><published>2012-01-08T20:42:00.000-08:00</published><updated>2012-01-08T20:42:27.324-08:00</updated><title type='text'>நோக்கங்கள் சிதையும் குடியேற்றங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-eLGe7DdZAAw/TwpvK2O39iI/AAAAAAAAAKk/nsutFbPilJg/s1600/photo4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-eLGe7DdZAAw/TwpvK2O39iI/AAAAAAAAAKk/nsutFbPilJg/s1600/photo4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அரசியற் பிரச்சினைகளில் முக்கியமானது, குடியேற்றத்திட்டங்கள் தொடர்பானவை. பிரச்சினைகளின் உருவாக்கத்திலும் குடியேற்றங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. இப்போது பிரச்சினைகளைத் தீர்ப்பதைக் குறித்துப் பேசும்போதும் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, குடியேற்றங்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் பிரச்சினைதான் என்ற மனப்பதிவே எல்லோரிடமும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மேற்சொன்ன குடியேற்றத்திட்டங்கள் திட்டமிடப்பட்ட – அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட – சிங்களக் குடியேற்றங்கள்.&lt;br /&gt;இதைவிட இன்னொரு வகையான குடியேற்றங்கள் வடக்கிலே நடந்துள்ளன. அந்தக் குடியேற்றங்களின் கதையும் நிலையும் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கிலே - வன்னிப் பிரதேசத்திலே - கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த குடியேற்றத்திட்டங்களுக்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட காணியில்லாப் பிரச்சினைக்கும் தொழில் வாய்ப்புப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக வன்னிப் பிரதேசத்தில் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. (படித்த வாலிபர் திட்டம், மத்திய வகுப்புத்திட்டம், படித்த மகளிர் திட்டம், கமக்காரர் திட்டம் என்று இந்தத் திட்டங்களுக்கான பெயர்களே சூட்டப்பட்டுத்தான் இந்தக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இந்த அடிப்படைகளில்தான் காணிப் பகிர்வும் நடந்தது).&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் வன்னிப்பகுதியில் ஏற்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பாக விவசாயச் செய்கையை வழங்குவதற்காகவும் காணியற்றோருக்கான காணிகளை வழங்குவதற்காகவும் என்ற மூன்று பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சுட்டப்பட்ட இந்த மூன்று காரணங்களும் ஏதோவகைகளில் ஏற்புடையதாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒரு காரணமோ அல்லது இரண்டு காரணங்களோ அல்லது இந்த மூன்றுக்கும் அப்பால் இன்னும் பல காரணங்களோ ஏற்புடையனவாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என்னதானிருந்தாலும் வன்னிப் பகுதிக் குடியேற்றங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது விவசாயச் செய்கையாகும். வன்னியின் மண்வளமும் நீர்வளமும் விவசாயத்துக்கே அதிக சாத்தியங்களைக் கொண்டன. வன்னியின் பூர்வீக அடிப்படையும் விவசாயத்தையே மையப்படுத்தியது. வன்னியர்களின் பிரதான தொழிலும் மையப் பொருளாதாரமும் விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இந்த விவசாயச் செய்கையை மையப்படுத்தியே குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பின்னாட்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களும் அமைந்தன. அதற்கமையவே குளங்களும் நீர்ப்பாசன ஏற்பாடுகளும் பிற கட்டுமானங்களும் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;காணிப்பங்கீடுகள் கூட விவசாயச் செய்கையை மையப்படுத்தி – அதற்கேற்றவாறே வழங்கப்பட்டன. விவசாயச் செய்கையை மையப்படுத்தியே பிரதானமாக, மேட்டு நீர்ப்பாசன (&lt;span style="font-family: Times, 'Times New Roman', serif;"&gt;Lift irrication )&amp;nbsp;&lt;/span&gt;வசதிகூட செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நீர்ப்பாசன வசதியில்லாத காணிகளில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. சேனைப் பயிர்ச்செய்கைக்கேற்பவே காணியின் அளவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. அதாவது, மேற்கொள்கின்ற பயிர்ச்செய்கையின் தன்மைக்கு ஏற்றமாதிரியே அவரவர்களுக்கான காணிகளின் தொகையும் அமைந்தது. அதேவேளை, காணிகள் அமைந்த இடமும் இந்த அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைச் சரியாகச் சொன்னால், அந்தந்தப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றவாறே காணிகள் தெரிவு செய்யப்பட்டன. அந்த அடிப்படையிலேயே அவை பகிர்ந்தளிக்கப்பட்டன@ பங்கீடு செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சுpல திட்டங்களில் நெற்செய்கை பிரதானப்படுத்தப்பட்டது. ஆகவே, அதற்கேற்றவாறு காணிப் பங்கீட்டின் அளவு அமைந்தது. சில திட்டங்களில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை மையப்படுத்தப்பட்டது. எனவே, அதற்கமைய காணித் தெரிவும் வழங்கலும் அமைந்தன. சில திட்டங்களில் சேனைப் பயிர்ச்செய்கைக்கான காணிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இந்தத் திட்டங்களின் கீழ் பயிரிடுகையைச் செய்வதன்மூலமாக இவர்கள் தங்களின் வீட்டுக்கும் வருவாயைத் தேடிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, நாட்டின் தேவைக்கேற்ற உற்பத்தியை வழங்கி, நாட்டுக்கான உற்பத்திப் பங்களிப்பையும் பொருளாதாரப் பங்களிப்பையும் செய்தனர்.&lt;br /&gt;இவ்வாறான ஒரு பொருளாதாரப் பங்களிப்புக்கும் ஏற்பாட்டுக்குமாகவே குடியேற்றவாசிகளுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. திட்டமிடப்பட்ட வகையில் அதற்கமைவாகக் காரியங்களும் நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி சுமார் ஒரு இருபது தொடக்கம் நாற்பது ஆண்டுகாலம் இந்தக் காணிகளில் உரியவாறான பயிர்ச்செய்கைகள் செய்யப்பட்டன. அப்போது உழுந்தும் பயறும் நிலக்கடலையும் நெல்லும் எள்ளும் தாராளமாகவே விளைந்தன வன்னியில்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிரிடப்படும் போகத்தை ஒட்டி வன்னியில் உழுந்தும் பயறும் எள்ளும் நிலக்கடலையும் எல்லா ஊர்களிலும் எல்லா வீடுகளிலும் போதிய அளவுக்குக் கிடைத்தன. அப்போது சேனைகளில் பயிரிட்டவர்களுக்கும் புலவுகளில் உழுந்தையும் பயற்றையும் பயிரிட்டவர்களுக்கும் இந்த நினைவுகள் இதைப் படிக்கும்பொழுது மீள எழும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் துணுக்காய், மல்லாவி, முத்தையன்கட்டு, செட்டிகுளம், வவுனியா, நெடுங்கேணி போன்ற இடங்களில் மலிவாக உழுந்தையும் பயற்றையும் நிலக்கடலையையும் எள்ளையும் சோளத்தையும் வாங்கலாம்.&lt;br /&gt;கொழும்பிலிருந்தும் நாட்டின் பிற இடங்களில் இருந்தும் இந்த இடங்களுக்கு வியாபாரிகள் வந்து இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு செல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. ஒன்று போரின்காரணமான மாற்றங்கள். இதனால், விளைச்சல்களைச் செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் உருவாகின. அதையும் கடந்து விளைச்சலை மேற்கொண்டவர்கள் இருந்தாலும் அதன் வீதம் குறைவடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றங்கள். இந்த மாற்றங்களால், விலைநிர்ணயம் பெரும் பிரச்சினையாகியது. உற்பத்தியையும் விட விளைச்சலின் மூலமான வருவாய் குறைவாக இருந்தது. இதனால், உற்பத்தியின் வீதமும் உற்பத்தியாளர்களின் வீதமும் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் விட முக்கியமானது, பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளைக் குடியிருப்புக் காணிகளாகவும் குடியிருப்பை அடுத்து சந்தை, கடை, தொழிற் சாலைகள் என மாற்றிவருவதே.&lt;br /&gt;&lt;br /&gt;பயிர்ச் செய்கைக் காணிகளைக் குடியிருப்புக் காணிகளாக மாற்றிவரும் இந்த நிலைமை மிகப் பயங்கரமானது. இது சட்டவிரோதமானது. காணி வழங்கற் சட்டத்தின்படி பயிர்ச்செய்கைக் காணிகளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அப்படிச் சட்டவிரோதமான முறையில் அவற்றைப் பிறதேவைகளுக்காக வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கண்ணுக்குள் மண்ணைத்தூவி விட்டு எப்படியோ இந்தக் காணிகளை வேறு தேவைகளுக்கே மாற்றி விட்டனர் பலரும். ஏறக்குறைய முக்காற்பங்குக் காணிகள் இப்படி மாற்றப்பட்டு விட்டன. இன்னும் அப்படி மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் முன்னர் இந்தக் காணிகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்ட நோக்கங்கள் முற்றாகவே சிதைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உழுந்து விளைந்த புலவில் இப்போது வீடுகளும் கடைத்தொகுதிகளும். பயறு விதைக்கப்பட்ட சேனையில் ஆலைகளும் இயந்திரம் திருத்தும் இடங்களும். எள்ளு விதைக்கப்பட்ட இடங்களில் கடைகளும் தெருக்களும் என்று முற்றாகவே அந்தப் பிராந்தியங்கள் மாறிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சேனை என்றும் புலவு என்றும் சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் ஊர்மனைகளாகவும் சிறு பட்டினங்களாகவும் மாறிவிட்டன. காலமாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று யாரும் சொல்லக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிரச்சினை அதுவல்ல. உண்மையும் அதுவல்ல.&lt;br /&gt;மக்களின் பொருளாதார அடிப்படைகளும் தெரிவுகளும் மாறிவிட்டதே இதற்குப் பிரதான காரணம். அடுத்தது, கடந்த முப்பது ஆண்டுகளாக காணியற்றோருக்கான காணிப்பங்கீடுகள் வழங்கப்படாத காரணத்தினால், இருக்கின்ற காணிகளைப் பங்கீடு செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர். குடியிருப்புக்கான காணிகளைப் பெற முடியாத நிலையில் தம்மிடம் இருக்கின்ற காணிகளைக் குடியிருப்புகளாக மாற்ற வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டனர் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், விளைநிலங்கள் தொழில் மையங்களாகவும் வணிக வளாகங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன.&lt;br /&gt;இந்த நிலைமை முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காணப்பட்டது. அங்கே இருந்த ‘செம்பாட்டுத் தறை’ என்று சொல்லப்படும் வளங்கொழிக்கும் செம்மண் விளை நிலங்கள் குடியிருப்புக்காக மாற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையைத் தடுப்பதற்காகவே – விவசாயக் காணிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவே - யாழ்ப்பாண மக்களை வன்னியில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தின் தோட்டவெளிகள் - விளைநிலங்கள், பனந்தோப்புகள் எல்லாமே குடியிருப்புகளாகவும் தொழிற்பிரதேசங்களாகவும் கடைவளாகங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மேலும் அவை அவ்வாறே மாற்றப்பட்டும் வருகின்றன. ஏனென்றால், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாண மக்களுக்கான காணி வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அவர்கள் தங்களிடம் இருக்கின்ற காணிகளையே எல்லாவற்றுக்குமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, யாழ்ப்பாணத்தவர்களின் பொருளாதாரத் தெரிவுகளும் முறைகளும் மாறிவிட்டன.அவர்கள் இப்போது பெருமளவுக்கும் நுகர்ச்சிப் பொருளாதாரத்தையே பிரதானப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;இது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றால், அந்தப் பிரதேசத்தின் தனித்தன்மையையும் அடையாளத்தையும் மாற்றிச் சிதைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, முன்னர் யாழ்ப்பாணத்தில் கரணைக்கிழங்கு, வெங்காயம், மரவெள்ளிக்கிழங்கு, குரக்கன், புகையிலை, மிளகாய், இராசவள்ளிக்கிழங்கு &amp;nbsp;போன்ற பயிர்கள் சில பகுதிகளில் மிகப் பிரசித்தமான அளவுக்கு விளையும். அந்தந்தப் பிரதேச மண்ணின் மணத்தைப்போல இந்த விளைபொருட்களின் சுவையும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்கும்போது இந்தப் பொருட்களைப்பற்றிய நினைவுகளும் தனி அடையாளத்துக்குரிய நினைவையும் தகுதிப் பெறுமதியையும் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை இந்தப் பிரதேசத்தின் சூழல் அடையாளம், தொழில் முறை, பொருளாதார அடையாளம் எனப் பலவகைகளில் அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், குடியிருப்புகளாக இந்தப் பிரதேசங்கள் மாறும்போது இந்தப் பிரதேசத்தின் முகமாக இருந்த தனித்துவ அடையாளங்கள் குலைந்து போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே இன்று வன்னியில் விளைநிலங்களாக இருந்த இடங்களும் கால்நடைகள் வளர்க்கும் இடங்களாக இருந்த இடங்களும் மேய்ச்சற் தரைகளாக, நீர்நிலைகளாக, ஆற்றுப்படுகைகளாக இருந்த பகுதிகளும் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் ‘வன்னிப் பகுதியானது ஒரு பெரும் விவசாயப் பிரதேசம்’ என்றிருந்த அடையாளம் குலைந்து, சனங்களின் குடியிருப்புப் பிரதேசங்களாக மாறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்தப் பகுதியிலுள்ள மக்களின் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.&lt;br /&gt;இதைவிட, இந்தப் பிரதேசங்களின் தனித்துவ அடையாளங்களும் மாறிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;‘முன்னர் ஒரு காலம் வவுனியாவில் உழுந்து விதைப்பார்கள்’ என்று சொல்லும்போது அதை நம்புவதற்கு இப்பொழுது கடினமாக இருக்கிறது என்றால், இந்த அடையாளச் சிதைவு எந்தளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இiதைப்போல பல்வேறு பிரச்சினைகள், இன்று காணிப்பகிர்வின்மை தொடர்பாகவும் காணியற்ற நிலையினாலும் மாறியுள்ள பொருளாதாரப் போக்கினாலும் மக்களின் தெரிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் ஏற்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சிலவற்றுக்குச் சில அடிப்படைகள் உண்டு. விவசாயத்துக்குப் பொருத்தமான இடங்களில்தான் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடையை எங்கே வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். வீட்டை எங்கே வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அப்படி நினைத்த இடத்திலெல்லாம் பயிர்களைச் செய்கைபண்ண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே, இப்படி இந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினையாகிறது. விவசாயத்தை மையப்படுத்தி வழங்கப்பட்ட காணிகள், அந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினை. இந்த இழப்பு நிரந்தரமான இழப்பாகும். இது ஒரு அடிப்படைப் பிரச்சினை. இது ஒரு அரசியற் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக இப்போது அரசி தொடக்கம், உழுந்து, பயறு, நிலக்கடலை, எள்ளு என எல்லாமே வேறு இடங்களில் இருந்து – வெளியே இருந்து வரவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்களாதேஸில் இருந்து உழுந்து வருகிறது. இந்தியாவில் இருந்து நிலக்கடலையும் பருப்பும் பயறும் வருகிறது. போதாக்குறைக்கு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் அரிசி வருகிறது. ஜப்பானில் இருந்து வாகனங்களும் இலத்திரனியல் பொருட்களும் மட்டும் வரவில்லை, இலங்கைக்கு உணவுப் பொருட்களும் அங்கிருந்து எடுத்து வரப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, நாட்டிற்குத் தேவையான உற்பத்தியையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் காலம் போய், எல்லாற்றுக்கும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் நிலை இது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு மக்களுக்கான அரசியற் தீர்வை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப் போல, இன்று தமிழர்கள் தங்களின் பொருளாதாரத்தை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப்போல, தங்களுக்கான உற்பத்திகளையும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் காலம் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இது ஓர் வேரிழப்பு நிலையே! இந்த வேரிழப்பு நிச்சயமாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். வேரற்ற சமூகம் அடிப்படைகளற்ற நிலைக்குத் தள்ளப்படும். அடிப்படைகளில் தளர்வுகள் ஏற்படுவது ஆபத்தானது.&lt;br /&gt;இனப்பிரச்சினைக்கு நிகரானவை காணிப்பிரச்சினைகளும் குடியேற்றப் பிரச்சினைகளும். அவற்றில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;00&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2429901816222737404-5516091276090246443?l=naalupakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalupakkam.blogspot.com/feeds/5516091276090246443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/5516091276090246443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2429901816222737404/posts/default/5516091276090246443'/><link rel='alternate' type='text/html' href='http://naalupakkam.blogspot.com/2012/01/blog-post_08.html' title='நோக்கங்கள் சிதையும் குடியேற்றங்கள்'/><author><name>கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/03870302540309782170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/-YQD18EUa05s/T0pO71bdEZI/AAAAAAAAANE/lvhn148vGEA/s220/DSC09170%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-eLGe7DdZAAw/TwpvK2O39iI/AAAAAAAAAKk/nsutFbPilJg/s72-c/photo4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2429901816222737404.post-5223634367656320122</id><published>2012-01-05T06:26:00.000-08:00</published><updated>2012-01-05T06:26:49.540-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><title type='text'>ஊடகங்களின் பொறுப்புக் குறித்து...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-m5r49e1imrM/TwWyLvZ9VVI/AAAAAAAAAKc/WuJb1z_k9FQ/s1600/the_times_460.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="38" src="http://4.bp.blogspot.com/-m5r49e1imrM/TwWyLvZ9VVI/AAAAAAAAAKc/WuJb1z_k9FQ/s320/the_times_460.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இப்போது அரசியலையும் அரசியல்வாதிகளைப் பற்றியுமே எழுதுகிறார்கள். மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் அவர்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை’ என்று இலங்கையின் ஊடகங்களை அவதானித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் தொடர்ந்து உரையாடும்போது, ‘...இலங்கையின் பிரச்சினைகளும் தேவைகளும் ஏராளமாக இருக்கின்றன. மக்களுடைய பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;நாடு யுத்தத்திலிருந்து மீண்டாலும் யுத்தகாலப் பாதிப்புகளிலிருந்தும் யுத்தகால நிலைமைகளிலிருந்தும் இன்னும் மீளவில்லை.&lt;br /&gt;இது யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் மக்களைப் புதிதாகச் சிந்திக்க விடவில்லை. ஆகவேதான் அவர்கள் இன்னும் யுத்தத்துக்கு முன்னரும் யுத்தகாலத்திலும் சிந்தித்ததைப் போல நம்பிக்கையீனமாகச் சிந்திக்கிறார்கள். அல்லது யுத்தகால நினைவுகளின் தொடர்ச்சியாகச் சிந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களுடைய தேவைகளைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் அதிகமாக எழுதவேண்டும். அப்படி அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி எழுதி, உரியதரப்பினர்களின் &amp;nbsp;கவனத்துக்குட்படுத்தி, அவற்றுக்குத் தீர்வைக் காணும்போதே மாற்றங்கள் நிகழும்@ மக்களிடம் நம்பிக்கை பிறக்கும்’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊடகவியலாளரின் கூற்றுகள் நிச்சயம் கவனத்திற்குரியவையே.&lt;br /&gt;
